search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrical appliances"

    • அவ்வாறு நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
    • 4-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதனங்களும் பழுதானது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அவ்வாறு நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இதில் பெரிய நரிமேடு கிராமத்தில் வக்கீல் சண்முகத்திற்கு விளை நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் தென்னை மரம், அருகில் இருந்த மின் மோட்டார், மின்சாதனங்கள் போன்றவைகள் சேத மானது. மேலும், அங்கிருந்த 4-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதனங்களும் பழுதானது.

    • மின்வயர்கள் எரிந்ததால் பரவிய புகையால் அவர்கள் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • பெரிய அளவில் வீட்டில் தீப்பற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை அடுத்த துர்கா நகர் தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று இரவு இப்பகுதியில் திடீரென உயர் மின்அழுத்தம் ஏற்பட்டது. இதன்காரணமாக வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து தீப்பிடித்தன. அடுத்தடுத்து சுமார் 20- க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அப்பகுதியில் உள்ள கோலாகியம்மாள் (53) என்பவரது வீட்டிலும் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்தன. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த கோலாகியம்மாள், ஏழு மாத கர்பிணியான சித்ரா(30), இரண்டு மாத குழந்தையான அஜய்குமார், 4 வயது சிறுவன் ரோஹித் ஆகியோர் மீது மின்வயரில் இருந்து சிதறிய தீப்பொறி பட்டு உடல் லேசாக கருகியது. மேலும் மின்வயர்கள் எரிந்ததால் பரவிய புகையால் அவர்கள் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் வீட்டில் தீப்பற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் குரோம்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். மின்ஊழியர்கள் உயர்மின் அழுத்தத்தை சரிசெய்தனர். வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
    • அனைத்து மின் சாதனங்களையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் நாம்கோ தொண்டு நிறுவனம், இந்திய அரசு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புதுடெல்லி ஜி.ஐ.இசர்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து திருத்துறை ப்பூண்டியில் சாலை ஓரங்களில் மின் இணைப்பு இன்றி தொழில் செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு சோலார் மின் சாதனம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம்கோ இயக்குனர் ஜீவானந்தம் சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து எடுத்து ரைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு சாலையோர ஏழை வியாபாரி களுக்கு சோலார் மின் சாதனம் வழங்கி பேசுகையில்:-

    நாம் பயன்படுத்தும் அனைத்து மின் சாதனங்க ளையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும். நாம்கோ தொண்டு நிறுவனம் சோலார் விழிப்புணர்வு பணியை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.

    இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் பயனாளிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாம்கோ பணியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

    • கருப் பணம்பட்டி கிராமத்தில் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், சி.சி.டிவி கேமராக்கள் உடைக்கப்பட்டும் இருந்தது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள கருப் பணம்பட்டி கிராமத்தில் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சா லையில், ஆர்டரின் பேரில் மின் சாதன பொருட்கள் தயார் செய்து கொடுக்கப்படு கிறது. இந்த தொழிற்சா லையை சேலத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், தொழிற்சாலையை ஒட்டியே மின் சாதன பொருட்களை சில்லரையாக விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார். ஓமலூரில் இருந்து மேச்சேரி செல்லும் சாலையில் கருப்பணம்பட்டி மேட்டில் இந்த கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இரவு கடைய மூடிவிட்டு சென்ற கடை ஊழியர்கள் காலையில் கடைக்கு வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், சி.சி.டிவி கேமராக்கள் உடைக்கப் பட்டும் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர் கள் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் வைத்தி ருந்த பணம் 12 ஆயிரம் ரூபாய், கடையில் இருந்த காப்பர் மின் சாதன பொருட்கள், சி.சி.டி.வி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் ஆகிவை கொள்ளை போயிருந்தன.

    இது தொடர்பாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசா ரும், ஓமலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக் கப்பட்டு கை ரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக் பட்டது. இந்த துணிகர திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • மழை பெய்யும் நேரங்களில் மின் சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
    • கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எனவே மழை பெய்யும் நேரங்களில் மின் சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என மின்வாரியத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்ன ரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். மின் கசிவு தடுப்பானை பயனீட்டா ளரின் இல்லங்க ளில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்க்க லாம்.

    உடைந்த சுவிட்சு களையும், பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும். பழுதுபட்ட மின் சாதனங்களை உபயோகிக்க க்கூடாது. கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.

    ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதனை குழந்தைகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டின் வயரிங்குகளை சோதனை செய்து தேவை ப்பட்டால் மாற்றிக்கொ ள்ளலாம். குளியல் அறை யிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொரு த்தக்கூடாது.

    சுவற்றின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி.பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடை களை கட்டக்கூடாது.

    மின் கம்பங்களை பந்த ல்களாக பயன்ப டுத்தக்கூ டாது. மேலும் அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழை காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது.

    மழையாலும், பெருங்காற்றா லும் அறுந்து விழுந்த மேல்நிலை மின் கம்பி அருகே செல்ல வேண்டாம். இது குறித்து உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இடி - மின்னலின்போது தஞ்சம் அடைய எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான இடத்திற்கு செல்ல வேண்டும்.

    மேலும் இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன் படுத்தக்கூடாது.

    மழை காலங்களில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்தாலோ மற்றும் மின் வாரிய தொடர்பான தகவலுக்கு 9498794987, 9445851912 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்ற மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வர்கள் அலறிஅடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
    • விரைந்து சென்று மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழைபெய்தது. இதனால் பண்ருட்டி அடுத்த புலவனூர் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் உள்ள ஆனைஅப்பன் என்பவரது வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வர்கள் அலறிஅடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். இடி விழுந்ததால் வீடு சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மின் சாதனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. அந்த பகுதியில் இருந்த அனைத்து வீடுகளிலும் டெலிவிஷன், மிக்சி, கிரைண்டர் ஆகியவை இடி தாக்கியதில் சேதம் அடைந்தது. இடி, மழை காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.இது குறித்து வருவாய்த் துறையினர், போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதே போல பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிராமத்தில் தோப்பு தெருவில் தொடர் மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து பஞ்சாயத்து தலைவர் திருமலை ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதே போல பண்ருட்டி கும்பகோணம்சாலையில் கிளை கருவூலம் எதிரில் மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார வயர்கள் மீது மரங்கள் சாய்ந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்பவர் மீது மரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மின் ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்களும் ஸ்டார் ரேட்டிங் மின் சாதன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும்.
    • அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்கள், குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக திறனோடு செயல்படுகிறது.

    திருப்பூர்:

    மின் சிக்கனத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொழில்நுட்பத்துடன் மோட்டார், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கென மின் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

    அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்கள், குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக திறனோடு செயல்படுகிறது. அத்தகைய மின்சாதன பொருட்களின் மின் சேமிப்புத்திறன் அடிப்படையில், மத்திய எரிசக்தி துறை, பீரோ ஆப் எனர்ஜி எபீஷியன்சி (பி.இ.இ.,) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி அத்தகைய பொருட்களுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கி வருகிறது.

    இதுதொடர்பாக, தமிழகத்தில் மின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை (டான்ஜெட்கோ) நோடல் ஏஜென்சியாக நியமித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் தொழில் நிறுவனங்கள், விவசாயப்பரப்பு அதிகமுள்ள திருப்பூர் மாவட்டத்தில் மின் பயன்பாடு மற்றும் மின் செலவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களில், மின் சிக்கனத்தை மையப்படுத்தி ஸ்டார் ரேட்டிங் கொண்ட மின்சாதனங்களே பயன்படுத்தப்படுகிறது.இதனால் அரசின் இலவச மின் இணைப்பு பெற்று மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.குறைந்தபட்சம் 4 ஸ்டார் ரேட்டிங் உள்ள மின் சாதனங்களை பொருத்தினால் தான் மின் இணைப்பு வழங்க அனுமதியும் அளிக்கப்படுகிறது.பொதுமக்களும் ஸ்டார் ரேட்டிங் மின் சாதன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இடியுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
    • மின் சாதனப் பொருட்கள் வெடித்து சிதறின.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்தது. இடியுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    இந்நிலையில் கனி ராவுத்தர்குளம், காந்தி நகரில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர் துறையன் (65). இவரது மனைவி வனஜா துறையின் (63). கன மழை பெய்து கொண்டிருந்ததால் இவர்கள் வீட்டுக்குள் இருந்தனர்.

    அப்போது இவர்கள் வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டியில் இடி விழுந்தது. இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் உள்ள மின்சார மீட்டர் பாக்ஸ் வெடித்து சிதறியது. வீட்டில் உள்ள பேன், மிக்சி, பிரிட்ஜ், டிவி, லைட்டுகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின.

    இதனால் வீடு புகைமூட்டத்துடன் காணப்பட்டது. இவர்கள் வீட்டின் முன் பகுதி இடிந்து விழுந்தது.நல்லவேளையாக இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றதால் உயிர் தப்பினர்.

    இதேப்போல் இவர்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகேசன், மற்றும் பழனியம்மாள் வீடுகளில் இடியின் தாக்கம் காரணமாக அனைத்தும் மின்சாதன பொருட்களும் வெடித்து சேதமடைந்தது. இதில் அவர்களும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் உயிர்தப்பினர்.

    மேலும் அந்தப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இடித்தாக்கம் காரணமாக மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து பழுதானது.

    ×