search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development project works"

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.
    • ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 5 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூடுதல் நுண் உரம் தயாரிக்கும் மையம்

    தூத்துக்குடி மாநகராட் சிக்கு சொந்தமான தருவைக் குளம் உரக்கிடங்கு மற்றும் ஜோதி நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான எந்திரங்கள் மற்றும் கூடுதல் நுண் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகளை ரூ.1 கோடியே 83.50 லட்சம் மதிப்பீட்டில் 15-வது நிதி குழு மானியம் 2023 -24 நிதியில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ரூ.60 லட்சத்தில் 3 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடம் அமைப்பதற்கு துறை சார்ந்த அனுமதி பெறப்பட்டுள்ளது. ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 5 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    சங்கரபேரி பகுதிகளில் தேங்கும் மழை நீரினை வெளியேற்ற செய்யும் வகையில் பெரிய பள்ளம் ஓடை வரைலான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1 2 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. 15-ம் நிதி குழு மானியம் 2022-23 ஆண்டு நிதியில் தூத்துக்குடி மாநகர பகுதியில் குடிநீர் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் என மொத்தம் 13 பணிகள் ரூ. 5 கோடியே 68 லட்சத்தில் மதிப்பீட்டில் மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுமதி பெறப்பட்டுள்ளது.

    சுத்திகரிப்பு நிலையம்

    மாநகராட்சி வல்லநாடு கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம், மாநகரில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றின் குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு இயக்குதல் நிர்வாகப் பணிகளுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தொகையுடன் கூடுதல் செலவினத் தொகை மொத்தம் ரூ. 59 லட்சம் அனுமதிக்கும் நடவடிக்கை,

    மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப்பட்ட அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் வணிக வளாக கடை ஒப்பந்தம் கோரியவர்களுக்கு உரிமம் வழங்குதல், வடக்கு மண்டலம் அம்பேத்கர் நகரில் ரூ. 28.87 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா சிறப்புகள் பராமரிப்புகள் செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்குகுழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் ,கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமிசுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன், ஹரி கணேஷ்,ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் உட்பட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், கரடிவாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • குருபிரசாந்த், செந்தில் வடிவேல்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதன்படி பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி நேரு நகர் ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை நீர் தேக்கதொட்டியையும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.69.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினையும், செம்மிபாளையம் பகுதியில்ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தையும், ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடத்தையும், இதேபோல பல்லடம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியில் ரூ.52.53 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப்பணிகளையும்,இதேபோல கரடிவாவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை பணிகள் எனமொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், கரடிவாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக கரடிவாவி ஊராட்சியில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் தேசிய திட்ட விளக்க பிரச்சார ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    . இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, செம்மிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஷிலா புண்ணியமூர்த்தி, கல்விக் குழு தலைவர் புண்ணியமூர்த்தி , மாணிக்காபுரம் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன்,மற்றும் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், உதவிப் பொறியாளர்கள் குருபிரசாந்த், செந்தில் வடிவேல்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் ரூ.50.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
    • முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

    பவானி

    பவானி தொட்டி–பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்வராயன் பாளையம் ராஜீவ் காந்தி நகரில் 6.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி, ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிட கட்டிடம் பராமரிப்பு பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி கோட்டை ஜீவா செட் அருகில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நீர் உந்து நிலையம் அமைத்து பைப்லைன் போடும் பணி, ஐஸ்வர்யா நகரில் ரூ.9.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாக்கடை கட்டுமான பணி, முனியப்பன் நகரில் ரூ.2.86 லட்சம் மதிப்பீட்டில் 5000 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் தண்ணீர் தொட்டி அமைத்து கூடுதல் பைப்லைன் அமைக்கும் பணி, ஓப்லி மில் பழைய காலணி பகுதியில் ரூ.2.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் போட்டு 2000 லிட்டர் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்தல் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், பவானி எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன் பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பவானி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தங்கவேலு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், தொட்டிபாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சொசைட்டி தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
    • ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் வாயி லாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்ப ணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ், ஆய்வு செய்தார். நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேவூர்- அகரம் சாலை ரூ.93.75 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கி.மீ. சாலை பணிகள் நடைபெறுவதையும், பூலாம்பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15.21 லட்சம் மதிப்பீட்டில் ஊர்குளம் புனரமைப்பு பணிகள் நடைபெறு வதையும், பூலாம்பாடி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.151.93 லட்சம் மதிப்பீட்டில் 3.17 கி.மீ. நீளத்திற்கு கலியமேடு - வரம்பனூர் சாலை பணிகள் நடை பெறுவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் அவ்ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18.35 லட்சம் மதிப்பீட்டில் காளிமாமேடு நடுஏரி ஒடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து வேப்பூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பழைய காலணி - ஒட்டஞ்சாலை வாய்க்காலில் நீர்உறிஞ்சி குழி வெட்டும் பணிகள் நடை பெறுவதை யும், சிறுநெசலூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.84 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கப்பட்டு ள்ளதையும் பார்வையி ட்டார்.

    அவ்ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.48 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17.5 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.71.98 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கிலோ மீட்டர் நீளத்திற்கு கீழக்குறிச்சி - ஜாயேந்தல் சாலை பணிகள் நடை பெறுவதையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    ஐவதுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குழந்தையே பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும், நகர் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிகாமணி, ஜெயகுமாரி , உதவி பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
    • பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம் பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றித்திற்குட் பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.106.36 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி பின்புறம் தேசிய நெடுஞ் சாலையிலிருந்து துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரையிலான சாலை பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக் டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தினை பார் வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயிற்சி பெறுவர் களின் எண்ணிக்கை, அவர் களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, பட்டம் புதூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் உறிஞ்சிக்குழியுடன் வடி கால் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

    மேலும், கோட்டநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ. 27.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடங் களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு பயி லும் மாணவர்களுடன் கலந் துரையாடினார்.

    பின்னர், ராமக்குடும்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடத்தை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளாச்சி முகமை) தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மின் நகர் மற்றும் ஆஞ்சிநேயா நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அப்பகுதி மக்களிடம் பூங்காவை நல்ல முறையில் பயன்படுத்தி க்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மொடச்சூர் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.173 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணி மற்றும் சக்தி மெயின் ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.699.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி அங்காடி கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். கோபிசெட்டி பாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய ஆஸ்பத்திரி சாலை பகுதி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.194.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையப் பணியினையும்,

    தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நகர் பகுதியில் ரூ.30.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை மேம்பாட்டுப் பணியையும், கம்பர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணி மற்றும் சாலையின் தரத்தினையும் என மொத்தம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி நல்லகவுண்டன்பாளையம் இந்திரா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளு க்குளி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 25.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பணியினையும், அளுக்குளி கிராம சேவை மையத்தையும்,

    பார்வையிட்டு மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பா டுகள் குறித்து கேட்டறிந்ததுடன் மகளிர் சுய உதவிக் குழு மூலம், சுழல் நிதி கடன் ரூ.50 ஆயிரம் பெற்று பாக்கு மட்டை தயாரிக்கும் குழுக்க ளின் பணியினையும் என பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ரூ.51.87 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலிங்கியம் ஊராட்சி மல்லிகை நகரில், கோபிசெட்டிபாளையம் வட்டார அளவிலான நர்சரியில் புங்கமரம், பூவரசு, வேப்பமரம், முருங்கை, பப்பாளி, பாதானி, சீதாமரம், மாதுளை, எலுமிச்சை, நாவல், கொய்யா உள்ளிட்ட செடிகள் பதியம் செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
    • இத்திட்டப்பணிகளை குறித்து நேரில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், சாலியமங்களம் ஊராட்சிமன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணைதலைவர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு, ஒப்பந்ததாரர் சண்.சரவணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • குன்னம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13.40 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது
    • வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,


    குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ. 13 கோடி 40 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். காரை கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லுயிர் புதைபடிமங்களை பாதுகாக்கும் வகையில், தொல்லுயிர் புதை படிமங்கள் பூங்காவைச் சுற்றி ரூ. 7 கோடியே 89 லட்சம் செலவில் முள்வேலி அமைத்தல், அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம், நாரணமங்கலம் முதல் சிறுகன்பூர் வரை ரூ.1கோடியே 51 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியையும், மருதையான் கோவில் முதல் கீழமாத்தூர் வரை ரூ.76 லட்சத்து 15 ஆயிரம் செலவிலும், கொளத்துார் முதல் அருணகிரிமங்கலம் வரை ரூ.1 கோடியே 61 லட்சம் செலவிலும், மேலமாத்தூர் முதல் இலந்தங்குழி வரை ரூ.1 கோடி 62 லட்சம் செலவிலும், மொத்தம் ரூ.5 கோடி50 லட்சம் செவில சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் செய்தியாளிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கப்படும் அறிவித்ததன் பேரில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை கிராமத்தில் தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றி முள்வேலி அமைத்தல் மற்றும் அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம், மேல்நிலைத் தொட்டி கட்டுதல் பணி உள்ளிட்ட பணிகள் ரூ.7.89 கோடியில் ெதாடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சியகம் 436 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாவலர் அறை மற்றும் கண்காணிப்பு கோபுரம் 269 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாப்பு முள் வேலி 16 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக கடல் கொண்ட பூமியாக இருந்த பெரம்பலூர் மாவட்டம் தற்போது தொல்லுயிர் எச்சங்களின் பெரிய நிலப்பரப்பாக திகழ்கிறது. தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் புவியியல் ரீதியாக இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இந்த பணி பெரிய முன்னெடுப்பாக அமையும்.

    அருகிலுள்ள சாத்தனூர் கல்மரப் பூங்கா தற்போது சுற்றுலா தளமாக மாறி வருவதை போல எதிர்காலத்தில் இந்த காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவும் சுற்றுலா தளமாக அமையும். எதிர்காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது உலகளவிலிருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு ஆய்வு செய்யும் வகையில் பயன்படுவதோடு சுற்றுலா தலமாகவும் மேம்படுத்தப்படும் என்றார். நிகழ்ச்சியில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநர், துணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ஆய்வு
    • ஊரக வளர்ச்சி துறை‌ அதிகாரிகள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் உள்ள முகுந்தராயபுரம் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், லாலாப்பேட்டை ஊராட்சியில் புதிய கட்டிடம், மருதம்பாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட பணி ஆகியவற்றையும், பள்ளேரி, கொண்டகுப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நிலுவையில் இருந்து வருவதையும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரடியாக பார்வையிட்டு பணிகள் தொடங்காமல் உள்ளது குறித்து கேட்டறிந்து வருகிற மே 10-ந் தேதிக்குள் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கல்புதூர் ஊராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை அடுத்த 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    கல்மேல்குப்பம் ஊராட்சியில் ரூ.30.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டடப் பணிகள் அடுத்து இரண்டு வாரத்திற்குள் முடிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாணாபாடி ஊராட்சியில் ரூ.11.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் செட்டித்தாங்கல் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிட பணிகளையும், வன்னிவேடு ஊராட்சியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.

    இப்பணிகள் அனைத்தையும் கண்காணித்து விரைவாகவும் தரமாகவும் நடைபெறுவது உறுதி செய்திட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஒன்றிய பொறியாளர் முனுசாமி உள்பட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்களின் முக்கிய தேவைகளுக்கான திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறையில் மூலம் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நடப்பாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், எம்.பி. நிதி, எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். அந்தந்த ஆண்டிற்குரிய ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் அந்த நிதியாண்டிலேயே முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும். பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் பயனாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களின் முக்கிய தேவைகளுக்கான திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதில் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்ட அறிக்கை தயார் செய்ய அறிவுரை
    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார்.

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி பஸ் நிலையம் அருகில் கலைஞர் நகரில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமுதாய கழிப்பிடம் மறுசீரமைத்தல் பணியினை ஆய்வு செய்த அவர் வருகிற 20-ந் தேதிக்குள் பணியினை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

    திருப்பாற்கடல் மயானத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.1.31 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டும்பணியினை பார்வையிட்ட அவர் பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூறினார்.

    மேலும் தகன மேடை அருகில் பயோ கேஸ் பிளான்ட் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து பணி மேற்கொள்ள வும் அறிவுறுத்தினார்கள்.

    தொடர்ந்து, காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு மையத்தினை ஆய்வு செய்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் உரம் தயாரித்தல் பணி போன்ற திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் உடனிருந்தார்.

    • விக்கிரவாண்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • புதிதாக கட்டப்படும் பொது கழிவறை கட்டடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி பேரூராட்சியில் கலெக்டர் மோகன் வருகை தந்து ரூ.4 கோடியே 10லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியையும், 15 வது மான்ய நிதிக்குழு திட்டத்தில் ரூ. 20லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வரும் புதுக்குளம் சீரமைப்பு பணி, கால்நடை மருத்துவ மனை வளாகம் மற்றும் ரூபாய் 7.75 லட்சம் மதிப்பில் கக்கன் நகரில் புதிதாக கட்டப்டும் பொது கழிவறை கட்டடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    வேளாண்மை இணை இயக்குனர் ரமணன்,உதவி செயற்பொறியாள ர்ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் , தாசில்தார் இளவரசன், செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலைஉதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×