search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "distribution"

    • பிரசாரம் முடிந்த பிறகு தன்னுடன் வந்தவர்களுக்கு வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
    • தேர்தல் பிரசாரத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.300 வழங்கிய வேட்பாளர்கள் தற்போது 500 ரூபாய் வழங்கி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வாக்கு சேகரிப்பின் போது தங்களது பலத்தை காட்ட பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்கின்றனர்.

    நந்தியாலா மாவட்டம் நந்தி கோட்கூரில் நேற்று அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தன்னுடன் தேர்தல் பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். பிரசாரம் முடிந்த பிறகு தன்னுடன் வந்தவர்களுக்கு வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

    வேட்பாளர் கொடுத்த ரூபாய் நோட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்தபோது அது கள்ளநோட்டு என தெரிய வந்தது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வேட்பாளரிடம் கேட்டபோது நான் ஒரிஜினல் நோட்டுகளை தான் கொடுத்தேன் என கூறினார்.

    மேலும் சிலர் வேட்பாளர் கொடுத்தது கள்ள நோட்டு என தெரியாமல் கடையில் கொடுத்து மாற்றினர். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆந்திராவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவருவதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்களை தாராளமாக விநியோகம் செய்து வருகின்றனர்.

    தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.300 வழங்கிய வேட்பாளர்கள் தற்போது 500 ரூபாய் வழங்கி வருகின்றனர்.

    • கிராமப்புறங்கள் உட்பட கடைமுனை நுகர்வோர் வரை அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது.
    • தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படவில்லை என்றும், இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

    "தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் 12 மணி நேரமும், பிற பகுதிகளில் 9 மணி நேரமும் மட்டும்தான் மும்முனை மின்சாரம் என்று இருந்த நிலையினை மாற்றி, உழவர்களின் நலனை எப்பொழுதும் முதன்மையாக கருதக்கூடிய இந்த அரசு கடந்த 2021-ல் பதவியேற்றது முதல், நாள் ஒன்றிற்கு 12 முதல் 16 மணி நேரம் வரை தமிழ்நாடு முழுவதும் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது.

    விவசாயிகளுக்கு தேவையான மும்முனை மின்சாரத்தின் நேரத்தினை நீட்டி வழங்கியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு விவசாய பெருமக்களின் பெருங்கனவாக இருந்து வந்த விவசாய மின் இணைப்பு உடனடியாக வழங்கிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக, கடந்த 2 ஆண்டுகளில், 1,50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு அளப்பரிய சாதனையை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான, விவசாய மின்இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மின்சார பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின்சார இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இம்மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் உள்ள உயரழுத்த மின் கட்டமைப்புகளில் அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படுகிறது.


    இத்தகைய இடையூறுகளை முற்றிலுமாக நிவர்த்தி செய்து, டெல்டா மாவட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இன்னும் அதிகப்படியான மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிட தேவையான அனைத்து மேம்பாட்டு பணிகளும், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் இடர்களைக் களையும் பொருட்டு, ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் ஜூலை 2021-ல் வகுக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5,705 இடங்களில் உள்ள மின்மாற்றிகளில் மின்சுமை அதிகமாக உள்ளது எனவும் 3,200 இடங்களில் மின்மாற்றிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாகவும் மொத்தம் 8,905 இடங்களில் கண்டறியப்பட்டது.

    8,905 கூடுதல் மின்மாற்றிகள் நிறுவும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டப் பணிகள் தமிழக முதல்-அமைச்சரால் ஆகஸ்ட் 2021-ல் துவக்கி வைக்கப்பட்டது. வெவ்வேறு திறனுள்ள விநியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டு, மின்பளுக்கள் பகிர்வு செய்யப்பட்டு ரூபாய் 743.86 கோடி மதிப்பீட்டில் மின்கட்டமைப்புகள் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் 652 எம்.வி.ஏ கூடுதல் மின்திறன் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அதிக மின்சுமையுள்ள 5,705 மின்மாற்றிகளில் மின்பளுக்கள் பகுப்பு செய்யப்பட்டதன் மூலம் அப்பகுதியிலுள்ள அனைத்து மின்மாற்றிகளிலும் இணைக்கப்பட்டுள்ள மின்பளுக்கள் அவற்றின் அனுமதிக்கப்பட்ட திறன் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு அனைவருக்கும் ஒரே சீராக தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்வதற்கு கூடுதலாக 3,200 புதிய மின்மாற்றிகள் நிறுவியதன் மூலம் தாழ்வழுத்த மின்பாதையின் நீளம் குறைந்து மின்னிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்பொழுது, கிராமப்புறங்கள் உட்பட கடைமுனை நுகர்வோர் வரை அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது.

    பொதுவாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான மின்சாரத்தினை வழங்குவதற்கென 24 மணி நேரமும் மும்முனையில் இயங்கக்கூடிய பிரத்தியேகமான மின் பாதையின் வாயிலாக தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கடந்த மூன்று ஆண்டுகளாக, மின்சாரத்துறையில் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளின் பயனாக, தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்கள் கொண்டு 24 மணிநேரமும் இயங்கி வருகிறது."

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    • 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது.
    • வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன

    சென்னை:

    சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர் கொள்ளும் வகையில் பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யபட்டுள்ள ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற நலவாாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது.

    மேலும் சுகாதாரப் பணி யாளர்கள் மூலம் 75 பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இன்று (திங்கட் கிழமை) முதல் வழங்கப்படுகிறது. கோடை வெயிலில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபப்படுகிறது. தேவையின் அடிப்படையில் கடற்கரை உள்ளிட்ட இடங்க ளில் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. எனவே அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் திறந்த இடங்களில் பணியாற்றுவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மின் தொடர்பான புகார்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் மின்ன கத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்மர் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
    • இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 பணமும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இந்த துரித தொகுப்பை 10-ந் தேதி தொடங்கி வைத்த அதே நாளில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

    2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் டோக்கன் பெறாத 40லட்சம் பேர் 14-ந் தேதி ரேசன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டது

    இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அத்தியாவசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஆவின் பால் அதிக விலைக்கு விற்பது குறித்த புகாரை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை:

    'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை யில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.

    சென்னையில் ஆவின் பாலை பொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.

    ஆனால் தொடர் மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் வினியோகம் மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பால் வினியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, "ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அரை லிட்டர் பால் 100 ரூபாய்க்கு விற்றனர். மக்களின் தேவையை தெரிந்து கொண்டு 4 மடங்கு விலையை உயர்த்தி விற்றனர்.

    எனவே, அத்தியாவசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    ஆவின் பால் வினியோகம் செய்யக்கூடிய லாரி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகனங்களை நேற்று இயக்கவில்லை. இதனால் மாநகர பஸ்கள் மூலம் ஆவின் பால் மாதவரம் பகுதியில் வினியோகம் செய்யப்பட்டது.

    ஆவின் பால் இன்றும் பல இடங்களில் தாமதமாக சப்ளை செய்யப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் பால் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர்.

    இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, "அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால் பால் விநியோகம் பாதித்தது. இன்று ஆவின் வினியோகம் சீராகி விடும்" என்றனர்.

    ஆவின் பால் அதிக விலைக்கு விற்பது குறித்த புகாரை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
    • உள்ளூர் நீர் ஆதாரத்தினை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருவாரூர் ஊரக குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை-கன்னியா குமரி தொழிற்தட சாைல விரிவாக்கத்தினால் கும்பகோணம்-மன்னார்கு டி சாலையில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான நீர் உந்து குழாயினை மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்து குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும்.

    எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்து க்கொ ள்ளவும், உள்ளூர் நீர் ஆதா ரத்தினை பய ன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ள ப்ப டுகி றார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஊத்துக்குளி

    ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், மு.தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோம் தடை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், பெருமாகவுண்டன்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதூர், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்ன கோடாங்கிபாளையம் மற்றும் சாமளாபுரம் பகுதியில் உள்ள சூரியா நகர், ராம்நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜன் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் கம்பிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.

    தாராபுரம், அக்.11-

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரத்தை அடுத்த செலாம் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் கம்பிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம் பாளையம், தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், கொட்டமுத்தம்பாளையம், தேவநல்லூர், சந்தராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கன்னாபுரம், ரஞ்சிதா பாளையம், வட்டமலை புதூர் மற்றும் இதர பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அலகுமலை, பூமலூர் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாரள் தெரிவித்தார்.

    திருப்பூர்

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன், சோமனூர் வட்டார செயற்பொறியாளர் சபரிராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திருப்பூர் அலகுமலை, பூமலூர் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான் வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபுநகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர், கோவில்வழி, மங்கலம், சுல்தான்பேட்டை,இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம்,செட்டிப்பாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிப்பாளையம், சின்னப்புத்தூர், பெரியப்புத்தூர், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிப்பாளையம், புக்கிலிபாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூர், கணக்கம்பாளையம், பெருமாபாளையம், பள்ளிபாளையம், கிடாத்துரைபுதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை 9-ந்தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    தாராபுரம்:

    தாராபுரம் மின் வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 9ந் தேதி இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    இதனால் வடுகபட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான மூக்குத்தரிச்சான்பாளையம், குமாரபாளையம், சுள்ளப்பெரிக்கா பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, வடுகபட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டணம் அது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×