search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assistant professor"

    • ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.
    • நெட் தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.

    அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9,08,580 பேர் தேர்வை எழுதினார்கள்.

    ஆனால் தேர்வு நடைபெற்ற அடுத்த நாளே திடீரென நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.

    அதில், 'தேர்வு செயல்முறையின் வெளிப்படை தன்மையை உறுதிசெய்வதற்காக நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இந்த தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யுஜிசி நெட் மறுதேர்வுகளுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை தற்போது அறிவித்துள்ளது.

    ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுகள் ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு பேனா பேப்பர் கொண்டு எழுத்து முறையில் நடைபெற்ற நிலையில் தற்போது நடைபெறவுள்ள நெட் தேர்வு கம்ப்யூட்டர் முறையில் ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கம்ப்யூட்டர் முறையில் நடைபெறும் NCET தேர்வு ஜூலை 10 ஆம் தேதியும் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள்.
    • விண்ணப்பதாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    சேலம்:

    கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள். அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சிக்கான நெட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு-2023 அறிவிப்பு இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    தமிழ்நாட்டில் இந்த தேர்வு அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, ேகாவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், விழுப்புரம், விருது நகர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    இந்த மையங்களில் வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ண ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரி வினருக்கு ரூ.1150, ஓபிசி., பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.325 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    • 4 ஆயிரம் பேரை புதிதாக நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.
    • 2,331 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யும் பழைய அறிவிப்பு ரத்து.

    தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி தற்போது புதிதாக 4 ஆயிரம் பேரை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான பழைய அறிவிப்பாணையை தமிழக அரசு ரத்துச் செய்துள்ளது.

    தர்மபுரி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய உதவி பேராசிரியர் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

    இவர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி  அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடிவந்தனர். 

    இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். கைதான கோபால கிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
    உதவி பேராசிரியர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்த மாணவி ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் விசாரணைக்கு அழைத்தபோது வரவில்லை.#ChennaiStudentharassment #AgriCollege
    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் தனக்கு, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் பாலியல் தொல்லைக்கு ஆதரவாக விடுதி காப்பாளர்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் ஆகியோர் செயல்பட்டதாகவும் புகார் கூறினார்.

    இதற்கிடையில் புகார் கூறப்பட்ட உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி காப்பாளர்களான பேராசிரியைகள் மாணவிக்கு எதிராக வாணாபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. எங்கள் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தவே, இதுபோன்ற புகார்களை கூறி உள்ளார். கல்லூரியில் சக மாணவ, மாணவிகளுடைய ஐ.டி. கார்டுகள், பென்சில், பேனா மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை மாணவி திருடியுள்ளார். இதுபோன்று பல திருட்டு சம்பவங்களில் மாணவி ஈடுபட்டுள்ளார். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பொய் புகார் தெரிவித்த மாணவி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    இந்த புகார் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கோவையில் இருந்து வந்த வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழு கல்லூரி முதல்வர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, பாலியல் புகாருக்குள்ளான உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவி விடுதியை விட்டு வெளியேறி விட்டார். இந்த வேளாண்மை கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருவதினால், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினார்.

    நேற்று 2-வது நாளாக வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

    இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், அவருக்கு உதவியதாக கூறிய பேராசிரியைகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியின் தோழிகள், மாணவிகள் ஆகியோரிடம் அவர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.  #ChennaiStudentharassment #AgriCollege
    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் மீது 3 கட்ட விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் கூறியுள்ளார்.

    கோவை:

    திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தை அடுத்துள்ள வாழவச்சனூரில் தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த 19 வயது மாணவி விடுதியில் தங்கி படித்து வந்தார். அதே கல்லூரியில் பணிபுரிந்து வந்த உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு விடுதி வார்டன்கள் மைதிலி, புனிதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் மாணவி வாணாபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இதன் காரணமாக மாணவி விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி மாவட்ட கூடுதல் நீதிபதி சுமதி சாய்பிரியா ஆகியோரிடம் பாலியல் பிரச்சினை குறித்து மாணவி வாக்குமூலம் அளித்தார்.

    அதன் அடிப்படையில் மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் ராமசாமி, வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் தங்க பாண்டியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக துணை வேந்தர் ராமசாமி கூறும் போது, மாணவியின் புகார் மற்றும் விசாரணை, கோர்ட்டு உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    அவர் மீது 3 கட்டமாக விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த உதவி பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் பூவரசன் (வயது 27). உதவி பேராசிரியர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் அருகே சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்தநிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இது குறித்து பூவரசனின் தந்தை சுப்ரமணியன், தாய் செல்வி மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பூவரசனின் உடலை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாரி விஜயராகவன், மகேஸ்வரன் பிச்சைமுத்து ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பூவரசனின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பிற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு அனுப்பிவைத்தனர்.

    அதன்படி ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி கூறும் போது, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்கள் இடையே அதிக விழிப்புணர்வு தேவைப்படு கிறது. ஒருவர் இறந்தபிறகு அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரை காப்பாற்ற உதவும். விபத்தில் மூளைச்சாவு அடைந்த பூவரசன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவருடைய குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர் என்றார். 
    ×