என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
- பணியாளர்களுக்கு தேவராஜி எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்களுடன் தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தேவராஜி கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர், துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் எடுக்கப்பட்ட பணிகள் கள ஆய்வுக்கும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலக பணியாளர்களுடன் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
தமிழக முதல்வர் அறிவிக்கும் அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும், குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கலந்தாலோசிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்