search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Effects"

    • பாக்கெட்டு உணவில் உப்பின் அளவை சரிபார்த்து வாங்க வேண்டும்.
    • கூடுதலாக உப்பு எடுத்துக்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    ஒருவருக்கு உப்பின் தேவை என்பது அவரின் உடல் வெளியிடும் சோடியத்தின் அளவைப் பொருத்து அமைகிறது. உதாரணமாக அதிக உடற்பயிற்சி, உடல் உழைப்பை செய்கிறவர்களுக்கு வியர்வையின் மூலமாக சோடியம் அதிகமாக வெளியேறும். அவர்களுக்கு அதிகமான சோடியத் தேவை இருக்கும்.

    உணவில் உப்பு அதிகமாக சேர்ப்பதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    நாம் எப்போது வீட்டு உணவை விடுத்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தோமோ அதில் இருந்து தான் உடலில் அதிக உப்புச்சத்து அதிகரிக்கத்தொடங்கியது.

    அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகளான பீட்ஸா, பர்கர், பாஸ்தா போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு முக்கியமான காரணம் என்னெவென்றால் பொதுமக்களுக்கு புரியும்படி பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் உப்பு எந்த அளவிற்கு சேர்க்கப்படுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். பொதுமக்களும் அதனை வாங்கி பயன்படுத்தும் போது பாக்கெட்டுகளில் உள்ள உணவில் உப்பின் அளவை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    இந்த முறைகள் எல்லாம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது. இதனை பாடபுத்தகங்களின் வாயிலாக நாம் கொண்டு சென்றால் பிற்காலத்தில் உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க முடியும்.

    இப்போது மக்களை தேடி மருத்துவம் முறையில் 1 கோடி பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு மனிதனுக்கு சோடியம் என்பது தேவை தான். அது பிளாஸ்மா அதிகப்படுத்துவதற்கும், செல்கள் செயல்படுவதற்கும் தேவை. நரம்பு மண்டலம் இயங்குவதற்கும் போதுமானதாக் இருந்தால் போதும். ஆனால் கூடுதலாக தேவை இல்லை. உதாரணமாக ஒரு நாளை 5 கிராம் உப்பு தேவை என்றால், நாம் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம்.

    நாம் கூடுதலாக உப்பு எடுத்துக்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.
    • அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் உங்கள் ஆரோக்கியம் தொடர்பான பல ரகசியங்களை வெளிப்படுத்தும். வயிற்றில் அல்லது உடலில் பல பிரச்னைகள் இருக்கும்போது சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

    ஆனால் சில நேரங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தை சரியாக கவனிக்காததால், பலர், குறிப்பாக பெண்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். பல நேரங்களில், தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்த பிறகும், UTI வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.

    UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். இதன் காரணமாக உங்களுக்கு சிறுநீர் கழித்தல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வயிறு மற்றும் சிறுநீரகங்களுக்கும் பரவுகிறது.

    சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள்

    சிறுநீர் தொற்று ஏற்பட்டால், சில பொதுவான அறிகுறிகளைக் காணலாம். இது உங்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால், அது சிறுநீர் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம். இதனுடன், சிறுநீரில் ரத்தப் பிரச்சனையும் அதிகரிக்கிறது.

    எனவே, இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், அவை சிறுநீர் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் தொற்று மிகவும் சங்கடமாக இருக்கும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சைய அளிக்கப்படாவிட்டால், அது வயிற்று தொற்றுக்கு வழிவகுக்கும். சிறுநீர் நோய்த்தொற்றை நிர்வகிப்பதில் நீர் மிகவும் முக்கியமானது. எனவே UTI ஏற்பட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் பாக்டீரியாவை வெளியேற்றவும் மற்றும் UTI களை தடுக்கவும் உதவுகிறது. எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

    பாக்டீரியாவால் சிறுநீர் தொற்று

    UTI -ன் மிகவும் பொதுவான காரணம் பாக்டீரியா ஆகும். பாக்டீரியாவால் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தொற்றுநோயைத் தடுக்க, நீங்கள் சுகாதாரத்தைப் பேணுவது மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அல்லது அதிகரிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிப்பது முக்கியம்.

    • நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.
    • ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.

    நூடுல்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான உணவுத் தேர்வாக மாறியுள்ளது. ஏனெனில் அவை மலிவானவை, தயாரிப்பதற்கு எளிதானவை மற்றும் வசதியானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நூடுல்ஸ் என்றாலே பிடிக்கும்.

    இருப்பினும், நூடுல்ஸை தொடர்ந்து உட்கொள்வதால் சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் உள்ளன. நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி பார்க்கலாம்.

    நூடுல்சில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. இது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சோடியம் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதினால் உயர் ரத்த அழுத்தம், நீர் தக்கவைத்தல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. அவை போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதில்லை. மேலும் அவற்றை தொடர்ந்து உட்கொள்வது குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

    உடல் பருமன்

    நூடுல்சில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இது தொடர்ந்து உட்கொண்டால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும். தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது. இது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    புற்றுநோய்

    நூடுல்சில் பிஸ்பெனால் ஏ போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இது பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. நூடுல்சை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக வயிற்று புற்றுநோய். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடும் பெண்களுக்கு வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 68 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    செரிமான பிரச்னைகள்

    நூடுல்சில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள அதிக சோடியம் காரணமாக வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒரே நாளில் பல நூடுல்சை உட்கொள்வது வயிற்றில் அசௌகரியம் மற்றும் ஒழுங்கற்ற குடல் அசைவுகளை ஏற்படுத்தும்.

    நூடுல்ஸ் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகமாக உள்ளது. இது மூளையில் உள்ள இரசாயனங்களின் சமநிலையை சீர்குலைக்கும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்சை உட்கொள்வது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

    நூடுல்ஸ் ஒரு வசதியான மற்றும் மலிவான உணவு. விருப்பமாக இருந்தாலும், அவை பலவிதமான உடல்நல அபாயங்களுடன் வருகின்றன. அவற்றை மிதமாக உட்கொள்வது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், நூடுல்சை வழக்கமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கலாம்.

    • தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
    • நமது மூளையில் சூப்பர் கிளாக் என்ற ஒரு பொருள் உள்ளது.

    இன்றைய உலகில் ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். அதிலும் நிறைய பெண்கள் மற்றும் ஆண்கள் இரவுநேர வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாது இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    அதிலும் குறிப்பாக பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. முடிகொட்டுதலில் தொடங்கி, ஹார்மோன் மாற்றம், ஸ்கின் பிராப்லம்ஸ் மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல், மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அது குறித்த பதிவுகள் உங்களுக்காக...

    இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். நமது மூளையில் சூப்பர் கிளாக் (suprachiasmatic nucles) என்ற ஒரு பொருள் உள்ளது. அது ஹைப்போதாலமஸ் என்ற இடத்தில் உள்ளது.

    இது சூப்பர் கிளாக் கொடுக்கும் சிக்னல் மூலமாகத்தான் ஹார்மோன்ஸ் மற்றும் அனைத்து சிஸ்டமும் வேலை செய்கிறது. இந்த சூப்பர் கிளாக்குக்கான பவர் எங்கிருந்து கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா...? சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்துதான். ஏனென்றால் சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்து தான் செரோட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. இரவில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது.

    இந்த சூப்பர் கிளாக்குக்கு சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்தில் தூங்காமல் உடலுக்கு கொடுக்கும் செயற்கையான வெளிச்சத்தால் உடலுக்கு எந்த சிக்னலும் கிடைக்காமல் போய்விடுகிறது.

    எனவே உங்களுக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் இந்த சூப்பர் கிளாக்குக்கு சரியான சிக்னல் கிடைக்காது. இதனால் அந்த ஹார்மோன்கள் வேலை செய்யாது. சரியான சிக்னல் உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் சர்க்காடியன் ரிதம் ஹார்மோன் (circadian rhythm) வேலை செய்யாது.

    இதனால் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பிரச்சினை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் பிரச்சினை வர அதிக வாய்ப்பு உள்ளது.

    எனவே இவ்வளவு துல்லியமாக வேலை செய்யும் சூப்பர் கிளாக்குக்கு மதிப்பளித்து இரவு 7 முதல் 8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.

    • உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை.
    • மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன.

    இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிட்டாலும் கூட மாட்டு இறைச்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மாட்டு இறைச்சி சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.

    மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இதனால் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவீதத்தினர் இளம்வயதிலேயே மரணம் அடைகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தினமும் அல்லது அதிகமாக மாட்டிறைச்சி உட்கொண்டு வருபவர்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன. இதனால் தமணிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதோடு அதன் வீரியமும் குறைந்து நாள்பட்ட நோய்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

    மாட்டுறைச்சியில் உள்ள கார்சினோஜென் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அளவுக்கு அதிகமாக மாட்டிறைச்சி உண்ணும் போது உடலில் கார்சினோஜென் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாட்டிறைச்சியில் அதிகளவு கலோரிகள் உள்ளது. எனவே இதனை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    எனவே மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இதயநோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் கோழிக்கறி மற்றும் மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாக உள்ளது என்று ஆயுவுகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க நாடுகளில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிடவர்களில் 13 சதவீதம் பேர் இதய பாதிப்பு மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு (சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக்) போன்றவை ஆகும். இதுவே இதயநோய் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன.

    அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக பருப்பு, மீன் போன்றவற்றை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறது ஆய்வுகள்.

    • வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

    அலுவலகங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் தவிர்க்க முடியாத மின்சாதனப் பொருட்களுள் ஒன்றாக ஏ.சி. விளங்குகிறது. கோடை வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் பலரும் ஏ.சி. உபயோகிக்க விரும்புகிறார்கள்.

    அது கோடை வெயிலுக்கு இதமளித்தாலும் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். சரும பாதிப்பு முதல் சுவாசக்கோளாறுகள் வரை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். ஏ.சி.யை அதிகம் பயன்படுத்துவதால் அனுபவிக்கும் 8 இன்னல்கள் குறித்து பார்ப்போம்.

    உலர் சருமம்

    ஏர்கண்டிஷனர்கள் காற்றில் நிலவும் இயற்கையான ஈரப்பதத்தை நீக்கிவிட்டு செயற்கை குளிர் காற்றை உமிழும் தன்மை கொண்டவை. அவை சருமத்தில் அதிக நேரம் படர்ந்தால் சரும வறட்சி, சரும அரிப்பு ஏற்படக்கூடும்.

    அதனால் குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருந்தால் காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்யும் 'ஹூமிடிபையர்' போன்ற ஈரப்பதமூட்டும் சாதனங்களை பயன்படுத்துவது நல்லது.

    சுவாச பிரச்சினை

    தூசு, நுண் துகள்கள், மாசுபட்ட காற்றில் கலந்திருக்கும் கிருமிகள் ஏ.சி. மூலம் பரவி ஒவ்வாமையையும், சிலருக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சினைகளையும் அதிகரிக்கச் செய்துவிடும்.

    அதனால் ஏ.சி.யில் பொருத்தப்பட்டிருக்கும் பில்டர்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். அதன் மூலம் அறைக்குள் காற்றின் தரத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

    வறண்ட கண்கள் - தொண்டைப்புண்

    ஏ.சி. பயன்படுத்தப்படும் அறைக்குள் நிலவும் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் சிலருக்கு கண்கள் மற்றும் தொண்டையில் வறட்சி ஏற்படலாம். அப்படி கண்கள் வறண்டு போனால் மருத்துவரின் ஆலோசனை பெற்று கண் சொட்டு மருந்துகளை உபயோகிக்கலாம்.

    நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இந்த அறிகுறிகளை குறைக்கலாம். காற்றில் ஈரப்பதத்தை நிலையாக தக்கவைக்க 'ஹூமிடிபையர்' போன்ற ஈரப்பதமூட்டும் சாதனங்களை பயன்படுத்துவதுதான் சரியான தீர்வாகவும் அமையும்.

    சோர்வு - தலைவலி

    ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் குளிர்ந்த காற்று சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் தலைவலி, சோர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள் ஏ.சி.யில் படிப்படியாக வெப்பநிலையை உயர்த்துவதன் மூலமும், கை விசிறி பயன்படுத்துவதன் மூலமும் பாதிப்புகளை குறைக்கலாம்.

     சளி தொந்தரவு

    ஏர் கண்டிஷனரில் நீண்ட நேரம் இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளை சிலருக்கு ஏற்படுத்தலாம். ஏனெனில் ஏ.சி. மூலம் அறைக்குள் நிலவும் குளிர் சூழலில் நோய் பரப்பும் கிருமிகள் உலவும். அவை எளிதில் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும். அதனால் ஏ.சி. அறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    இறுக்கமான தசைகள்

    குளிர்ச்சியான சூழலில் நீண்ட நேரம் உட்காருவது அல்லது தூங்குவது தசைகளை இறுக்கமடைய செய்யும். மூட்டுக்கு அசவுகரியம் அளிக்கும். குறிப்பாக கீல்வாதம் போன்ற மூட்டு சார்ந்த பிரச்சினை உடையவர்களுக்கு பாதிப்பு அதிகமாகும்.

    இரவில் ஏர்கண்டிஷனர் உபயோகிக்கும்போது அதில் வெப்பநிலையை அதிகரிக்க செய்யலாம். அல்லது போர்வை போர்த்தி சருமத்தை பாதுகாக்கலாம்.

    நீரிழப்பு

    ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் குளிர்ந்த காற்று தொடர்ந்து உடலில் படும்போது குளிர்ச்சியை உணருபவர்கள் அதிகம் தண்ணீர் பருக தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இது நீரிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

    அதிலும் கோடை காலத்தில் ஏ.சி. அறையில் அதிக நேரத்தை செலவிடும் பட்சத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதுதான் உடல் நீரேற்றமாக இருப்பதற்கு உதவி புரியும்.

    தூக்கக்கோளாறு

    ஏர் கண்டிஷனர்களால் உற்பத்தி செய்யப்படும் குளிர் காற்று சூழலில் தூங்குவது சிலருக்கு அசவுகரியத்தை அளிக்கலாம். போர்வைகள் அல்லது சவுகரியமாக தூங்குவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவதன் மூலமும், படுக்கை அறையில் சீரான வெப்பநிலையை பராமரிப்பதன் மூலமும் நல்ல தூக்கத்தை பெற முடியும்.

    • பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள்.
    • ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    இன்றைய ஃபேஷன் உலகில், பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சருமத்தின் அழகு மட்டுமின்றி, அவர்கள் அழகு நிலையத்திற்குச் சென்று, தலைமுடியை அழகாக்குவதற்கு, ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் ஸ்மூத்திங் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

     தற்காலிக ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், பிறகு முடி மீண்டும் சிக்கலாகிவிடும். நீங்கள் அதே நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், முடி 3-6 மாதங்களுக்கு நேராக இருக்கும். ஆனால்... இந்த சிகிச்சையில் சில வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    * ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    * ஏனெனில் தோல் எரியும் அபாயம் உள்ளது.

    * ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் சரியாக செய்யாவிட்டால், பொடுகு, முடி உதிர்தல், நரை, முடி பிளவு முனைகள் ஏற்படும்.

    * ஹேர் ஸ்மூத்திங் செய்தால் முடி உதிர்தல், உச்சந்தலையில் எரிச்சல், சிலருக்கு ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படலாம்.

    * கர்லிங் (சுருட்டையாக்குதல்) செய்யும்போது கூந்தல் முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவை வேறுபட்ட சூட்டைப் பயன்படுத்துகின்றன.

    * சுருட்டை முடியில் ஃபிளாட் அயர்னை பயன்படுத்துதல். ஃபிளாட் அயர்னை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை புளோ -டிரை செய்ய வேண்டும்.

    * கூந்தல் முழுவதையும் ஒரே நேரத்தில் அயர்ன் செய்யக்கூடாது. இதனால், சீரற்ற சூடும் அழுத்தமும் ஏற்படுகிறது. இவை இரண்டுமே சீரற்ற கூந்தல் நேராக்குதலுக்கு வழிவகுத்து விடும்.

    • பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்.
    • தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

    விலைவாசி உயர்வு, குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலத்தை குறித்த பயம் போன்ற பல காரணங்கள் மக்களை நேரம் காலம் பார்க்காமலும், இரவு பகல் என்று நினைக்காமலும் வேலை செய்ய வைக்கிறது. ஆனால், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலக்கோளாறுகள் மற்றும் மன ரீதியான கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.

    பகல் நேரத்தில் வேலைசெய்யும் பெண்களை விட இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. அதனால் இரவுநேர வேலையை குறைத்துக்கொள்வது நல்லது. எப்படி குறைக்கலாம் என்று தானே கேட்கிறீர்கள். மாதம் முழுவதும் இரவுநேர வேலை பார்ப்பதைவிட மாதம் ஒருமுறை மட்டும் இரவுநேர வேலை பார்க்கலாம்.

     2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இரவுநேர வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இரவுநேரத்தில் வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படுகிறது. அதனால் உடலும், மனதும் சோர்வடையும்.

    இரவுநேரத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக வேலைபார்த்தாலும் சில தடுமாற்றம் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உடல் ஓய்வெடுக்கச் சொல்லும். அந்த நேரத்தில் உங்கள் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இரவுநேரத்தில் வேலை செய்து பகலில் தூங்குவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினை ஏற்படும். வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் குடல் பிரச்சினை, இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்தும்.

     நீங்கள் இரவில் வேலை செய்துவிட்டு பகலில் நேரத்தில் தூங்கினாலும் உங்களால் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியாது. இதனால் நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

    இரவுநேரத்தில் வேலை செய்பவர்கள் காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

     இரவுநேரத்தில் வேலைபார்ப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

    ×