என் மலர்
நீங்கள் தேடியது "கருவுறாமைக்கான காரணம்"
- நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர்.
- ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 1.46 பில்லியனாக (146 கோடியாக) அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள்தொகை அறிக்கை (UNFPA's 2025 State of World Population Report) தெரிவித்துள்ளது.
UNFPA அறிக்கையின்படி, 2025 இல் 1.46 பில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். இது சுமார் 40 ஆண்டுகளில் 1.7 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) தற்போது ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகளாகக் குறைந்துள்ளது, இது மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற மாற்றீட்டு விகிதத்திற்கும் (Replacement Rate) கீழே உள்ளது.
இந்தியாவின் 24% மக்கள் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 17% பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள், 26% பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 7% ஆக உள்ளது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
1960 இல் ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட 6 குழந்தைகள் இருந்த நிலையில், இன்று சராசரியாக 2 குழந்தைகள் என்ற நிலைக்கு குறைந்துள்ளதற்கு கல்வி மற்றும் இனப்பெருக்க சுகாதார அணுகல் மேம்பட்டதே காரணம் என UNFPA தெரிவித்துள்ளது.
இனப்பெருக்க நோக்கங்களை பூர்த்தி செய்ய இயலாமையே உண்மையான கருவுறுதல் நெருக்கடி என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பாலினம், கருத்தடை மற்றும் குடும்பம் தொடங்குவது பற்றிய சுதந்திரமான மற்றும் தகவலறிந்த இனப்பெருக்க தேர்வுக்கான மக்களின் திறனை மேம்படுத்துவதே இதற்கு மாற்று வழி என்று அறிக்கை கூறுகிறது. அனைவருக்கும்
UNFPA இந்தியா பிரதிநிதி ஆண்ட்ரியா எம் வோஜ்னார் கூறுகையில், கருவுறுதல் விகிதங்களை குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தாலும், மாநிலங்கள், சாதிகள் மற்றும் வருமானக் குழுக்கள் இடையே ஆழமான சமத்துவமின்மை நீடிப்பதாக தெரிவித்தார்.
- கருத்தரிப்பு நிகழவில்லை எனில் மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.
- இருவருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மலட்டுத்தன்மை என்பது கணவன் மனைவி இருவரும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் தொடர்ந்து ஒரு வருடங்கள் வரை கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அது கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.
இந்த கருவுறாமை என்பது பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களும் மலட்டுத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் என இருவருக்குமே கருவுறுதல் அல்லது மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்
ஒழுங்கற்ற மாதவிடாய்
மாதவிடாய் இல்லாமல் போவது
ஹார்மோன் பிரச்சனைகள்
ஃப்லோபியன் குழாய் அடைப்பு
செலியாக் நோய்
சிறுநீரக நோய்
எக்டோபிக் கர்ப்ப்பம்
இடுப்பு அழற்சி நோய்
பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள்
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
சிக்கிள் செல் இரத்த சோகை
எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பாலிப்கள்)
தைராய்டு நோய்
அதிக வயதை கொண்டிருத்தல்
உடல் பருமன் அல்லது மிக குறைவான எடை கொண்டிருப்பது
இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் இருப்பது.
ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்
வெரிகோஸ் வெயின் பிரச்சனை (விரிவாக்கபட்ட நரம்புகள்)
விந்தணுக்கள் வைத்திருக்கும் சாக்
மரபணு கோளாறுகள் (சிஸ்டிக், ஃபைப்ரோசிஸ்)
இறுக்கமான ஆடைகள் அணிவதால் விந்தணுக்கள் அதிக வெப்பத்தை சந்திதல்
விந்தணுக்கள் குறைவாக இருப்பது (டெஸ்டோஸ்ட்ரான் அளவு குறைவது)
முன் கூட்டிய விந்து வெளிபாடு
விந்தணுக்களின் வடிவம், இயக்கம், அது உள் செல்லும் நேரம் போன்ற குறைபாடு
மருத்துவ நிலைமகள் மற்றும் மருந்துகள் எடுத்துகொள்வது.






