என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி வசூல்"

    • இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும்.
    • பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்ற டிரம்பின் கருத்து குறித்து பேசிய ராகுல் காந்தி, "டிரம்ப் சொல்வது சரிதான், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும். பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார். அதானிக்கு உதவ பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

    எங்களிடம் ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனா உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் உங்கள் குழுவை உலகிற்கு அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை.

    பிரதமர் மோடி தனது உரையில் டிரம்ப், சீனாவின் பெயரை கூட சொல்லவில்லை. இந்த பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் இராணுவத் தலைவர், ஜனாதிபதி டிரம்ப் அவருடன் மதிய உணவு அருந்துகிறார். நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்று கூறினார்

    இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் 30-32 முறை கூறியுள்ளார். 5 இந்திய ஜெட் விமானங்கள் வீழ்ந்ததாகவும் அவர் கூறினார். டிரம்ப் இப்போது இந்திய பொருட்களுக்கு 25% வரிகளை விதிப்பதாகக் கூறுகிறார். இதற்கு பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்க முடியவில்லை? உண்மையான காரணம் என்ன? யார் கையில் அதிகாரம் உள்ளது?

    பாஜக அரசாங்கம் நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டது" என்று தெரிவித்தார். 

    • இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    டிரம்பின் புதிய வரி விதிப்பால் எந்தத் துறைக்கு பாதிப்பு?

    இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் 25% வரி விதிப்பால் வேளாண்மை, ஜவுளி, மின்னணு, ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

    அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்களில் 44% இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. வரிவிதிப்பால் நாட்டில் செல்போன் உற்பத்தித் துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • இந்திய நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

    அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் :

    1. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

    2. குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்

    3. ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்

    4. ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ

    5. பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்

    6. காஞ்சன் பாலிமர்ஸ்

    • பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய டிரம்ப், பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம். இதன்படி, பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள போகிறோம். இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

    யாருக்கு தெரியும், ஒரு நாள் இந்தியாவுக்கு கூட பக்ஷிதன் எண்ணெயை விற்பனை செய்ய கூடும் என்று டிரம்ப் கிண்டலாக கூறினார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று தொடர்ந்து டிரம்ப் கூறி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிப்பு.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    வரிவிதிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் அறிவித்துள்ளார்.

    • தனியார் கட்டிடங்களுக்கு அதிகமான வரி வசூல் முறைகேடுகள் நடந்துள்ளது.
    • இனி எதிர்காலத்தில் ஊழல் செய்யாமல் இருப்பதற்கான வழிகாட்டியாக இருக்கும்.

    சென்னை:

    மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தனியார் கட்டிடங்களுக்கு அதிகமான வரி வசூல் முறைகேடுகள் நடந்துள்ளது. ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு, கடைசில மனுஷனையே கடிச்ச கதையாக ஒரு அளவே இல்லாமல் ஊழல் போனதன் விளைவாக மதுரை மாநகராட்சி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் ஊழல் நடந்தது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக வந்திருக்கிறது. அனைவரையும் ஒரே நேரத்தில் பதவி நீக்கம் செய்த முதலமைச்சரின் செயல்பாடு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு இணையாக கருதப்படுகிறது.

    அவர்கள் ஊழல் செய்த பணத்தை மீண்டும் மதுரை மாநகராட்சியே திரும்ப வசூல் செய்ய வேண்டும். அப்போதுதான் இனி எதிர்காலத்தில் ஊழல் செய்யாமல் இருப்பதற்கான வழிகாட்டியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
    • மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக் குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டிடங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

    எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகி உள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், கவுன்சிலா் இப்ராஹிம் கலிலுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா். 
    • முஸ்லீம் வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்களை நகா்மன்றத் தலைவா், நகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் வீடுகளுக்கே நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா்.

    காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் மற்றும் நகராட்சி வருவாய் அலுவலா்கள் 4வது வாா்டுக்கு உட்பட்ட சத்திரம் வீதி, முஸ்லீம் வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 50 வீடுகளில் சொத்துவரி, குடிநீா்க் கட்டணமாக ரூ.40 ஆயிரம் வசூலானது. நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், கவுன்சிலா் இப்ராஹிம் கலிலுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

    • கண்டனூர் பேரூராட்சியில் 100 சதவீதம் வரி வசூலானது.
    • கண்டனூர் பேரூராட்சி மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பெலிக்ஸ் தெரிவித்தார்.

    காரைக்குடி

    பேரூராட்சிகளின் இயக்குநரின் ஆணையின் படியும், சிவகங்கை கலெக்டரின் உத்தரவின் படியும், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின் படியும், சிவகங்கை மண்டலத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில், கண்டனூர் பேரூராட்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்துவரி, நூலக வரி, திடக்கழிவு சேவைக் கட்டணம், தண்ணீர் கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகிய அனைத்தும் 100 சதவீதம் நிலுவையின்றி வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    கண்டனூர் பேரூ ராட்சியில் 2022-23-ம் ஆண்டில் சொத்துவரி சீராய்வு பணிகள் முடிக்கப்பட்டும், அதன் விவரங்களை என்.ஐ.சி. -ல் அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டும், 27.10.2022 முதல் 11.1.2023 வரையுள்ள 77 நாட்களில், குறுகிய காலத்திற்குள் 100 சதவீதம் வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த பேரூராட்சியில் 2022-23- ம் ஆண்டு வரி மற்றும் வரியில்லா இனங்களை வரித்தண்டலர் நாவுக்கரசு, இளநிலை உதவியாளர்கள் ரவி, யோகா, குடிநீர் மோட்டார் இயக்குபவர் ராகுல்ராஜா மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஒன்றிணைந்து 100 சதவீதம் வசூல் செய்து முடித்துள்ளனர்.

    மேலும் தமிழ்நாட்டில் கண்டனூரை முன்மாதிரி பேரூராட்சியாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பி னர்கள் ஆகியோர் 100 சதவீத வரி வசூல் செய்யும் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

    வரும் காலங்களில், தமிழக அரசால் தெரிவிக்கப்படும் அனைத்து நலத்திட்டப் பணிகளையும் கண்டனூர் பேரூராட்சி மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பெலிக்ஸ் தெரிவித்தார்.

    • கமிஷனர் தலைமையில் மாநகராட்சி வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.
    • உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி விதிப்புகள் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் கமிஷனர் தலைமையில் மாநகராட்சி வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. மண்டல உதவி கமிஷனர்கள், வருவாய் பிரிவினர் கலந்து கொண்டனர்.

    இதில் மாநகராட்சிக்கு வர வேண்டிய வரியினங்கள், குத்தகை, வாடகை, உரிமக் கட்டணம் உள்ளிட்ட வருவாய் இனங்கள் வசூல் பணி, நிலுவையில் உள்ள வரியினங்கள் விவரம், புதிய சொத்து வரி விதிப்பு பதிவேற்றம் செய்யும் பணி ஆகியன குறித்து விரிவாக ஆய்வு நடத்தி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் மாநகராட்சிக்கு வரவேண்டிய நிலுவை வரியினங்களை வசூலிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். நிலுவையில் உள்ள வரியினங்களை இம்மாத இறுதிக்குள் 70 சதவீதம் வரையும், மார்ச் 31ந் தேதிக்குள் 100 சதவீதமும் வசூலிக்க வேண்டும்.குடிநீர் கட்டண நிலுவை உள்ள கட்டடங்களில் இணைப்பு துண்டிக்க வேண்டும். தொழில்வரி வகையில் உரிய மாற்றம் செய்து வசூலிக்க வேண்டும். தொழில் வரி வசூல் குறித்து உரிய அலுவலகங்களுக்கு தகவல் அளித்து முழுமையாக வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.

    தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள மாநகராட்சி பகுதியில் தொழில் வரி விதிப்பு குறைவாக உள்ளது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி விதிப்புகள் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது 

    • மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
    • ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன.

    5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 2021-22-ம் நிதியாண்டில் மாநகராட்சி சார்பில் ரூ.150 கோடி நிலுவை தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டது.

    அதேபோல் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சொத்துவரி வசூலை தீவிரப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். இதன் காரணமாக தற்போது வரை ரூ.182 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று 73-வது வார்டு, பொன்னையராஜபுரம் வார்டு அலுவலகம், 40-வது வார்டில் பெரியதோட்டம் பகுதியில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    நடப்பு நிதியாண்டு மற்றும் கடந்த நிதியாண்டின் நிலுவை தொகை என மொத்தம் ரூ.524 கோடி சொத்து வரி வசூல் செய்ய வேண்டியுள்ளது. இதில் ரூ.210 கோடி வரை வரி வசூல் செய்யபட்டுள்ளது.

    இதில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சொத்து வரி தொகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வசூல்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக சொத்துவரியை நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், மாா்ச் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×