search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் 100 சதவீதம் வசூல் - ஆணையாளர் தகவல்
    X

    கோப்புபடம்.

    காங்கயம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் 100 சதவீதம் வசூல் - ஆணையாளர் தகவல்

    • வரி வசூல் தொகை ரூ.6 கோடியே 40 லட்சம் ஆகும்.
    • 12 ஆண்டுகளுக்குப்பின்னர் முதல் முறையாக குடிநீர்க் கட்டணம் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சியில் 2022-2023-ம் ஆண்டுக்கான சொத்துவரி, காலியிடவரி,தொழில் வரி ஆகிய அனைத்து இனங்களிலும் தமிழ்நாட்டில் முதல் நகராட்சியாக கடந்த ஜனவரி 31, 2023 அன்று 100 சதவீதம் வரி வசூல் செய்து காங்கயம் நகராட்சி சாதனை படைத்துள்ளது. இதன் மொத்த வரி வசூல் தொகை ரூ.6 கோடியே 40 லட்சம் ஆகும்.மேலும் காங்கயம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 12 ஆண்டுகளுக்குப்பின்னர், தற்போது முதல் முறையாக குடிநீர் கட்டணம் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த வசூல் தொகை ரூ.1 கோடியே 57 லட்சம் ஆகும்.

    இதற்கு உறுதுணையாக இருந்த நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், வருவாய் உதவியாளர்கள் எஸ்.சதீஷ்குமார், சு.பாண்டியன், கே.விஜயகுமார் ஆகியோருக்கும் வரி செலுத்தி உதவிய பொதுமக்களுக்கும் நன்றி தெரி–வித்–துக்–கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×