search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளிமந்தயத்தில் ரூ.170 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது
    X

    அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்த பூமி பூைஜயில் கலந்து கொண்டவர்கள்.

    கள்ளிமந்தயத்தில் ரூ.170 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது

    • கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.175.35 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் விழா நடைபெற்றது.
    • விழாவில் அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை வகித்து பூமி பூஜையில் கலந்து கொண்டு பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.175.35 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம், தேவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தில் ரூ 99.45 மதிப்பிலான கூடுதல் கட்டிடம், மேலும் தேவத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கட்டிடத்திற்கு ரூ. 18 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை வகித்து பூமி பூஜையில் கலந்து கொண்டு பின்னர் பேசியதாவது, ஒட்டன்சத்திரம் தாலுகா அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய 4 மாடி அளவில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கொ.கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவப் பணியாளர் குடியிருப்பு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டு சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் உள்பட பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்-அைமச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் பழனி துணை இயக்குனர் (சுகாதாரம்) அனிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் பொன்ராஜ், வடக்கு செயலாளர் ஜோதீஸ்வரன், கிழக்கு ஒன்றிய அய்யம்மாள், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் தங்கம், காயத்ரி தேவி தர்மராஜன், அரசு அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×