search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appointment"

    • 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டனர். 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 16 சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    16 உதவி தேர்தல் அதிகாரிகள் பெயர் விவரம் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்களுடன் தொகுதி வாரியாக விவரம் வருமாறு:-

    ஆர்.கே.நகர் தொகுதி

    எஸ்.வாசுகி, இணை இயக்குனர் ஆதி திராவிட நலத்துறை. செல்-73388 01243

    அனுஷ்யாதேவி, மாவட்ட வருவாய் அதிகாரி, சென்னை. செல்-94450 00901.

    வி.முத்துசாமி, இணை கமிஷனர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, செல்-90951 54565

    மகாலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு சர்க்கரை கழகம், செல்-80155 02885.

    எஸ்.தனலிங்கம், பொது மேலாளர், டான்சிட்கோ, செல்-94450 06554.

    எம்.கலைச்செல்வி, பொது மேலாளர், மாநில தொழில்கள் முன்னேற்ற கழகம், செல்-96778 51335.

    குழந்தைசாமி, செட்டில் மெண்ட் அதிகாரி, சர்வே மற்றும் செட்டில்மெண்ட், செல்-99449 14120.

    பி.மணிவண்ணன், கூடுதல் இயக்குநர், ஊரக சுகா தார மருத்துவ சேவை, செல்-73581 44619.

    வி.சங்கர நாராயணன், பொது மேலாளர், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன், செல்-94865 91402.

    என்.ராகவேந்திரன், பொது மேலாளர், டாம்கால், செல்-90477 99947.

    செந்தில்குமார், பொது மேலாளர், அரசு கேபிள் நிறுவனம், செல்-82704 89470.

    ஆர்.பன்னீர்செல்வம், சீனியர் மண்டல மேலாளர், டாஸ்மாக், செல்-96293 28933.

    துர்காதேவி, செயலாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்-94450 74956.

    சரவணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி, செல்-94451 90740.

    விஜயலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகம். செல்-70100 34495.

    கவிதா, பொது மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், செல்-99629 55626.

    85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுத் துறை மூலம் 1,021 புதிய டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக கூட்ட அரங்கில் நடந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுத் துறை மூலம் 1,021 புதிய டாக்டர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் 20 மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய டாக்டர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக கூட்ட அரங்கில் இன்று நடந்தது.

    மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள புதிய டாக்டர்கள் எண்ணிக்கை வருமாறு:-

    அறந்தாங்கி-62, அரிய லூர்-45, செய்யாறு-41, திண்டுக்கல்-44, கோவில்பட்டி-44, மயிலாடு துறை-47, நாகப்பட்டி னம்-41, பரமக்குடி-60, புதுக்கோட்டை-64, ராம நாதபுரம்-48, சிவ கங்கை-84, சிவகாசி-50, தென்காசி-52, தஞ்சாவூர்-70, நீலகிரி-55, தூத்துக்குடி-38, நெல்லை-53, திருவண்ணா மலை-71, திருவாரூர்-106, எருது நகர்-43.

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், டாக்டா் சங்கு மணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
    • பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் உள்ள அலுவலர்கள், நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலாஜி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சதீஷ்பாபு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் சிவக்குமார், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) துரைசாமி, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவராகவும் (கி.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உமாசங்கர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேடியப்பன், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சையத் பயாஸ் அகமது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுப்பிரமணி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஹேமலதா, கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராகவும் (வளர்ச்சி), கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராக (வளர்ச்சி) இருந்த முகமது சிராஜிதீன், தளி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ), சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவப்பிரகாசம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மகேஸ்வரன், கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவல வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.

    • சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • அதிகார பிரிவினைக்கு எதிரானது என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்தார்.

    தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. புதிய சட்டத்தின்படி தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமரின் பரிந்துரைக்கப்பட்ட மத்திய மந்திரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை தவிர்த்து அவருக்கு பதிலாக மத்திய மந்திரி குழுவில் இடம்பெற்றார்.

    தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதி தவிர்க்கப்பட்ட இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இது அதிகார பிரிவினைக்கு எதிரானது என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்தார். ஆனால் இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. இந்த புதிய சட்டத்தின் செயல்பாட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

    • 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
    • புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    ரெயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 20-ந்தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவர்களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் கும ரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 202 ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால், அது இந்த வழக்கை பயனற்றதாக்கி விடும் என்பதால், புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட உள்ளவர்களின் தேர்வு நடவடிக்கைகள் 2023-ம் ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால், அவர்களை நீக்கி விட்டு, புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரெயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக கூறினர்.

    பின்னர், புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மறுநியமனம் வழங்கினால், அதன் மூலம் அவர்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

    • மறைமாவட்ட 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் நியமனம் செய்துள்ளனர்.
    • 26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மறை மாவட்டத்தின் 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் வருகிற 26-ந்தேதி அன்று சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பேற்கிறார்.

    இவ்விழாவில் திருத் தந்தையின் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜிரல்லி முன்னிலை வகிக்கிறார். மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புதிய ஆயரை திருநிலைப்படுத்துகிறார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரும் சிவகங்கை மறைமாவட்டத்தின் பரிபாலகரமான மேதகு ஆயர் ஸ்டீபன், சிவகங்கை மேனாள் ஆயர் சூசைமாணிக்கம், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் பிற மறைமாவட்டங்களின் ஆயர்களும் இத்திருலை பாட்டு நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

    மேலும் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், சென்னை சி.எஸ்.ஐ. மேனாள் பேராயர் தேவசகாயம் அமைச்சர் பெரியகருப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மாநில சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், திருச்சி எம் எல் ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்கின்றனர்.

    26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த மாபெரும் திருநிலைப்பாட்டு நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பு செய்ய சிவகங்கை கத்தோலிக்க மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது.

    • வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.
    • நகராட்சி பணிகளில் தொய்வு ஏற்படுகிறது

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் 21 வார்டு உள்ளது. வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.

    அவர் பதவி உயர்வு பெற்று கோவை பகுதிக்கு சென்றதால் வால்பாறை நகராட்சிக்கு, உடுமலை நகராட்சி ஆணையாளர் பெற்பெட்டி டெரன்ஸ் லியோ என்பவர் வால்பாறை நகராட்சி அலுவலகத்தையும் சேர்த்து பார்த்து வருகிறார்.

    இவர் உடுமலையில் இருந்து வாரம் 2 முறை மட்டுமே இங்கு வந்து செல்வதால் நகராட்சி பணிகள் தோய்வடைகின்றன. எனவே வால்பாறை நகராட்சிக்கு என்று தனி ஆணையாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்ததற்காக விருதுகள் வழங்கி பாராட்டு
    • எம்.கண்ணனுக்கு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராக குன்னூரை சேர்ந்த எம்.கண்ணன் ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக குன்னூர் எம்.கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை மேற்கண்ட அமைப்பின் தேசிய தலைவர் மணிமொழியான் செய்து உள்ளார்.

    நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குன்னூர் எம்.கண்ணனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இந்திய மக்கள் மன்றம் மற்றும் தேசிய பாரத் சேவாக் சமாஜ் உள்ளது. இந்த அமைப்புகளின் தென்னிந்திய தமிழக அலுவலகம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆக முன்னாள் எம்எல்ஏ இளமை தமிழ்ச்செல்ன் நியமிக்கப்பட்டு உள்ளார்
    • தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    பெரம்பலூர், 

    அஇஅதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை இரா. தமிழ்ச்செல்வனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி நியமனம் செய்து உள்ளார்.இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தொண்டர்கள் பெரம்பலூர் பழைய, புதிய பேருந்து நிலையம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் 3 முறை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை எம்.எல்ஏவாக இருந்து உள்ளார். பள்ளி கல்லூரி காலத்தில் இருந்தே அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மாவட்ட மாணவரணி செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மாவட்ட செயலாளருக்கு போட்டி இருந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் மாவட்ட செயலாளராக தேர்வு பெற்றிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மாவட்ட செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வனுக்கு நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை பள்ளிகளில் கண்காணிக்க 95 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்
    • ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்

    பெரம்பலூர்,

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 263 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அடுத்த மாதத்திற்கு (அக்டோபர்) தேவையான உணவு பொருட்கள் கடந்த 22-ந்தேதி அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது, மாணவ-மாணவிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சுகாதாரமான சுவையான உணவு வழங்கப்படுகிறதா? உள்ளிட்டவற்றை கண்காணிக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 95 பொறுப்பு அலுவலர்கள், மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பு அலுவலருக்கும் 2 முதல் 4 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த பொறுப்பு அலுவலர்கள், உணவு பொருட்கள் அடுத்த மாதத்தில் பள்ளி வேலை நாட்களுக்கு போதுமான அளவு உள்ளதா? என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் செலவினங்களுக்காக மைய பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.

    • தஞ்சை மாநகராட்சி ஆணையர் கரூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • மாநகராட்சி நிர்வாக இயக்குனரக முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநக ராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் கரூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாநகராட்சிக்கும், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி நிர்வாக இயக்குனரக முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.

    • தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
    • ஆதர்ஷ் பச்சேரா சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் மாநகரமானது நெல்லை மேற்கு, நெல்லை கிழக்கு என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.

    காலி பணியிடம்

    அதன்படி நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சரவணகுமார் இருந்து வருகிறார். கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சீனிவாசன் பணி யாற்றனார். அதே போல் தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பதவியிடம் காலியாக இருந்தது. அந்த பொறுப்பை தலைமை இடத்தை துணை போலீஸ் கமிஷனர் அனிதா கவனித்து வந்தார்.

    துணை கமிஷனர் நியமனம்

    இதற்கிடையே காலியாக இருந்த போலீஸ் துணை கமிஷனர் பதவிக்கு உடனடியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பி னரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன்படி தற்போது நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக ஆதர்ஷ் பச்சேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    ×