search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளுக்கே நேரில் சென்று  வரி வசூலில் ஈடுபட்ட காங்கயம் நகராட்சி தலைவர்-ஆணையர்
    X

    கோப்புபடம். 

    வீடுகளுக்கே நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்ட காங்கயம் நகராட்சி தலைவர்-ஆணையர்

    • நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், கவுன்சிலா் இப்ராஹிம் கலிலுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா். 
    • முஸ்லீம் வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்களை நகா்மன்றத் தலைவா், நகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் வீடுகளுக்கே நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா்.

    காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் மற்றும் நகராட்சி வருவாய் அலுவலா்கள் 4வது வாா்டுக்கு உட்பட்ட சத்திரம் வீதி, முஸ்லீம் வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 50 வீடுகளில் சொத்துவரி, குடிநீா்க் கட்டணமாக ரூ.40 ஆயிரம் வசூலானது. நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், கவுன்சிலா் இப்ராஹிம் கலிலுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×