search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "population"

    • இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி ஆகவும் சீனாவின் மக்கள் தொகை 141.07 கோடியாகவும் உள்ளது.
    • நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது.

    இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகப் பணக்காரருக்குமான எலான் மஸ்க் மக்கள் தொகை வீழ்ச்சி மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.

    இந்தியாவின் மக்கள் தொகை 2100 க்குள் 110 கோடிக்கும் கீழ் குறையும் என்றும் சீனாவின் மக்கள் தொகை 73 கோடிக்கு வரும் என்று சுட்டிக்காட்டும் 2020 கிராப் ஒன்றை பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    2023 புள்ளிவிவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி ஆகவும் சீனாவின் மக்கள் தொகை 141.07 கோடியாகவும் உள்ளது.

    சமீபத்தில் வெளியான ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகிட்டவற்றின் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது.

    வருங்காலங்களில் இந்த வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் மக்கள் தொகை வீழ்ச்சியை சமாளிக்க மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நிறைய சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும்
    • சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது.

    மக்கள் தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும் என்பதால் இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

    நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியைப் பேசிய அவர், ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே அழிந்து விட்டன.

    குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும் என மக்கள் தொகை அறிவியல் காட்டுகிறது. 1998 அல்லது 2022ல் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1க்கு கீழே இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

    மக்கள் தொகை குறைந்த சமூகத்தை அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும். எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் மோகன் பகவத்தின் கருத்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

    இந்நிலையில் மோகன் பகவத் கருத்தை காட்டமாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி, "நாங்கள் (பெண்கள்) தொடர்ந்து இனப்பெருக்கம் செய்யும் முயல்களா? வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் ஏன் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று மோகன் பகவத் சொல்ல வேண்டும். மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்தால், பள்ளிக் கட்டணம், விமானக் கட்டணங்கள் மற்றும் பள்ளிக் கல்விச் செலவுகளை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத், "முதலில் உங்கள் பாஜக உறுப்பினர்களுக்கு இந்த அறிவுரையை சொல்லுங்கள். உங்கள் அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறது. அதே சமயம் குழந்தை பிறப்பை அதிகரிப்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். பேசுகிறது. இது ஒரு பாசாங்குத்தனமான கொள்கை. ஆர்எஸ்எஸ் தலைவர் ஏன் பெண்கள் பாதுகாப்பு போன்ற இந்த விஷயங்களைப் பற்றி பேசவில்லை?" என்று தெரிவித்தார்.

    மோகன் பகவத் கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய ஐதராபாத் எம்.பி. ஒவைசி, "நான் மோகன் பகவத்திடம் கேட்க விரும்புகிறேன். அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் மக்களுக்கு அவர் என்ன கொடுப்பார். அதிக குழந்தைகளைப் பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் ₹1500 கொடுப்பாரா? இதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்துவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம்.
    • யாரும் அழிக்க வேண்டாம், அது தானாகவே அழிந்து விடும்

    மக்கள் தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும் என்பதால் இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

    நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியைப் பேசிய அவர், ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே அழிந்து விட்டன.

    குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும் என மக்கள் தொகை அறிவியல் காட்டுகிறது. 1998 அல்லது 2022ல் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1க்கு கீழே இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

     

    மக்கள் தொகை குறைந்த சமூகத்தை அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும். எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    சீனாவை பின்னுக்குத்தள்ளி  இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் மோகன் பகவத்தின் கருத்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மோகன் பகவத் கருத்துக்கு பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மோதிலால் நேரு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
    • சீனா போன்ற நடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனிநபர் நில இருப்பு அதிகமாக உள்ளது.”

    சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தி, இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவது பற்றி பேசியுள்ளார்.

    மோதிலால் நேரு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "இந்தியா மக்கள் தொகை, தனிநபர் நில இருப்பு மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது."

    "இந்த அவசர காலக்கட்டத்தில் மக்கள் தொகை கட்டுபாட்டை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை. இதே போன்ற சூழ்நிலை இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்தால், இந்தியாவில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனிநபர் நில இருப்பு அதிகமாக உள்ளது."

    "இதை கருத்தில் கொண்டு அனைவரும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இது நம் அனைவரின் கடமை மற்றும் பொறுப்பும் கூட. ஒரு தலைமுறை இவ்வாறு தியாகம் செய்தால் தான் அடுத்து வரும் தலைமுறையின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். என பெற்றோர்கள், சொந்தங்கள், ஆசிரியர்கள் செய்த தியாகத்தினால் தான் நான் இன்று உங்கள் முன் சிறப்பு விருந்தினராக நிற்கிறேன்," என்றார்.

    • இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.451 பில்லியனாக உள்ளது.
    • சீனா அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகையில் பாதியை இழக்க உள்ளது.

    இந்தியாவின் மக்கள்தொகை 1.45 பில்லியன், 2085-ல் சீனாவை விட இரட்டிப்பாகும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவின் மக்கள்தொகை 2100-ம் ஆண்டு 1.5 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சீனாவை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம் ஆகும். வளர்ச்சிக்கான குடியேற்றத்தில் முன்னணி நாடுகளில் அமெரிக்கா உள்ளது.

    இந்தியா மற்றும் சீனாவை தொடர்ந்து 2100 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் (511 மில்லியன்), நைஜீரியா (477 மில்லியன்), காங்கோ ஜனநாயகக் குடியரசு (431 மில்லியன்), மற்றும் அமெரிக்கா (421 மில்லியன்) மக்கள்தொகையை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தற்போதைய மக்கள்தொகை 345 மில்லியன்.

    இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.451 பில்லியனாக உள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட ஒன்பது மில்லியன் அதிகம். 2011-க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் மக்கள்தொகை 2054-ல் 1.692 பில்லியன் ஆகவும், 2061-ல் 1.701 பில்லியன் ஆகவும் உயரும் என்று அறிக்கை கூறுகிறது.

    சீனா அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகையில் பாதியை இழக்க உள்ளது. இந்திய மக்கள்தொகையின் தற்போதைய சராசரி வயது 28.4 ஆண்டுகள் ஆகும், இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனா 39.6 ஆண்டுகள் மற்றும் அமெரிக்கா 38.3 ஆண்டுகள் ஆகும். 2100-ல் இந்த எண்கள் முறையே 47.8 ஆண்டுகள், 60.7 ஆண்டுகள் மற்றும் 45.3 ஆண்டுகள் ஆகும்.

    • 1950 முதல் 2015 வரையிலான மக்கள் தொகையில் இந்து மக்கள் தொகை 7.82 சதவீதம் குறைந்துள்ளது.
    • அதேவேளையில் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வில் தகவல்.

    பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் சிறுபான்மையினர் மக்கள் தொகை- நாடுகள் இடையேயான நிலை என்ற பெயரில் விரிவான ஆய்வை நடத்தியது.

    அந்த ஆய்வறிக்கையில் 1950 முதல் 2015 வரையிலான மக்கள் தொகையில் இந்து மக்கள் தொகை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதேவேளையில் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக பிரபலமான தனியார் தொலைக்காட்சியின் கன்னட மொழி சேனலில் விவாதம் நடைபெற்றது. அப்போது சதம் வீதத்தை இந்தியாவின் இந்துக்களை இந்திய கொடியிலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம்களை பாகிஸ்தான் கொடியிலும் காண்பித்திருந்தது.

    இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களை எப்படி பாகிஸ்தான் தேசியக் கொடியிலும் என காட்டலாம் என்று விமர்சனம் எழுந்தது. தற்போது இது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

    சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தொலைக்காட்சி நிறுவனம் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்கியுள்ளது.

    • இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது.
    • அதேவேளையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    1950 முதல் 2015 காலக்கட்டத்தில் இந்தியாவில் இந்து மக்கள் சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது:-

    இந்து மக்கள் தொகை குறைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலே காரணம். இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது.

    ஆனால் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது. 1950-ல் 9.84 சதவீதமாக இருந்தது. தற்போது 17.09 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இது அனைத்தும் காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால் நடந்துள்ளது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களின் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1950-ல் கிறிஸ்தவ மக்கள் தொகை 2.24 சதவீதமாக இருந்த நிலையில், 2015-ல் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 5.38 சதவீதம் உயர்வாகும். ஜெயின் சமூகத்தினர் தொகை 1950-ல் 0.45 சதவீதமாக இருந்தது. 2015-ல் 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    சீக்கிய சமூகத்தினர் 1950-ல் 1.24 சதவீதம் இருந்தனர். 2015-ல் 1.85 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இது 6.58 சதவீதம் உயர்வாகும். பார்சி சமூகத்தினர் 1950-ல் 0.03 சதவீதம் இருந்தனர். 2015-ல் 85 சதவீதம் குறைந்து 0.004 சதவீதமாக குறைந்துள்ளனர்.

    • கடந்த ஏப்ரல் மாதம் 142.86 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடம் பிடித்தது.
    • சீனா 142.57 கோடி என்ற எண்ணிக்கையுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.

    உலக நாடுகளின் மக்கள் தொகை குறித்து ஐ.நா.சபை அவ்வப்போது ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடும். மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்திருப்பதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.


    கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா உலக மக்கள்தொகை எண்ணிக்கையில் சீனாவை தாண்டி முதலிடம் பிடித்தது. அதாவது, 142.86 கோடி மக்கள்தொகை கொண்டு இந்தியா இதில் முதலிடமும், சீனா 142.57 கோடி என்ற எண்ணிக்கையுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.
    • கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

    உலக மக்கள்தொகை தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் 26-ந் தேதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.

    உலக மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது.

    மக்களின் சராசரி வயது 32-ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060-ம் ஆண்டு அது 39-ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

    கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங் காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண் டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

    சென்னை:

    மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளு மன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அப்போது தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

    அப்போது உத்தரபிரதேசத்துக்கு 11 பாராளுமன்ற தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் 8 பாராளுமன்ற தொகுதிகள் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் தற்போது இருக்கும் தமிழக எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 31 பாராளுமன்ற தொகுதிகளாக மாறலாம். 42 தொகுதிகள் உள்ள ஆந்திரா, தெலுங்கானாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறையலாம்.

    இதேபோல் கேரளாவிலும் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 20-ல் இருந்து 12ஆக குறையலாம். கர்நாடகாவில் பாராளுமன்ற தொகுதிகள் 28-ல் இருந்து 26 ஆக குறையலாம்.

    தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு தொகுதியிலும், ஓரளவு சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வது தான். அப்போதுதான் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும்.

    தொகுதி மறுவரையால் உ.பி.க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்துக்கு 4 தொகுதிகளும், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம்.

    தொகுதி வாக்காளர்கள் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் தற்போது ஒரு எம்.பி. 30 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒரு எம்.பி. 18 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். தொகுதி மறுவரையறைக்கு மத்திய அரசு கடந்த 1976-ம் ஆண்டு தடைவிதித்தது. இந்த தடை தற்போது 2026-ம் ஆண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தடை காரணமாக பாராளுமன்றத்தில் சம நிலையற்ற பிரதிநிதித்துவம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர்.
    • பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர். அதன் பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.

    பாதிப்பு

    இதனால் திண்டமங்கலம் ஊராட்சியில் அப்பிநாயக்கன்பாளையம், நல்லகவுண்டம்நாளையம், திண்டமங்கலம், வடக்குபட்டி மற்றும் திண்டமங்கலம் புதூர் ஆகிய 5 கிராமங்களில் அடிப்படை வசதிகளான தெரு அமைப்பது, திண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தராமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்க ப்பட்டுள்ளன. இதே போல ஊராட்சியில் உள்ளார். 5 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாதசூழ்நிலை உள்ளது.

    மனு

    திண்டமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொகையை குறைத்து காட்டி உள்ளதால் 15- வது நிதிக்குழு மானியத்தில் நிதி ஒதுக்கப்படாததால் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெரு அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் , இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக திண்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

    • மக்கள் தொகை தின விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முடிவில் ஊராட்சி மன்ற செயலர் சோணையா நன்றி கூறினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை கிராமத்தில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், துணை தலைவர் சக்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட தொழில் மைய ஆய்வாளர் ராஜேஷ், வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் சோணையா நன்றி கூறினார்.

    ×