திருவையாறு பகுதிகளில் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி

மின்சாதனங்களை இயக்க முடியாததால் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
திருவையாறு பகுதிகளில் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி
Published on

திருவையாறு:

திருவையாறு மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.

கனமழையினால் ஆங்கா ங்ககே மின்பாதைகளில் பழுது ஏற்பட்டு அடிக்கடியும் தொடர்ந்தும் மின்வெட்டு ஏற்படுவதால் வீடுகளில் சிற்றுண்டி முதலிய சமையல் வேலைகள் பாதிக்கப்படுகிறது.

ஹோட்டல்களில் சிற்றுண்டி முதலிய உணவுகள் தயாரிக்க மிக்சி கிரைண்டர் முதலிய மின்சாதனங்களை இயக்க முடியாததால் பெரும்பாலான ஹோட்ட ல்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், வாடிக்கையாளர்களும் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து கனமழை பொழிவதால் குண்டும் குழியுமான சாலைகளில்.

மழைநீரும் கழிவுநீரும் தேங்கி சாலையில் நடக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்க முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com