search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commissioner"

    • 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
    • மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளில் வசிக்கும் மக்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள், கடைகளின் வாடகை போன்ற வைகள் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

    ஆனால் இதுவரை பலர் வரிகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த மாதத்திற்குள் வரியை வசூலிக்க ஆலோசிக்கப்பட்டது.

    பெரும்பாலானோர் பணிக்கு செல்பவர்கள் வீடு திரும்ப நேரம் ஆகிவிடுவதால், அவர்கள் வரியை கொண்டுவந்து மையங்களில் செலுத்துவதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கருத்து எழுந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    அதன்படி அனைத்து மண்டலங்களிலும் உள்ள வரிவசூல் மையங்களும் கூடுதல் நேரம் செயல்பட அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக வரித்தொகைகளை செலுத்திட ஏதுவாக வருகிற 31-ந்தேதி வரை மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறையின்றி செயல்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

    அதன்படி அனைத்து வரிவசூல் மையங்களும் நேற்று முதல் கூடுதல் நேரம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில மையங்களில் நேற்று இரவு நேரத்திலும் பெரும்பா லானோர் தங்களது வரி களை செலுத்தினர். இதனை பயன்படுத்தி 2023-2024ம் ஆண்டிற்கான வரித் தொகைகளை உடனடியாக செலுத்தி உரிய ரசீது பெற்று கொள்ள கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • இந்திரா காந்தி சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேறும் வடிகால்கள் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • வீரநாயக்கன் தட்டில் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பி.எம்.சி. பள்ளிக்கு செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு மற்றும் இந்திரா காந்தி சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேறும் வடிகால்கள் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த பணி இரவு, பகலாக நடைபெற்று வருகின்றது. இதே போல பி.எம்.சி பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள், பாரதி நகர், ஹவுசிங் போர்டு, ஆர்.கே.கார்டன், பால்பாண்டி நகர், சின்னமணி நகர், மற்று சிலோன் காலனி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் மற்றும் இரவு, பகலாக நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளையும் மேயர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து வீரநாயக்கன் தட்டில் ஸ்மார்ட் வகுப்பறை யுடன் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப் பள்ளி பணிகள் நிறை வடைந்ததால் மாண வர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    அதனையும் கட்டபொம்மன் நகர், அத்திமரபட்டி, ஜெ.எஸ் நகர், ராஜூ நகர், சாமி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளையும் சாந்தி நகர், சக்தி நகர்,ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்ததையும் லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், மற்றும் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தி.முக. பகுதி செயலாளரும், மண்டல தலைவர்களுமான சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பச்சிராஜன், சரவணக்குமார், முத்துவேல், பொன்னப்பன்,மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜோஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
    • முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக கண்ணன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் தாம்பரம் மாநகராட்சியின் துணை ஆணையராக பணி புரிந்து வந்த செந்தில்முருகனை காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

    இதன் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 3-வது ஆணையராக செந்தில் முருகன் மாநராட்சி ஆணையரக அலுவலகத்தில் நேற்று முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி பொறுப்பேற்றார். முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • காங்கயம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். வெங்கடேஸ்வரன் பணியாற்றி வந்துள்ளார்.
    • எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகராட்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    வெள்ளகோவில்.

    வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வந்த ஆர்.மோகன் குமார் ஈரோடு மாவட்டம், பவானிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டார். அந்த பதவிக்கு காங்கயம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். வெங்கடேஸ்வரன் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்திற்கு இடம் மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வெள்ளகோவில் புதிய ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகராட்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
    • அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பின் நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சி கமிஷனராக முகமது சம்சுதீன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவருடைய செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு திருப்தி அளிக்காததால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து அவர் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு, பவானி கமிஷனராக இருந்த தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருசில நாட்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து காங்கயம் நகராட்சி பொறுப்பு கமிஷனராக இருந்த பன்னீர்செல்வமும், அதைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமாரும் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக பணியாற்றினர். வாரத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே அவர்கள் வந்து சென்றதால் அலுவல் பணிகள் தடைபட்டது.

    இதையடுத்து நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது. இதனால் கவுன்சிலர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்திக்குள்ளாகினார்கள். இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ஹாரீஸ் சிவகங்கை மாவட்டத்திற்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக திட்டக்குடி நகராட்சி கமிஷனர் ஆண்டவன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக ஆண்டவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

    • கோவிலுக்கு நன்கொடை அளித்தவருக்கு சிறப்பு மரியாதை வேண்டுமா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தை சேர்ந்த சின்னன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கண்டனூர் கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டும், திருவிழாக்காலங்களிலும் தனி நபருக்கு எந்த விதமான சிறப்பு மரியாதை கோவில் சார்பில் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கோவில் நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில், பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவு படுத்த வேண்டும்.

    ஒரு நபர் கோவிலுக்கு தனது பங்களிப்பை, நன்கொடையாக வழங்கியிருந்தால் அவர்களுக்கு, கோவில் சார்பில் சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
    • இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த மையம் தரைதளம், முதல் தளம் ஆகிய 2 தளங்களை கொண்டது.

    தரை தளத்தில் 60 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 10 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், நூலக அறை, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை, முதல் தளத்தில் 35 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 5 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், 30 நபர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இம்மையத்தில் சிறப்பு அம்சங்களான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 16 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமரா, 75 இஞ்ச் எல்.சி.டி 2 தொலைக்காட்சி, 2 புரஜெக்டர், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான மைக் மற்றும் சுவர் ஒலி பெருக்கிகள், புத்தக அலமாரிகள், சைகை மொழி பேனர்கள், அபாகஸ் உபகரணங்கள், டிக்டாக் டோ உபகரணங்கள், கண்ணாடி புரம்மை உபகரணங்கள், தளவாட பொருட்கள், மையத்திற்கு வெளியில் அமர்வதற்கான இருக்கைகள், கழிப்பறை வசதிகள் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்து தொடர்ந்து மையத்தை நன்கு பராமரிப்பு செய்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது செயற் பொறியாளர் கு.செந்தில்குமார், உதவி செயற் பொறியாளர் எஸ்.செந்தில்குமார், உதவி பொறியாளர் அன்புசெல்வி ஆகியோர் உடனிருந்தனர். 

    • கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை நள்ளிரவில் கமிஷனர் ஆய்வு செய்தார்.
    • இப்பகுதியில் பெரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    மதுரை

    மதுரையில் முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரையின் முக்கிய சாலை பகுதியாக இருக்கும் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்தப் பணியால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்தன. அதனை போக்கும் விதமாக மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், ஆகியோர் மதுரையில் நடைபெறும் இந்த பைப் பதிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், வேலை ஆட்கள் சுழற்சி முறையில் இரவு நேரங்களிலும் பணி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று காலையில் பல்வேறு பகுதிகளில் மேயரும் மாநகராட்சி ஆணை யாளரும் நகர் நல பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 12 மணி அளவில் மாநகராட்சி ஆணையாளர் டி.வி.எஸ். நகர் மற்றும் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் குழாய் பதிக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

    • திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, சௌந்தர்ராஜன், பாலகிருஷ்ணன், ராஜசேகரன், ருக்மணி சேகர், விஜயலட்சுமி, சுகன்யா ஜெகதீஷ், பாமிதா கயாஸ், சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி உள்ளிட்ட 10 நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த மே 30ந்தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில், தீர்மானம் எண் 20ன் படி திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் அதன் தொடர்பான பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது தற்போது தெரிய வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்பந்தம் விடுவதற்கு மிக அவசரம் காட்டியது, ஒப்பந்ததாரரின் உரிய விபரங்கள் இல்லாதது போன்ற குளறுபடிகள் உள்ளதால், இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

    எனவே நகராட்சி நிர்வாகம் சட்ட விதி 164ன் படி பெரும்பான்மையான நகர் மன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். எனவே அந்த தீர்மானத்தை ரத்து செய்து மீண்டும் நகர் மன்ற கூட்டத்தை நடத்தி அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி, உரிய விளக்கம் அளித்து பின்னர் நிறைவேற்றலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன.
    • குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரப்பகுதியில்உள்ள போலீஸ் நிலையங்களில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன. இதில் அனுப்பர்பாளையம், கொங்கு நகர், கே.வி.ஆர். நகர், நல்லூர் என 4 சரகமாக பிரிக்கப்பட்டு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளி மாநில,மாவட்ட மக்கள் அதிகம் தங்கி பணியாற்றும்திருப்பூர் மாவட்டத்தில்கொலை, கொள்ளை,ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள்அடிக்கடி நடைபெறுகிறது.

    இந்நிலையில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, அனுப்பர்பாளையம்,வடக்கு, தெற்கு, நல்லூர்போலீஸ் நிலையங்களில் திடீரென ஆய்வுமேற்கொண்டார். அப்போது அங்கிருந்தபொதுமக்களிடம் தங்கள்கோரிக்கைகள் குறித்துகேட்டறிந்தார். மேலும், போலீசாரிடம் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். அேதபோல் நீண்ட நேரம்போலீஸ் நிலையங்களில் யாரையும் உக்கார வைக்காமல் ெபாதுமக்களின் குறைகளை கேட்க வேண்டும். குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். லாக்கப் மரணம் நிகழாமல் பார்த்துக்ெகாள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். 

    நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனராக சிவகிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்று கொண்டார்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய விஷ்ணுசந்திரன் நகராட்சிகள் நிர்வாகத்தின் இணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய கமிஷனராக சிவகிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.

     அவர் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார். அவரிடம்  கமிஷனர் விஷ்ணுசந்திரன் கோப்புகளை முறைப்படி ஒப்படைத்தார்.

    பின்னர் சிவகிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் 2008-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். படிப்பை முடித்தேன். நெல்லை மாநகராட்சி கமிஷனராக என்னை நியமித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

    பொதுசுகாதாரம், பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகராட்சியில் அனைத்து பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விரைவில் முடிக்கப்படும்.

    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் பணிகள் குறித்தகாலத்தில் தரமானதாக முடிக்கப்படும். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் காலதாமதமின்றி கிடைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சிவ கிருஷ்ணமூர்த்தி நெல்லை சப்-கலெக்டராக பணியாற்றி உள்ளார்.
    நெல்லை ஸ்ரீபுரம் சாலை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
     
    மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாநகராட்சி பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    தச்சநல்லூர் கிராண்ட் புதுத் தெருவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மகாராஜன் மனு அளிப்பதற்காக தவழ்ந்தபடி கூட்டத்திற்கு வந்திருந்தார். உடனே கமிஷனர் விஷ்ணு சந்திரன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரிடம் கோரிக்கை மனுவை பெற்றார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு இரண்டு கால்களும் கிடையாது. எனது மனைவிக்கு வாய் பேசமுடியாது. இதனால் எங்களது குழந்தைகளை வளர்ப்பதற்கு வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

    எனவே மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுத்து எனக்கு ஒரு பெட்டிக்கடை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை ஆய்வு செய்த கமிஷனர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

     உதயம் வெங்கடேஸ்வரா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வண்ணார்பேட்டை வடக்கு புற வழிச்சாலை உடையார்பட்டி பகுதியில் உள்ள யூ.வி. நகர் பகுதியில் பூங்காக்கள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை மற்றும் இணைப்பு சாலை பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

    அண்ணாமலை புதூர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனுவில் பேட்டை பகுதி அண்ணாமலை புதூரில் பூங்கா அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     ஆனால் அது முறையாக பராமரிக்கப்படாததால் அந்த இடத்தில் முட்செடிகள் வளர்ந்து விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. எனவே விரைவில் அந்த முள் செடிகளை அகற்றி விட்டு பூங்கா அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    தச்சை மண்டலம் பாலபாக்யா நகர் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் அளித்த மனுவில் பாலபாக்யா நகர் தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை. மேலும் பெரும்பாலான வீடுகளில் கதை விளக்கம் சரியாக தெரியவில்லை.

    இதனால் தபால் கொண்டு வரும் தபால்காரர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதேபோல் ஒவ்வொரு தெருவுக்கும் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று கூறிவந்தனர்.

    நெல்லை சந்திப்பு எஸ்என் ஹை ரோடு வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் சந்திப்பு ஸ்ரீ புரத்தில் உள்ள சிவசக்தி சாலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சாலையில் ஏராளமான வியாபாரிகள் உள்ளனர். குழாய் பதிக்கும் பணி இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. எனவே வணிகர்களின் நலன் காப்பதற்கு இந்த பணிகளை விரைவில் முடித்து சாலை அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

     நெல்லை மாநகர் சந்திப்பு பகுதி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் அளித்த மனுவில், சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் அனைத்து பஸ்களும் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
    ×