search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
    X

    ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற காட்சி. 

    திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

    • உடுமலைப்பேட்டை நகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், கலெக்டர் வினீத் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    உடுமலைப்பேட்டை நகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மேல்நிலைத்தொட்டி அமைக்க அரசுக்குபரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை நகராட்சி நிர்வாகம் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    2022-2023 ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செய்துமுடித்தால் தான் அடுத்த பணிகளை செய்து முடிக்க வாய்ப்புகளாக அமையும்.

    உடுமலைப்பேட்டை நகராட்சியின் சார்பாக வடிகால் அமைக்கும் பணிகளை காலதாமதம் ஏற்படாமல் விரைந்து முடிக்கவும், மேலும், மின்சார வாரியத்தின் சார்பில்பழுதடைந்த மின்கம்பிகளை எல்லாம் மாற்றியமைக்கவும், நெடுஞ்சாலைத் துறையின்சார்பில் பழுதடைந்த சாலைகளை எல்லாம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கோடை காலமாக இருப்பதால் ஏற்கனவே வழங்கப்படுகின்ற குடிநீரினை எந்தவித தடைகளும் இன்றி பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் . மேலும் வருகின்ற மானிய கோரிக்கையில் நிதிநிலையறிக்கை சமர்பித்தவுடன்தமிழ்நாடு முதலமைச்சர் நமது மாவட்டத்திற்கு வருகை புரிந்து நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். அதற்குள் நமது மாவட்டத்தில் முடிக்க வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களையும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும்கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன், உடுமலைப்பேட்டை நகராட்சி தலைவர் மு.மத்தின், மண்டலஇணை இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) வி.ராஜன், உடுமலைப்பேட்டை நகராட்சிஆணையாளர் சத்யநாதன், மண்டலப்பொறியாளர் பாலச்சந்திரன், முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும்அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×