search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "United Nations"

    • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐ.நா. தலைவர், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்.
    • ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 வது கூட்டத்தொடரின் தலைவராக பதவி வகிப்பவர் டென்னிஸ் பிரான்சிஸ். இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இவர், டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று சந்தித்தார்.

    ஐ.நா பொதுச்சபையின் தலைவரை இந்தியாவிற்கு வரவேற்ற முர்மு, காலநிலை மாற்றம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    • 5 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஐ.நா பொதுச்சபை தலைவர்
    • மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இன்று முதல் ஜன.26 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்ட ஐ.நா தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், "இந்தியா இரண்டாவது தீபாவளியை கொண்டாடும் இந்த நன்நாளில் டெல்லி-க்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இனிவரும் நாட்களில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு மற்றும் நிலைத்தன்மை பற்றிய பயனுள்ள விவாதங்களை எதிர்பார்க்கிறோம்" என பதிவிட்டிருந்தார்.

    5 நாள் பயணமாக இந்தியா வந்த ஐ.நா தலைவர், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு மும்பை செல்கிறார். அங்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். மேலும் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    • காசாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
    • இரு தரப்பினரும் போரை கைவிட வேண்டும் என்றார் டெட்ரோஸ்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் வசம் வந்து விட்டது. பாலஸ்தீன பொதுமக்களுக்கு மருந்து, உணவு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

    இந்நிலையில், காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் ஒன்றை உறுதியாக கூற விரும்புகிறேன். ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் 1200 பேர் இறந்ததையும், 200 பேருக்கு மேற்பட்டவர்களை பணய கைதிகளாக கொண்டு சென்றதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

    ஆனால், இஸ்ரேலின் பதில் தாக்குதலினால் பல லட்சம் பொதுமக்கள் காசாவில் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்து விட்டன. சுத்தமான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு கீழேயே புதைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்த செயலையும் நியாயப்படுத்த முடியாது.

    இனி வெறும் பேச்சு வார்த்தைகளோ, தீர்மானங்கள் போடுவதோ போதாது. காசா மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இரு தரப்புமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

    ஐ.நா. அமைப்பு உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • கத்தார் நாடு சர்வதேச ஜனநாயக தினத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டியது.
    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    ஜனநாயகம் என்பது "democracy" என்ற கிரேக்க வார்த்தையின் தமிழாக்கம் ஆகும். கிரேக்க மொழியில் டெமோஸ் மற்றும் கிராடோஸ் என்ற இரு வார்த்தைகளை சேர்த்தது ஆகும். இந்த இரு வார்த்தைகளுக்கு குடிமகன் மற்றும் சக்தி என்று பொருள்படும். மனித உரிமைகளுக்கான மரியாதை அளித்தல், அடிப்படை சுதந்திரம் வழங்குவது மற்றும் சரியான கால இடைவெளியில் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்டவை ஜனநாயகத்தின் அடிப்படை கூறு என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

    எந்த ஒரு நாட்டில் மக்கள் தங்களுக்கான தலைவர்களை வாக்களித்து தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறதோ, அதனை ஜனநாயக நாடு என்று அழைக்கிறோம். மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்ற கருத்தை மக்களாட்சி என ஆபிரகாம் லிங்கன் தெரிவித்து இருக்கிறார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச ஜனநாயக தினம் உலகம் முழுக்க கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

     

    அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தீர்மானம் 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2008-ம் ஆண்டுல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தேசிய பாராளுமன்றங்கள் ஒருங்கிணைந்த சர்வதேச அமைப்பு தான் பாராளுமன்ற யூனியன். இந்த அமைப்பு தான் முதன் முதலாக 1997 செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் கத்தார் நாடு சர்வதேச ஜனநாயக தினத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வந்தது.

    இதன் பலனாகவே 2007, நவம்பர் 8-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற யூனியன் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாட வேண்டும் என்ற பரிந்துரை வழங்கி இருந்தது. இதன் காரணமாக 2008-ம் ஆண்டு முதல்-முறையாக இது தொடர்பான முதல் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.

    அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அமைப்புகளும் சர்வதேச ஜனநாயக தினத்தை பிரத்யேக "கரு" ஒன்றை அறிவித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஜனநாயக உரிமைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், ஜனநாயக உரிமையின் அவசியம் பற்றியும் பல்வேறு அமைப்புகளும் உலகம் முழுக்க நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. 

    • ஐ.நா. சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு
    • 202.8 கிலோகிராம் மட்டுமே அதிகபட்சமாக வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டது

    அணு சக்தியை அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே உலக நாடுகள் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு.

    மேற்காசிய நாடான ஈரான், அணு சக்தியை அமைதி வழிக்கே பயன்படுத்துவதாக தெரிவித்து வந்தது. ஆனால், சர்வதேச அணு சக்தி அமைப்பு இதனை ஏற்க மறுத்தது. தேவைப்பபட்டால் உடனடியாக அணு ஆயுதங்களை உருவாக்கி கொள்ளும் வகையில் போதுமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் சேமித்து வைத்துள்ளதாக இந்த அமைப்பு கூறி வந்தது.

    2015-இல் உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அதிகபட்சமாக 202.8 கிலோகிராம் அளவு யுரேனியம் மட்டுமே அந்நாடு சேகரித்து வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறும் விதமாக சில வருடங்களாக அந்நாடு செயல்பட்டு வந்தது.

    இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. சமீபத்தில் இதை தணிக்கும் விதமாக இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதன்படி, இரு நாட்டின் சிறைகளிலும் உள்ள தங்கள் நாட்டு கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும், தென் கொரிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட ஈரானுக்கு சொந்தமான பல நூறு கோடிகளை விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்பு கொண்டால், ஈரான் தனது அணு ஆயுத முயற்சிகளை மட்டுப்படுத்தி கொள்வதாக கூறி இருந்தது.

    இந்நிலையில், ஈரானின் அணு சக்தி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் சர்வதேச அணு சக்தி அமைப்பு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கடந்த பிப்ரவரியில் 87.5 கிலோகிராம் எனும் அளவிலும், பிறகு மே மாதம் 114 கிலோகிராம் எனும் அளவிலும் இருந்த 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனிய சேகரிப்பு, தற்போது 121.6 கிலோகிராம் எனும் அளவிலேயே உள்ளது. ஆக யுரேனிய சேகரிப்பை ஈரான் குறைத்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    ஒரு அணு ஆயுதத்தை பரிசோதனை செய்ய தேவைப்படும் எந்தவிதமான அணு ஆயுத நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவு அமைப்புகள் கடந்த மார்ச் மாதம் கூறி வந்தன.

    ஆயுத மட்ட அளவிலான யுரேனியம் என்பது 90 சதவீதம் செறிவூட்டப்பட்டதாகும். 60 சதவீதம் செறிவுட்டப்பட்ட யுரேனியம், இதிலிருந்து சற்றே குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
    • தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது.

    நியூயார்க்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் கருங்கடல் தானிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது.

    இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், தானிய ஒப்பந்ததில் இருந்து ரஷியா விலகியதால் தானியங்களின் விலை உயர்வு, கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஐ.நா.வின் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறும்போது, "தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. பசி-பட்டினியால் வாடுவார்கள். இதன் காரணமாக பலர் இறக்கக் கூடும் என்றார்.

    போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளை சென்றடையவில்லை என்று ரஷியா புகார் தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்கு செல்லும் எந்த கப்பலையும் ராணுவ பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பலாக கருதப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

    அமைதிப்படைக்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது. #UnitedNation #AntonioGuterres
    நியூயார்க்:

    உலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

    அந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது.

    இதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

    ஐ.நா.சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், “கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, படை வீரர்களையும், போலீசாரையும் அனுப்பி ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்துள்ள நாடுகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,855 கோடி) செலுத்த வேண்டியது உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) செலுத்த வேண்டியது இருக்கிறது” என குறிப்பிட்டார்.  #UnitedNation #AntonioGuterres
    மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா தகவல் தெரிவித்தது. #Peacekeepers #MaliAttack
    பமாக்கோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியை 2012-ம் ஆண்டு மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அவர்களை 2013-ம் ஆண்டு பிரெஞ்சு படையினர் விரட்டியடித்தனர்.

    ஆனாலும் மாலியில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்குள்ள பயங்கரவாத குழுவினர் பிரபல அரசியல்வாதிகள், மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் தங்கியிருக்கும் இடங்களின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும் பொதுமக்களில் பலரை பிணைக் கைதிகளாக பிடித்துவைத்து, ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று வருகின்றனர்.



    இதனால், மாலியில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பிரசாரம் செய்வதற்காக ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு முகாமிட்டுள்ளனர். இதில் இந்தியா உட்பட பன்னாட்டுப் படைகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் மாலி நாட்டின் வடக்கு பகுதியில் அகுவெல்ஹோக் என்ற இடத்தில் உள்ள ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது ஆயுதமேந்தி வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. #Peacekeepers #MaliAttack

    நைஜீரியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். #NigeriaFloods #UnitedNations #Guterres
    நியூயார்க்:

    நைஜீரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல்வேறு ஆறுகளின் கரைகளில்  உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    மழையினால் ஏற்பட்ட  பெருவெள்ளம் மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பினால் சாலைகள், பாலங்கள் என உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 5.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் மூழ்கி பயிர்கள் அழுகி உள்ளன. வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்னர். 1310 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நைஜீரியாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.



    மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறினார். மேலும் இந்த கடினமான நேரத்தில் நைஜீரியாவுக்கு ஐநா உறுதுணையாக இருப்பதுடன், தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    ஐநா சார்பில் உணவு விநியோகம், அவசரகால மருத்துவ உதவி மற்றும் காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுகாதார பெட்டகங்கள் விநியோகம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஐநா அலுவலகம் தெரிவித்துள்ளது. #NigeriaFloods #UnitedNations #Guterres 
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக ஐ.நா கணித்துள்ளது. #Indonesiaquaketsunami
    வாஷிங்டன்:

    இந்தோனேசியாவில் சமீபத்தில் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தோன்றியது. இந்த நிலநடுக்கத்தினால் பல்வேறு கட்டிடங்கள் சிதைந்து, மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அன்று மாலையே சுனாமியும் அந்த நாட்டை தாக்கியது.



    இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ஐ.நா சபை, இந்தோனேசியாவில் 1 லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. #Indonesiaquaketsunami
    இந்தியாவில் 27 ஆண்டுகளில் மனிதன் வாழும் வயது 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளதாக ஐ.நா. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.#unitednations

    புதுடெல்லி:

    ஐ.நா. மனிதவள மேம்பாட்டு ஆணையம் மனிதன் உயிர்வாழும் வயது தொடர்பாக 189 நாடுகளில் ஆய்வு நடத்தியது.

    அதில் இந்தியா 189 நாடுகளில் 130-வது இடத்தை பிடித்து இருக்கிறது. 1990-ம் ஆண்டில் இந்தியாவில் மனிதன் உயிர்வாழும் வயது சராசரியாக 57.9 வருடமாக இருந்தது. 2017-ம் ஆண்டில் அது 68.8 வருடமாக அதிகரித்துள்ளது.

    இதன்மூலம் இந்தியாவில் மனிதனின் உயிர்வாழும் வயது 11 வருடம் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

    அதேபோல் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 1990-ல் 7.6 சதவீதமாக இருந்தது, 12.3 சதவிதமாக அதிகரித்துள்ளது.


    தனிமனிதனின் சராசரி வருவாய் 1,733-ல் இருந்து 6,353 ஆக அதிகரித்துள்ளது. மனிதவள குறியீடு 0.427-ல் இருந்து 0.640 ஆக உயர்ந்துள்ளது.

    வங்காள தேசத்தில் மனிதன் உயிர்வாழும் வயது 72.8 ஆகவும், பாகிஸ்தானில் 66.6 ஆகவும் உள்ளது. இந்தியாவில் பெண்குழந்தைகள் பிறப்பு 70.4 சதவீதமாகவும், வங்காள தேசத்தில் 74.6 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 67.7 சதவீதமாகவும் உள்ளது.

    ஆண்குழந்தை பிறப்பு இந்தியாவில் 67.3 சதவீதமாகவும், வங்காள தேசத்தில் 71.2 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 65.6 சதவீதமாகவும் உள்ளது. #unitednations

    மர்ம நபர்களால் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா சபை உறுப்பினர் மற்றும் அவரது மகன் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். #UnitedNations
    காபூல் : 

    கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். கடத்தல் சம்பவத்தின் போது கார் ஓட்டுனர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கடந்த மார்ச் மாதம் மீட்கப்பட்டது.

    இந்நிலையில் கடத்தி செல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் நாட்டின் ஐக்கிய நாடுகள் சபையின் செயல் தலைவர் இங்கிரிட் ஹெய்டன், இந்த கடத்தல் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். கடத்தலின் போது எங்களில் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானில் பணத்திற்காக நடக்கும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் வெளிநாட்டினர் பலர் அங்கு கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UnitedNations
    ×