என் மலர்

    நீங்கள் தேடியது "Tax"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடப்பாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் போனஸ் வழங்கப்படும்
    • செலுத்த வேண்டிய கட்டணத்தில் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் நகராட்சியில் நடப்பாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் போனஸ் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    இது தொடா்பாக நகராட்சி ஆணையா் (பொறுப்பு) எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- வரிவசூல் செய்வதில் நகராட்சி நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2023 - 24 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியினை அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்த நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீா்க் கட்டணம், இதர வரியினங்களை பொதுமக்கள் முறையாகச் செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் ‘கியூ ஆர்’ கோடு ஒட்டும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • கியூஆர்’ கோடு மூலம் வரிகள், புகார்களை வீடுகளில் இருந்து செய்ய முடியும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார அலுவலர் சாகுல் அமீது ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாநகராட்சியில் வீடுவீடாக 'கியூ ஆர்' கோடு ஒட்டும் மணி தீவிரமடைந்துள்ளது.

    அதன்படி தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை சந்திப்பு செல்வி அம்மன் கோவில் பகுதியில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் ஜானகிராமன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் சங்கர், மகாலட்சுமி, சந்துரு, இசக்கி, ஆறுமுகம், பிரேமா, கணேசன், முருகன், வகாப், ராஜசேகர், சுரேஷ், கிருஷ்ணன் ஆகியோரை கொண்ட குழுவினர் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் 'கியூ ஆர்' கோடு ஒட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த 'கியூஆர்' கோடு மூலம் சொத்து வரி, தொழில்வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரைபட அனுமதி தொழில் நிலுவைத் தொகை, தெருக்களில் உள்ள புகார்கள் அனைத்தையும் வீடு மற்றும் கடைகளில் இருந்து செய்ய முடியும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருவாய் மாவட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று வணிக வரி மாவட்டங்களுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
    • வணிக வரி வசூல் நிலவரம்,வணிக வரி சார்ந்த பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

    திருப்பூர்:

    ஈரோடு கோட்டத்தின் கீழ் திருப்பூரில் உள்ள 2 வணிக வரி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. வருவாய் மாவட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று வணிக வரி மாவட்டங்களுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

    கோட்ட அலுவலகம் செயல்பட அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரிலுள்ள ஏ.இ.பி.சி.,க்கு சொந்தமான கட்டடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கோட்ட வணிக வரித்துறை இணை கமிஷனர் லட்சுமி பாக்கியா தனீரு, திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் வணிக வரி மாவட்ட துணை கமிஷனர் முருககுமார் மற்றும் உதவி கமிஷனர்கள், வணிக வரி அலுவலர்கள் பங்கேற்றனர். வணிக வரி வசூல் நிலவரம்,வணிக வரி சார்ந்த பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். அலுவலக செயல்பாடுகளை பார்வையிட்டு ஆவணங்களை தணிக்கை செய்தார்.

    திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரவி உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள், இணை கமிஷனரை சந்தித்து வணிக வரி கோட்ட அலுவலகத்தை விரைவில் திறக்கவேண்டும்.ஆர்டர் குறைவால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றன. இதனால் வரி செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வரி வசூலில், அதிகாரிகள் கடுமைகாட்டக்கூடாது என வரி பயிற்சியாளர் கூட்டமைப்பினர் இணை கமிஷனரிடம் தெரிவித்தனர்.

    ஆய்வு குறித்து இணை கமிஷனரிடம் கேட்டபோது, இது வழக்கமான ஆய்வுதான். திருப்பூரில் வணிக வரி கோட்ட அலுவலகம் செயல்பட உள்ள கட்டடத்தை பார்வையிட்டுள்ளோம். அரசு உத்தரவு வந்தவுடன், விரைவில் கோட்ட அலுவலகம் செயல்பாட்டை தொடங்கும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நெல்லை மாநகராட்சியை கலைக்க கோரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. இதனால் மக்களுக்கு தேவை யான திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்ட தாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சியை கலைக்க கோரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா சார்பில் மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது. அந்த போஸ்டரில், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே. நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என்று குறிப்பிட்டுள்ளனர்.

    மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அலுவலகத்தின் அருகிலும், மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.
    • சொத்துவரி தொகையை வருகிற 30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளவும்,இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளவேண்டும்.

    கடலூர்:

    மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- தமிழ்நாடு முதல்- அமைச்சர் உத்தரவின்படி நகர்புற உள்ளாட்சிகளில் ஒவ்வொரு அரையாண்டிலும் 30 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மங்கலம்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 2023 - 24- ம் ஆண்டின் முதல் அரையாண்டு சொத்துவரி தொகையை வருகிற 30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளவும். இந்த அறிய வாய்ப்பை மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி வருகின்றனர்.
    • ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி சட்ட விதிமுறைகளின் படி ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுகளுக்கான சொத்து வரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

    ஆனால் வரி விதிப்பு தாரர்கள் பெரும்பாலும் செப்டம்பர், மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி வருகின்றனர்.

    நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

    எனவே தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி விதிப்பு தாரர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் அதிகளவில் சொத்து வரியை மாநகராட்சிக்கு செலுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உரிம கட்டணம் 11 மாதங்களுக்கு ஒருமுறை 8 சதவீத அடிப்படையில் உயர்த்தப்படும்.
    • சரக்கு மற்றும் சேவைவரி உரிம கட்டணத்திற்கு 18 சதவீதம் தனியாக செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகையில் சுமார் 36658 சதுர அடி இடத்தில் 8328 சதுர அடி கட்டிடம் உள்ளது. அதில் 11 கடைகள் மற்றும் 2 அலுவலக அறைள் காலியாக உள்ளது.

    இந்த கடைகள் மற்றும் அலுவலக அறைகள் மாதாந்திர உரிம கட்டணம் அடிப்படையில் வாடகைக்கு வழங்கிட ஒப்பந்த விலைப்புள்ளிகள் இதன் மூலம கோரப்படுகிறது.

    உரிம கட்டணம் ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். மின்கட்டணம் உரிமதாரரால் செலுத்தப்பட வேண்டும். முன் வைப்பு தொகையானது உரிம கட்டணத்தின் 11 மாதங்களுக்கான மொத்த தொகையை செலுத்த வேண்டும்.

    உரிம கட்டணம் 11 மாதங்களுக்கு ஒருமுறை 8 சதவீத அடிப்படையில் உயர்த்தப்படும். மேலும் அரசு விதிகளின் படி சரக்கு மற்றும் சேவைவரி உரிம கட்டணத்திற்கு 18 சதவீதம் தனியாக செலுத்த வேண்டும்.

    எனவே விருப்பம் உள்ளவர்கள் அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது ஒப்பந்த விலைப்புள்ளியினை மூடிய உறையில் முத்திரையிடப்பட்டு கடை எண்யை பதிவு செய்து ஒப்பந்த விலைப்புள்ளி என்பதனை தெளிவாக குறிப்பிட்டும், செயலாளர், ராணுவத்தினர் மாளிகை, தலைமை தபால் நிலையம் எதிரில், தஞ்சாவூர்-01 என்னும் முகவரியில் சமர்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் ஒப்பந்த விலைப்புள்ளிகள் எந்த காரணத்திற்காகவும் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேண்டீன் நடத்திட கடைகள் ஒதுக்கப்பட மாட்டாது.

    இந்த ஒப்பந்த விலைப்புள்ளி அறிவிப்பிற்கான விலைப்புள்ளி சமர்பிக்கும் கடைசி தேதி நீட்டிப்பு செய்யவோ அல்லது இந்த அறிவிப்பை முழுமையாக ரத்து செய்யவோ தஞ்சாவூர் மாவட்ட ராணுவத்தினர் மாளிகை நிர்வாகத்திற்கு மட்டுமே முழு அதிகாரம் உண்டு. மேலும் ஒப்பந்த விலைப்புள்ளியின் மீது இறுதி முடிவு தஞ்சாவூர் மாவட்ட ராணுவத்தினர் மாளிகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் வரி பாக்கி மற்றும் வாடகை பாக்கி வசூல் செய்ய மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தற்போது வரி மற்றும் வாடகை பாக்கி கணிசமாக வசூலாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் வள்ளியம்மை பஜார் உள்ளது. இந்த பஜாரில் 16 கடைகளுக்கு வரி செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டிகளை பஜாரின் வாசலில் வைத்து கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் வள்ளியம்மை பஜாரில் உள்ள 16 கடைகளுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு வரி பாக்கி என குறிப்பிட்டு அந்தந்த கடைகளில் இறுதி நோட்டீஸ் ஒட்டினர். இதில் மூன்று நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் கடைகளில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் வரி, சொத்து வரி, காலி நிலமனை வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டாமல் நிலுவையில் உள்ளவர்கள் வரியை விரைந்து செலுத்த வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகங்களில் நோட்டீஸ் அனுப்பியும் தொழில் வரி, சொத்து வரியை செலுத்தாத கடைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கை பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்திருப்பதை அறிந்த கடை உரிமையாளர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள வரி பாக்கியினை நகராட்சிக்கு செலுத்தினார்கள். இதனால் வரி செலுத்திய கடைகளுக்கு ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

    ஒரே நாளில் மட்டும் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வரி செலுத்தாத கடைகள் மீது ஜப்தி நடவடிக்கை செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விரைந்து நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
    • ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன.

    5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 2021-22-ம் நிதியாண்டில் மாநகராட்சி சார்பில் ரூ.150 கோடி நிலுவை தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டது.

    அதேபோல் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சொத்துவரி வசூலை தீவிரப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். இதன் காரணமாக தற்போது வரை ரூ.182 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று 73-வது வார்டு, பொன்னையராஜபுரம் வார்டு அலுவலகம், 40-வது வார்டில் பெரியதோட்டம் பகுதியில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    நடப்பு நிதியாண்டு மற்றும் கடந்த நிதியாண்டின் நிலுவை தொகை என மொத்தம் ரூ.524 கோடி சொத்து வரி வசூல் செய்ய வேண்டியுள்ளது. இதில் ரூ.210 கோடி வரை வரி வசூல் செய்யபட்டுள்ளது.

    இதில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சொத்து வரி தொகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வசூல்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக சொத்துவரியை நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், மாா்ச் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo