search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dealers"

    • பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும்.
    • மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேந்தி பூ தற்போது 80 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 240 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் குண்டு மல்லி 800 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்தனர். 2 நாட்கள் தொடர்ந்து விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    • சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
    • அனைத்து மின் சாதனங்களையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் நாம்கோ தொண்டு நிறுவனம், இந்திய அரசு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புதுடெல்லி ஜி.ஐ.இசர்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து திருத்துறை ப்பூண்டியில் சாலை ஓரங்களில் மின் இணைப்பு இன்றி தொழில் செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு சோலார் மின் சாதனம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம்கோ இயக்குனர் ஜீவானந்தம் சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து எடுத்து ரைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு சாலையோர ஏழை வியாபாரி களுக்கு சோலார் மின் சாதனம் வழங்கி பேசுகையில்:-

    நாம் பயன்படுத்தும் அனைத்து மின் சாதனங்க ளையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும். நாம்கோ தொண்டு நிறுவனம் சோலார் விழிப்புணர்வு பணியை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.

    இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் பயனாளிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாம்கோ பணியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

    • செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லு படியாகும்.
    • கரென்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் எளிதாக 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம்.

    திருப்பூர் :

    2000ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெறும்அறிவிப்பு வெளியானதில் இருந்து பெட்ரோல் பங்க்குகள், ஷாப்பிங் மால்கள், மருந்துக்கடைகளில் இந்நோட்டுக்களை பெற்று க்கொள்ளாமல் திருப்பி அனுப்புவது தொடர்கிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லு படியாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து ள்ளதால் இந்நோட்டுக்களை மக்கள்அதுவரை பயன்படுத்தலாம்.ஆனால் அதற்கு முன்னதாகவே இந்நோட்டுகளை பெற்றுக்கொள்ளாமல் வர்த்தகர்களும், வியாபாரிகளும் மறுத்து வருகின்றனர். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் பங்க்குகளில் 2,000 ரூபாயை பெற்றுக்கொள்வதில்லை. 500 ரூபாய் நோட்டு க்களை மட்டும் பெற்றுக்கொ ள்கின்றனர்.அதே போல் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங்மால்கள், மொத்த மளிகை வியாபாரிகள், மருந்துக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பெற்றுக்கொள்வதில்லை. இதனால் இருக்கும் பணத்தை தேவைக்கு கூட செலவிட முடியாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

    இது குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது:- 2,000 ரூபாய் நோட்டு க்களை பெற்றுக்கொள்ள முடியாது என்று வாடி க்கையாளர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வர்த்தக ரீதியான கரென்ட் அக்கவு ன்ட் வைத்திரு ப்பவர்கள் எளிதாக 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம். எந்த விளக்கமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.ஆனாலும் பலர் இந்த விழிப்புணர்வு இல்லாமல் 2,000 ரூபாய் நோட்டை பெற்றுக்கொள்ள மறுப்பது தவறு. வியாபாரிகள், வர்த்த கர்கள் மக்களிடமிருந்து 2,000 ரூபாய் நோட்டு க்களை பெற்றுக்கொண்டு வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். அப்பணத்தை வங்கியிலும் செலுத்தலாம். எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.

    • தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில செயலாளராக அந்தோணிராஜ் நியமனம் செய்யப்பட்டார்.
    • பகுதி நிர்வாகிகள் வாழ்த்தினர்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை தலைவர் மைக்கேல்ராஜ் பரிந்துரையின்படி மாநில தலைவர் முத்துகுமார், மண்டல துணைத் தலைவராக பணியாற்றிய குட்டி என்ற அந்ேதாணிராஜை, மாநில செயலாளராக நியமித்துள்ளார்.

    அவரை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர்சிவா, மாநில இளைஞரணி தலைவர் ஜெயபால், மதுரை மண்டல, மாநில நிர்வாகிகளான மரிய சுவீட்ராஜன், குணஜீசஸ், வாசுதேவன், பிரபாகரன், கரண்சிங், ஜெயகுமார், தேனப்பன் மற்றும் பகுதி நிர்வாகிகள் வாழ்த்தினர்.

    • 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
    • நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.

    திருப்பூர் :

    வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யும் தங்க ஆபரணங்களில் முக்கோ ண வடிவிலான ஹால்மார்க் முத்திரையுடன், 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவை இல்லாத தங்க ஆபர ணங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறி வித்துள்ளது.தங்கத்தின் தூய்மைக்கான சான்றிதழாக ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.

    ஹால் மார்க்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தனித்துவ அடையாள எண் வழங்க ப்படுகிறது.இதில் 3 இலக்கங்கள் ஆங்கில எழுத்துக்களாலும், 3 இலக்கங்கள் எண் வடி விலும் இருக்கும். இந்த அடையாள எண் முன்பு நான்கு இலக்கங்களில் வழங்கப்பட்டது. ஏப்ரல் முதல் 6 இலக்க அடையாள எண் கட்டா யமாக்கப்பட்டு ள்ளது. பழைய நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.இது குறித்து தர நிர்ணயத்தினர் கூறுகையில், வரும் ஏப்ரல் முதல் தங்க ஆபரணங்களில் 6 இலக்கங்களை கொண்ட தனித்துவ அடையாள எண் இருக்க வேண்டும். அப்படி இல்லாத நகைகள் பறிமுதல் செய்யப்படும்.சம்மந்த ப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்தின் மீதும், விற்ப னையாளர்கள் மீதும் நட வடிக்கை மேற்கொள்ள ப்படும்.

    பழைய நடைமுறை யில் ஹால்மார்க் முத்திரை மற்றும் 4 இலக்க எண்ணு டன் கூடிய தங்க ஆபரண ங்கள் விற்பனை யை முடிக்க கால அவகாசம் மார்ச் 31-ந் தேதி நிறை வடைகி றது என்றனர். நகை வியாபாரிகள் கூறுகையில், பழைய ஹால் மார்க் முத்திரை நகைகளை விற்பனை செய்ய ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதே சமயம் பழைய ஹால்மார்க் பதித்து விற்பனை செய்த நகை களின் தரத்துக்கு மக்களிடம் என்ன சொல்லப்போ கிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்றார். 

    • மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    இன்று ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

    இதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் துறை முகத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் மீனவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகை கடற்படை முகாமில் இருந்து உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் தலைமையில் விசைப்படையில் கடற்–படையினர், மீன்வளத் துறையினர் சென்று மீனவர்–களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    அதனைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    இதில் நாகை கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்.
    • பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    சீர்காழி:

    அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் அ.தி.மு.க. சார்பில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

    மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சக்தி, மீனவரணி செயலாளர் நாகரத்தினம், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் பாலதண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க பொறுப்பாளர்கள் கருணாகரன், பாஸ்கரன், சொக்கலிங்கம், பூவராகன் பங்கேற்றனர்.

    ×