என் மலர்
நீங்கள் தேடியது "United Nations"
உலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.
அந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது.
இதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், “கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, படை வீரர்களையும், போலீசாரையும் அனுப்பி ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்துள்ள நாடுகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,855 கோடி) செலுத்த வேண்டியது உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) செலுத்த வேண்டியது இருக்கிறது” என குறிப்பிட்டார். #UnitedNation #AntonioGuterres

நைஜீரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல்வேறு ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பினால் சாலைகள், பாலங்கள் என உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 5.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் மூழ்கி பயிர்கள் அழுகி உள்ளன. வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்னர். 1310 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறினார். மேலும் இந்த கடினமான நேரத்தில் நைஜீரியாவுக்கு ஐநா உறுதுணையாக இருப்பதுடன், தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஐநா சார்பில் உணவு விநியோகம், அவசரகால மருத்துவ உதவி மற்றும் காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுகாதார பெட்டகங்கள் விநியோகம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஐநா அலுவலகம் தெரிவித்துள்ளது. #NigeriaFloods #UnitedNations #Guterres
இந்தோனேசியாவில் சமீபத்தில் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தோன்றியது. இந்த நிலநடுக்கத்தினால் பல்வேறு கட்டிடங்கள் சிதைந்து, மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அன்று மாலையே சுனாமியும் அந்த நாட்டை தாக்கியது.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ஐ.நா சபை, இந்தோனேசியாவில் 1 லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. #Indonesiaquaketsunami
புதுடெல்லி:
ஐ.நா. மனிதவள மேம்பாட்டு ஆணையம் மனிதன் உயிர்வாழும் வயது தொடர்பாக 189 நாடுகளில் ஆய்வு நடத்தியது.
அதில் இந்தியா 189 நாடுகளில் 130-வது இடத்தை பிடித்து இருக்கிறது. 1990-ம் ஆண்டில் இந்தியாவில் மனிதன் உயிர்வாழும் வயது சராசரியாக 57.9 வருடமாக இருந்தது. 2017-ம் ஆண்டில் அது 68.8 வருடமாக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் மனிதனின் உயிர்வாழும் வயது 11 வருடம் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.
அதேபோல் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 1990-ல் 7.6 சதவீதமாக இருந்தது, 12.3 சதவிதமாக அதிகரித்துள்ளது.

தனிமனிதனின் சராசரி வருவாய் 1,733-ல் இருந்து 6,353 ஆக அதிகரித்துள்ளது. மனிதவள குறியீடு 0.427-ல் இருந்து 0.640 ஆக உயர்ந்துள்ளது.
வங்காள தேசத்தில் மனிதன் உயிர்வாழும் வயது 72.8 ஆகவும், பாகிஸ்தானில் 66.6 ஆகவும் உள்ளது. இந்தியாவில் பெண்குழந்தைகள் பிறப்பு 70.4 சதவீதமாகவும், வங்காள தேசத்தில் 74.6 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 67.7 சதவீதமாகவும் உள்ளது.
ஆண்குழந்தை பிறப்பு இந்தியாவில் 67.3 சதவீதமாகவும், வங்காள தேசத்தில் 71.2 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 65.6 சதவீதமாகவும் உள்ளது. #unitednations