search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kandanur Municipality"

    • கண்டனூர் பேரூராட்சியில் 100 சதவீதம் வரி வசூலானது.
    • கண்டனூர் பேரூராட்சி மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பெலிக்ஸ் தெரிவித்தார்.

    காரைக்குடி

    பேரூராட்சிகளின் இயக்குநரின் ஆணையின் படியும், சிவகங்கை கலெக்டரின் உத்தரவின் படியும், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின் படியும், சிவகங்கை மண்டலத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில், கண்டனூர் பேரூராட்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்துவரி, நூலக வரி, திடக்கழிவு சேவைக் கட்டணம், தண்ணீர் கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகிய அனைத்தும் 100 சதவீதம் நிலுவையின்றி வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    கண்டனூர் பேரூ ராட்சியில் 2022-23-ம் ஆண்டில் சொத்துவரி சீராய்வு பணிகள் முடிக்கப்பட்டும், அதன் விவரங்களை என்.ஐ.சி. -ல் அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டும், 27.10.2022 முதல் 11.1.2023 வரையுள்ள 77 நாட்களில், குறுகிய காலத்திற்குள் 100 சதவீதம் வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த பேரூராட்சியில் 2022-23- ம் ஆண்டு வரி மற்றும் வரியில்லா இனங்களை வரித்தண்டலர் நாவுக்கரசு, இளநிலை உதவியாளர்கள் ரவி, யோகா, குடிநீர் மோட்டார் இயக்குபவர் ராகுல்ராஜா மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஒன்றிணைந்து 100 சதவீதம் வசூல் செய்து முடித்துள்ளனர்.

    மேலும் தமிழ்நாட்டில் கண்டனூரை முன்மாதிரி பேரூராட்சியாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பி னர்கள் ஆகியோர் 100 சதவீத வரி வசூல் செய்யும் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

    வரும் காலங்களில், தமிழக அரசால் தெரிவிக்கப்படும் அனைத்து நலத்திட்டப் பணிகளையும் கண்டனூர் பேரூராட்சி மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பெலிக்ஸ் தெரிவித்தார்.

    ×