search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people are happy"

    • பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
    • தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆண்டு தோறும் மார்ச் முதல் ஜூன் வரையான கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது வழக்கம். குறிப்பாக கத்திரி வெயிலின் போது வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 4-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்ததுடன், வெப்ப அலையும் வீசியது. குறிப்பாக ஈரோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 111 டிகிரி பாரஹீட் வரை வெயில் கட்டெரித்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த 4-ந்தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக தற்போது பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெப்ப தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

    நேற்றைய நிலவரப்படி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட குறைவாக இருந்தது. குறிப்பாக திருத்தணியில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட 3 டிகிரி செல்சியல் குறைவு. அதே போல் ஈரோட்டில் 97 டிகிரியும், பரமத்திவேலூரில் 93 டிகிரியும் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் குறைவு. இதற்கிடையே சென்னை மீனம்பாக்கத்தில் 95 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரி வெப்பம் பதிவானது. இது இயல்பை விட சுமார் 2.7 டிகிரி செல்சியஸ் குறைவு.

    தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட குறைவாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி 15 நாள்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த சில தினங்களாகவே சின்னசேலம் பகுதியில் மழை முற்றிலும் நின்றது.இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நேரம் ஆக ஆக கருமேகம் சூழ்ந்து தூரல் மழை பொழிய ஆரம்பித்தது.

    இரவு 8 மணிக்கு ஆரம்பித்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக சின்ன சேலத்தில் புதிய பேருந்து நிலையம், பழைய பஸ் நிலையம், விஜயபுரம், காந்தி நகர், திரு வி க நகர், உள்ளிட்ட பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெரு க்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளா னார்கள். மழையினால் நேற்று இரவு அதிக அளவில் பணி இல்லாமல் இருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×