என் மலர்

    நீங்கள் தேடியது "United Nations"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அமைதிப்படைக்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது. #UnitedNation #AntonioGuterres
    நியூயார்க்:

    உலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

    அந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது.

    இதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

    ஐ.நா.சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், “கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, படை வீரர்களையும், போலீசாரையும் அனுப்பி ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்துள்ள நாடுகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,855 கோடி) செலுத்த வேண்டியது உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) செலுத்த வேண்டியது இருக்கிறது” என குறிப்பிட்டார்.  #UnitedNation #AntonioGuterres
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா தகவல் தெரிவித்தது. #Peacekeepers #MaliAttack
    பமாக்கோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியை 2012-ம் ஆண்டு மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அவர்களை 2013-ம் ஆண்டு பிரெஞ்சு படையினர் விரட்டியடித்தனர்.

    ஆனாலும் மாலியில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்குள்ள பயங்கரவாத குழுவினர் பிரபல அரசியல்வாதிகள், மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் தங்கியிருக்கும் இடங்களின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும் பொதுமக்களில் பலரை பிணைக் கைதிகளாக பிடித்துவைத்து, ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று வருகின்றனர்.



    இதனால், மாலியில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பிரசாரம் செய்வதற்காக ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு முகாமிட்டுள்ளனர். இதில் இந்தியா உட்பட பன்னாட்டுப் படைகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் மாலி நாட்டின் வடக்கு பகுதியில் அகுவெல்ஹோக் என்ற இடத்தில் உள்ள ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது ஆயுதமேந்தி வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. #Peacekeepers #MaliAttack

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நைஜீரியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். #NigeriaFloods #UnitedNations #Guterres
    நியூயார்க்:

    நைஜீரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல்வேறு ஆறுகளின் கரைகளில்  உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    மழையினால் ஏற்பட்ட  பெருவெள்ளம் மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பினால் சாலைகள், பாலங்கள் என உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 5.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் மூழ்கி பயிர்கள் அழுகி உள்ளன. வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்னர். 1310 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நைஜீரியாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.



    மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறினார். மேலும் இந்த கடினமான நேரத்தில் நைஜீரியாவுக்கு ஐநா உறுதுணையாக இருப்பதுடன், தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    ஐநா சார்பில் உணவு விநியோகம், அவசரகால மருத்துவ உதவி மற்றும் காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுகாதார பெட்டகங்கள் விநியோகம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஐநா அலுவலகம் தெரிவித்துள்ளது. #NigeriaFloods #UnitedNations #Guterres 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக ஐ.நா கணித்துள்ளது. #Indonesiaquaketsunami
    வாஷிங்டன்:

    இந்தோனேசியாவில் சமீபத்தில் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தோன்றியது. இந்த நிலநடுக்கத்தினால் பல்வேறு கட்டிடங்கள் சிதைந்து, மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அன்று மாலையே சுனாமியும் அந்த நாட்டை தாக்கியது.



    இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ஐ.நா சபை, இந்தோனேசியாவில் 1 லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. #Indonesiaquaketsunami
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவில் 27 ஆண்டுகளில் மனிதன் வாழும் வயது 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளதாக ஐ.நா. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.#unitednations

    புதுடெல்லி:

    ஐ.நா. மனிதவள மேம்பாட்டு ஆணையம் மனிதன் உயிர்வாழும் வயது தொடர்பாக 189 நாடுகளில் ஆய்வு நடத்தியது.

    அதில் இந்தியா 189 நாடுகளில் 130-வது இடத்தை பிடித்து இருக்கிறது. 1990-ம் ஆண்டில் இந்தியாவில் மனிதன் உயிர்வாழும் வயது சராசரியாக 57.9 வருடமாக இருந்தது. 2017-ம் ஆண்டில் அது 68.8 வருடமாக அதிகரித்துள்ளது.

    இதன்மூலம் இந்தியாவில் மனிதனின் உயிர்வாழும் வயது 11 வருடம் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

    அதேபோல் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 1990-ல் 7.6 சதவீதமாக இருந்தது, 12.3 சதவிதமாக அதிகரித்துள்ளது.


    தனிமனிதனின் சராசரி வருவாய் 1,733-ல் இருந்து 6,353 ஆக அதிகரித்துள்ளது. மனிதவள குறியீடு 0.427-ல் இருந்து 0.640 ஆக உயர்ந்துள்ளது.

    வங்காள தேசத்தில் மனிதன் உயிர்வாழும் வயது 72.8 ஆகவும், பாகிஸ்தானில் 66.6 ஆகவும் உள்ளது. இந்தியாவில் பெண்குழந்தைகள் பிறப்பு 70.4 சதவீதமாகவும், வங்காள தேசத்தில் 74.6 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 67.7 சதவீதமாகவும் உள்ளது.

    ஆண்குழந்தை பிறப்பு இந்தியாவில் 67.3 சதவீதமாகவும், வங்காள தேசத்தில் 71.2 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 65.6 சதவீதமாகவும் உள்ளது. #unitednations

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மர்ம நபர்களால் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா சபை உறுப்பினர் மற்றும் அவரது மகன் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். #UnitedNations
    காபூல் : 

    கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். கடத்தல் சம்பவத்தின் போது கார் ஓட்டுனர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கடந்த மார்ச் மாதம் மீட்கப்பட்டது.

    இந்நிலையில் கடத்தி செல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் நாட்டின் ஐக்கிய நாடுகள் சபையின் செயல் தலைவர் இங்கிரிட் ஹெய்டன், இந்த கடத்தல் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். கடத்தலின் போது எங்களில் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானில் பணத்திற்காக நடக்கும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் வெளிநாட்டினர் பலர் அங்கு கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UnitedNations
    ×