search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Showers"

    • அவ்வாறு நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
    • 4-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதனங்களும் பழுதானது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அவ்வாறு நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இதில் பெரிய நரிமேடு கிராமத்தில் வக்கீல் சண்முகத்திற்கு விளை நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் தென்னை மரம், அருகில் இருந்த மின் மோட்டார், மின்சாதனங்கள் போன்றவைகள் சேத மானது. மேலும், அங்கிருந்த 4-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதனங்களும் பழுதானது.

    • இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி 15 நாள்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த சில தினங்களாகவே சின்னசேலம் பகுதியில் மழை முற்றிலும் நின்றது.இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நேரம் ஆக ஆக கருமேகம் சூழ்ந்து தூரல் மழை பொழிய ஆரம்பித்தது.

    இரவு 8 மணிக்கு ஆரம்பித்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக சின்ன சேலத்தில் புதிய பேருந்து நிலையம், பழைய பஸ் நிலையம், விஜயபுரம், காந்தி நகர், திரு வி க நகர், உள்ளிட்ட பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெரு க்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளா னார்கள். மழையினால் நேற்று இரவு அதிக அளவில் பணி இல்லாமல் இருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×