என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia-Ukraine war"

    • உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.
    • போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேசியிருப்பதாவது:-

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு புதின் நிபந்தனை வைத்துள்ளார்.

    அதில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.

    உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும்.

    போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.

    ஒவ்வொரு புதன்கிழமையும் 175 உக்ரைன் ராணுவ கைதிகளை விடுவிக்கப்படும்.

    உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

    • நாட்டின் இறக்குமதியை கட்டுப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க செய்யும் முயற்சியில் மத்திய அரசு இயங்கி வருகிறது.
    • கார்பெட் ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதம் 952 கோடி ரூபாயாக இருந்தது 862 கோடியாக குறைந்துள்ளது.

    திருப்பூர்:

    நாட்டின் இறக்குமதியை கட்டுப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க செய்யும் முயற்சியில் மத்திய அரசு இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பஞ்சு விலை உயர்வு, ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலை பாதிக்க செய்தது.இருப்பினும் செப்டம்பர் மாதத்தில் இருந்துநூல்விலை சீராக இருந்து வருகிறது.அதன்பின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய நகர்வு இல்லாததால் பழைய ஆர்டர்களை தக்க வைக்கும் முயற்சியே பிரதானமாக இருக்கிறது.

    அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அனுப்பிய சரக்கு கிடங்குகளில் இருந்து எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.அந்நாட்டு மக்கள் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சிக்கன நடவடிக்கையில் இருந்து வருகின்றனர். அதாவது ஆடம்பர செலவுகளை குறைத்து எரிபொருள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு மட்டும் செலவிடுகின்றனர்.

    நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) தோல் பொருட்கள் ஏற்றுமதியும் 2,680 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 2022 ஏப்ரல் 8,831 கோடி ரூபாயாக இருந்த பருத்தி நூல், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள் ஏற்றுமதி நடப்பு ஆண்டில் 7,282 கோடிக்கு மட்டுமே நடந்துள்ளது.

    இதேபோல் செயற்கை நூலிழை, பேப்ரிக் மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதம், 3,477 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டில் 3,223 கோடிக்கு மட்டும் ஏற்றுமதி நடந்துள்ளது.இதேபோல் சணல் பொருட்கள் ஏற்றுமதி 348 கோடியாக இருந்தது 274 கோடியாக குறைந்துள்ளது.

    கார்பெட் ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதம் 952 கோடி ரூபாயாக இருந்தது 862 கோடியாக குறைந்துள்ளது. கைத்தறி ஜவுளி மற்றும் கைத்தறிகளில் உற்பத்தியாகும் கார்பெட் ஏற்றுமதி 1,182 கோடியாக இருந்தது 989 கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு அனைத்து வகை கட்டமைப்புகளுடன் சீரான பஞ்சு - நூல் விலையுடன் தயார்நிலையில் இருந்தும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒருவித சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நூற்பாலைகளும் உற்பத்தி யை குறைத்துள்ளன.

    ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் இறக்குமதி நாடுகளில் இயல்புநிலை திரும்பாது. அதன்பின்னரே ஏற்றுமதி வர்த்தகம் சீராக வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும்.இதேபோல் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இருவேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பல்வேறு நாடுகளை பாதிக்கிறது.எனவே அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுமதி தொழில்துறை யினரின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்தநிலையில் நெதர்லாந்தை சேர்ந்த லாடல் பவுண்டேஷன் என்ற அமைப்பு குட் பேஷன் நிதி என்ற கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பம் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளை தயாரிக்கும் முயற்சிக்கு இவ்வமைப்பு உதவுகிறது.இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு சுலபத் தவணை முறையில் அமெரிக்க டாலரில் இந்த அமைப்பு கடனுதவி தருகிறது. மறுசுழற்சி, மின்சாரம் பயன்பாட்டை குறைக்கும் எந்திரங்கள், தண்ணீர் பயன்பாட்டை குறைக்க உதவும் தொழில் நுட்பங்கள், கழிவைக் குறைக்கும் தொழில்நுட்பங்களுக்கு, தரத்தை பொறுத்து, எவ்விதமான பிணையுமின்றி கடன் வழங்குவதே இவ்வமைப்பின் சிறப்பு.திட்டத்தைப் பொறுத்து ஒரு ஜவுளி உற்பத்தி நிறுவனம் ரூ.8 கோடி முதல் ரூ.15 கோடி வரையிலான நிதியை பெறலாம்.

    இந்த அமைப்பை சேர்ந்த இத்திட்டத்தின் இயக்குனர் பாப் மற்றும் அவரது குழுவினர் சமீபத்தில் கோவைக்கு வந்திருந்தனர்.இவர்களுடனான கலந்துரையாடலுக்கு இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு அமைப்புகளின் நிர்வாகிகள் பாப் மற்றும் ஜெயந்த் ஆகியோர் இத்திட்டத்தைப் பற்றி விளக்கினர்.ஒரு நிறுவனத்தின் பிராண்ட்டை பிரபலப்படுத்துவது, மார்க்கெட்டிங்கை மேம்படுத்துவதற்கும் லாடல் பவுண்டேஷன் உதவுகிறது.

    சுற்றுச்சூழல் சார்ந்த ஆடை தயாரிப்பின் முக்கியத்துவத்தையும் உலகளாவிய அளவில் அதற்கு இருக்கின்ற வரவேற்பு பற்றியும் தனியார் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரி பாலகிருஷ்ணன் விளக்கினார்.

    எத்தகைய முயற்சிகளால் சுற்றுச்சூழல் சார்ந்த ஆடைகள் தயாரிப்பில் வளர்ச்சியை எட்ட முடியும் என்பது பற்றி ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் விளக்கினார்.நிகழ்ச்சியில், குட் பேஷன் நிதி அமைப்பு மற்றும் ஐ.டி.எப்., அமைப்புகளுக்கு இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் 50 ஜவுளித் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
    • தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது.

    நியூயார்க்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் கருங்கடல் தானிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது.

    இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், தானிய ஒப்பந்ததில் இருந்து ரஷியா விலகியதால் தானியங்களின் விலை உயர்வு, கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஐ.நா.வின் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறும்போது, "தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. பசி-பட்டினியால் வாடுவார்கள். இதன் காரணமாக பலர் இறக்கக் கூடும் என்றார்.

    போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளை சென்றடையவில்லை என்று ரஷியா புகார் தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்கு செல்லும் எந்த கப்பலையும் ராணுவ பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பலாக கருதப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

    • பரஸ்பரம் கொடுக்கவும் பெறவும் இரு நாடுகளிடமும் பல விஷயங்கள் உள்ளன
    • உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட பிம்பத்தை உடைக்க வட கொரியா முயன்று வருகிறது

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபரை வரும் நாட்களில் அங்கு சென்று சந்திக்க போவதாக ரஷியாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.

    ஆனாலும், இரு நாட்டு எல்லைகளுக்கு இடையில் கிம் ஜாங் உன் பயணம் செய்யும் அவரது பிரத்யேக பச்சை நிற ரெயில் காணப்பட்டதாகவும், அவர் ரஷியா நோக்கி பயணிக்கிறார் என்றும் தென் கொரிய மற்றும் ஜப்பான் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    இத்தகைய ஒரு சந்திப்பு ரஷியாவின் விலாடிவோஸ்டாக் நகரில் நிகழக்கூடும் என கடந்த வாரமே அமெரிக்காவின் உளவுப்பிரிவு, தகவல் ஒன்றை வெளியிட்டது. கடந்த 2019-ல் புதின் முதன்முறையாக இங்குதான் வட கொரிய அதிபரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உக்ரைன் உடனான போரில் ரஷியாவின் ராணுவ தளவாட மற்றும் ஆயுத கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. வட கொரியாவிடம் ரஷிய வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளது. எனவே, அந்நாட்டிடம் இருந்து இவற்றை பெற புதின் ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் போர் ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவிற்கு அழுத்தம் தர முடியும் என அவர் நம்புவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கு பதிலாக எரிசக்தி, உணவு தானியம் மற்றும் அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை ரஷியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வட கொரிய அதிபர் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது. ரஷியாவிற்கு உதவி செய்து, உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தனது பிம்பத்தை மாற்றி, அமெரிக்காவிற்கு எதிரான வலிமையுள்ள ஒரு நாடாக காட்டி கொள்ளவும் வட கொரியா முயன்று வருகிறது.

    இத்தகைய ராணுவ தொழில்நுட்பத்தை பெறுவதால், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தாக்கும் வல்லமை வட கொரியாவிற்கு அதிகரிக்கும் என்று அந்நாடுகள் அஞ்சுகின்றன.

    கடந்த ஜூலை மாதம், வட கொரியா ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவை தாக்கும் சக்தி படைத்த ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் அடங்கிய கண்காட்சி ஒன்றினை காண ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரியா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேட்டோ அமைப்பிடம் உதவி கோரி வருகிறது உக்ரைன்
    • நிதி பங்களிப்பை செலுத்துங்கள் என கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்

    2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

    சில மாதங்களாக ராணுவ தளவாட கையிருப்பு குறைந்துள்ளதாக கூறி மேற்கத்திய நாடுகளிடமும், நேட்டோ (NATO) அமைப்பிடமும் உக்ரைன் உதவி கோரி வருகிறது.

    ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உக்ரைனுடன் நிற்காமல் மேலும் பல நாடுகளுக்கு பரவலாம் என அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து பேசினார்.

    அதில் டிரம்ப், தனது பதவிக்காலத்தில் நேட்டோ அமைப்பில் இருந்த ஒரு உறுப்பினர் நாட்டின் தலைவருடன் (பெயர் குறிப்பிடாமல்) அவர் நிகழ்த்திய கலந்துரையாடலை தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம், நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில், ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

    நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால், இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறி விடுவேன்.

    நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை $110 பில்லியன் மதிப்பிற்கு அமெரிக்கா உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • கனிம ஒப்பந்தத்தில் டிரம்பும், ஜெலென்ஸ்கியும் கையெழுத்திடுவார்கள்.
    • ரஷியாவுடனான போர் நிறுத்தத்திற்கு முதல் படியாக அமெரிக்கா கருதுகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அவர் தொலைபேசியில் பேசி ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஷியாவுடனான போரின் போது உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்கு பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமைகளை தங்களுக்கு கால வரையில்லாமல் அளிக்கப் பட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.


    இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா செல்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்கள் ரஷியாவுடனான போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

    மேலும் அமெரிக்காவுடன் பொருளாதார கூட்டாண்மையை இறுதி செய்வதற்காக கனிம ஒப்பந்தத்தில் டிரம்பும், ஜெலென்ஸ்கியும் கையெழுத்திடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ரஷியாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவை பெறுவதற்கும், டிரம்ப் நிர்வாகத்துடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நீண்ட கால அமெரிக்க பாதகாப்பு உறுதிபாட்டுக்கு வழி வகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தை ரஷியாவுடனான போர் நிறுத்தத்திற்கு முதல் படியாக அமெரிக்கா கருதுகிறது.

    • ரஷியா, உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என, அமெரிக்கா சந்தேகம்
    • உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுரை

    வாஷிங்டன்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக உக்ரைன் இந்த வாரம் ரசாயன வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரஷியா குற்றம் சாட்டி இருந்தது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, இந்த போரில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷியா திட்டமிட்டு வருவதை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். அது போன்ற தாக்குதல்களை நடத்தினால் அது ரஷியாவின் மிக கடுமையான தவறாக கருதப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரம், உக்ரைனில் மீதம் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு உக்ரைனில் இருந்து வெளியேற கிடைக்கும் வழிகளை இந்தியர்கள் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த 19ந் தேதி இந்தியர்கள் வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இதனால் ஏராளமான இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி விட்டனர் என்றும் இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • உக்ரைன் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
    • கெர்சன் பிராந்தியத்தில் ரஷிய படைகளுக்கு பின்னடைவு.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங்களை கைப்பற்றியதுடன் அதை தனதாக்கிக் கொண்டது. இந்த நிலையில் தற்போது போரில் உக்ரைன் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ரஷிய படைகள் சில ஆக்ரமிப்பு பகுதிகளில் இருந்து பின் வாங்கி வருகின்றன.

    தெற்கில் உள்ள கெர்சன் பிராந்தியத்தில் 2,400 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றி உள்ளன. இது ரஷிய ராணுவத்திற்கு பின்னடவாக கருதப்படுகிறது. இந்நிலையில் ரஷியாவின் புதிய ராணுவ ஜெனரலாக செர்ஜி சுரோவிகின்னை நியமித்து ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோயிகு உத்தரவிட்டுள்ளார்.

    உக்ரைன் உடனான போரில் ஈடுபட்டுள்ள ரஷிய கூட்டுப் படைகளுக்கு செர்ஜி தலைமை தாங்கி வழி நடத்துவார் என ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷெகோவ் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக ரஷியாவின் கிழக்கு ராணுவ பிராந்திய தளபதியாக அவர் பணியாற்றினார் என்றும் சிரியாவுடனான போரில் ரஷிய ராணுவத்தினரை வழிநடத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போர் 7 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
    • உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டன.

    கார்கிவ்: 

    ரஷியா உக்ரைன் இடையேயான போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து வரும் நிலையில் உக்ரைன் படைகள் கிழக்கு பகுதியில் வலுவான எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய ஆக்ரமிப்பில் இருந்த பல பகுதிகளை மீண்டும் அந்த படைகள் கைப்பற்றிய நிலையில், ஒரு காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நகரமாக இருந்த லைமனில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் டாஸ் மற்றும் ஆர்.ஐ.ஏ.செய்தி நிறுவனங்கள் இதை கூறியுள்ளன. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்கு தென்கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் லைமன் நகரம் உள்ளது. ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக உள்ள லைமன், தரைவழி தகவல் தொடர்பு மற்றும் தளவாடங்களை கொண்டு செல்வது ஆகிய இரண்டிற்கும் ரஷ்ய படைகளுக்கு ஒரு முக்கியமான தளமாக இருந்தது.

    முன்னதாக உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அதிபர் புதின் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐந்து விமான நிறுவனங்கள் மற்றும் 10 விமான நிலையங்களின் ஊழியர்கள் ராணுவச் சேர்க்கை பதிவு குறித்து அலுவலகங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • 50- 80% ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்று மூன்று நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

    உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போர் வேண்டாம்.உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவோர் கைது செய்யப்படுகின்றனர்.

    நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்.

    ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. ராணுவச் சட்டம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ரஷிய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட (போருக்கு தகுதியான வயது) ரஷிய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியாகின.

    இந்நிலையில், ரஷியன் ஏர்லைன்ஸ், விமான நிலைய ஊழியர்கள் ராணுவத்தில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஷ்யாவில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாய அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. குறைந்தபட்சம் ஐந்து விமான நிறுவனங்கள் மற்றும் 10 விமான நிலையங்களின் ஊழியர்கள் ராணுவச் சேர்க்கை பதிவு குறித்து அலுவலகங்களுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    நாட்டின் தலைசிறந்த விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் குழுமம் உட்பட ஐந்து ரஷ்ய விமான நிறுவனங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் பணியாளர்கள் ராணுவத்திற்கு சேவை செய்ய சம்மன் பெற்றனர். இதில், 50- 80% ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்று மூன்று நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஏரோஃப்ளோட் குழுமத்திற்கு நெருக்கமான ஆதாரத்தின்படி, குழுவின் மூன்று விமான நிறுவனங்களின் ஊழியர்களில் பாதி பேர் பணியமர்த்தப்படலாம் என்றும் இவர்களில் ரோசியா ஏர்லைன்ஸ் மற்றும் போபெடா ஏர்லைன்ஸ் ஊழியர்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஏரோஃப்ளோட் அதிகாரப்பூர்வமான கருத்தை வழங்கவில்லை என்றாலும், குழு இப்போது வெவ்வேறு சிறப்புகளில் இடஒதுக்கீட்டிற்கான பட்டியலைத் தயாரிக்க பணிக்குழுக்களை அமைத்துள்ளது.

    இதைத்தவிர, குறைந்தபட்சம் ஐந்து நிறுவனங்கள், வரைவில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலைத் தொகுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றில் இரண்டு விமான நிறுவனங்கள் பட்டியலை அனுப்பியுள்ளன. இதில் ஒன்று உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்கியது. மற்றொன்று போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. விமானக் கட்டுப்பாட்டாளர்கள், விமானிகள் மற்றும் பிற வணிக, தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த விலக்கு முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

    • ரஷியா-உக்ரைன் போரில் 5,587 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
    • உக்ரைன் குழந்தைகள் 972 உயிரிழந்துள்ளதாக தகவல்.

    கடந்த பிப்ரவரி 24 அன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது. தலைநகர் கீவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் இரு தர்ப்பு படைகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த போரில் 9 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின்

    ராணுவத் தலைவர் ஜெனரல் வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 5,587 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 7,890 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளனர். குறைந்தது 972 உக்ரைன்

    குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.சபை குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புள்ளி விவரங்கள்தான் ஆனால்

    இந்த எண்ணிக்கை உண்மையில் மிக அதிகமாக இருக்கும் என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார். இதனிடையே உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் ரஷி 80,000 வீரர்களை இழந்துள்ளதாக அமெரிக்க

    ராணுவ அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுபடும் வரை அமெரிக்க பாதுகாப்பு ஆதரவு தொடரும்.
    • உக்ரைன் மக்களை அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும்.

    வாஷிங்டன்:

    உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த உதவி வழங்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    இந்த உதவி மூலம் உக்ரைன் படைகள், ரஷிய படைகளை தாக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

    கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

    ×