search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பகுதியில் கொட்டி தீர்த்த மழை
    X

    சின்னசேலம் பகுதியில் கொட்டி தீர்த்த மழை

    • இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி 15 நாள்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த சில தினங்களாகவே சின்னசேலம் பகுதியில் மழை முற்றிலும் நின்றது.இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நேரம் ஆக ஆக கருமேகம் சூழ்ந்து தூரல் மழை பொழிய ஆரம்பித்தது.

    இரவு 8 மணிக்கு ஆரம்பித்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக சின்ன சேலத்தில் புதிய பேருந்து நிலையம், பழைய பஸ் நிலையம், விஜயபுரம், காந்தி நகர், திரு வி க நகர், உள்ளிட்ட பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெரு க்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளா னார்கள். மழையினால் நேற்று இரவு அதிக அளவில் பணி இல்லாமல் இருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×