என் மலர்
நீங்கள் தேடியது "மாநகராட்சி"
- வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
- மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக் குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டிடங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகி உள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கழுத்தில் சங்கிலியால் கட்டி அதனை உரிமையாளர் கையில் பிடித்திருக்க வேண்டும்.
- பாதுகாப்பு விதிகளை மீறி நாய்களை யாராவது தெருக்களில் திரியவிட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ராட்வைலர் நாய்களை போன்று 23 வகையான வெளிநாட்டு நாய்களை இந்தியாவில் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோர்ட்டு மூலமாக விலங்குகள் நல ஆர்வலர்கள் அதற்கு தடை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்கிற விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
ராட்வைலர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி அதனை முழுமையாக மீறியுள்ளார். இதையடுத்து அவரது 2 நாய்களையும் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2 நாய்களும் மரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது, கழுத்தில் சங்கிலியால் கட்டி அதனை உரிமையாளர் கையில் பிடித்திருக்க வேண்டும். வாய் மூடியிருக்கும் வகையில் 'மசூல்' என்று அழைக்கப்படும் கவசத்தையும் கண்டிப்பாக நாயின் முகத்தில் அணிவித்திருக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு விதிகளை மீறி நாய்களை யாராவது தெருக்களில் திரியவிட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக பொது மக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






