என் மலர்
நீங்கள் தேடியது "மின்சாதனம்"
- மின்சாதனங்களை இயக்க முடியாததால் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
- பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
திருவையாறு:
திருவையாறு மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.
கனமழையினால் ஆங்கா ங்ககே மின்பாதைகளில் பழுது ஏற்பட்டு அடிக்கடியும் தொடர்ந்தும் மின்வெட்டு ஏற்படுவதால் வீடுகளில் சிற்றுண்டி முதலிய சமையல் வேலைகள் பாதிக்கப்படுகிறது.
ஹோட்டல்களில் சிற்றுண்டி முதலிய உணவுகள் தயாரிக்க மிக்சி கிரைண்டர் முதலிய மின்சாதனங்களை இயக்க முடியாததால் பெரும்பாலான ஹோட்ட ல்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால், வாடிக்கையாளர்களும் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து கனமழை பொழிவதால் குண்டும் குழியுமான சாலைகளில்.
மழைநீரும் கழிவுநீரும் தேங்கி சாலையில் நடக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இதனை தடுக்க முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்
- படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்தார்,
புதுச்சேரி:
காரைக்கால் கடற்கரை சாலையில், கிளிஞ்சல் மேட்டைச்சேர்ந்த விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலை படகை பார்க்க வந்த போது, படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் காரைக்காலை அடுத்த பட்டி னச்சேரி பகுதி யைச்சேர்ந்த ரகுபதி (வயது38) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்த னர்.
- சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
- அனைத்து மின் சாதனங்களையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் நாம்கோ தொண்டு நிறுவனம், இந்திய அரசு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புதுடெல்லி ஜி.ஐ.இசர்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து திருத்துறை ப்பூண்டியில் சாலை ஓரங்களில் மின் இணைப்பு இன்றி தொழில் செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு சோலார் மின் சாதனம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம்கோ இயக்குனர் ஜீவானந்தம் சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து எடுத்து ரைத்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு சாலையோர ஏழை வியாபாரி களுக்கு சோலார் மின் சாதனம் வழங்கி பேசுகையில்:-
நாம் பயன்படுத்தும் அனைத்து மின் சாதனங்க ளையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும். நாம்கோ தொண்டு நிறுவனம் சோலார் விழிப்புணர்வு பணியை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.
இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் பயனாளிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நாம்கோ பணியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.