search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்களின் முக்கிய தேவைகளுக்கான திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறையில் மூலம் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நடப்பாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், எம்.பி. நிதி, எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். அந்தந்த ஆண்டிற்குரிய ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் அந்த நிதியாண்டிலேயே முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும். பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் பயனாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களின் முக்கிய தேவைகளுக்கான திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதில் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×