search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Industrialists"

    • நேற்று ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளனர்.
    • அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் ஆபத்தான பகுதியில் குளித்ததாக கூறப்படுகிறது.

    டி.என்.பாளையம், 

    திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40), தறிபட்டறை தொழில் செய்து வந்துள்ளார்.

    இவருக்கு திருமணமாகி சில வருடங்களாக மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா ராமநாதபுரம் ஊராட்சி தொட்டகலாம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (36), தறிபட்டறை தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளனர்.

    அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் வலது புறத்தில் ஆழமாக உள்ளதால் பொதுப்பணித்துறை சார்பில் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அந்த எச்சரிக்கை பலகையை மீறியும் போலீசாரின் அறிவுறுத்தலை மீறியும் ரமேஷ் மற்றும் ராமசாமி அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் ஆபத்தான பகுதியில் குளித்ததாக கூறப்படுகிறது.

    அந்த பகுதியில் ஆழம் அதிகம் என்பதால் எதிர்பாராத விதமாக ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் நீரில் மூழ்கினர்.

    உடனே அங்கிருந்தோர் சத்தியமங்கலம் தீயணைப்பு துறை மற்றும் பங்களாப்புதூர் போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணை ப்புத்துறை வீரர்கள் ரமேஷ் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்க ப்பட்டது. அதனையடுத்து கொடிவேரி அணைப்பகு தியில் ரமேஷை மீட்ட அதே பகுதியில் சிறிது நேரத்திற்கு பிறகு ராமசாமியை பிணமாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், கொடிவேரி அணையின் பவானி ஆற்றுக்கு குளிக்க வந்த நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நாட்டின் இறக்குமதியை கட்டுப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க செய்யும் முயற்சியில் மத்திய அரசு இயங்கி வருகிறது.
    • கார்பெட் ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதம் 952 கோடி ரூபாயாக இருந்தது 862 கோடியாக குறைந்துள்ளது.

    திருப்பூர்:

    நாட்டின் இறக்குமதியை கட்டுப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க செய்யும் முயற்சியில் மத்திய அரசு இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பஞ்சு விலை உயர்வு, ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலை பாதிக்க செய்தது.இருப்பினும் செப்டம்பர் மாதத்தில் இருந்துநூல்விலை சீராக இருந்து வருகிறது.அதன்பின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய நகர்வு இல்லாததால் பழைய ஆர்டர்களை தக்க வைக்கும் முயற்சியே பிரதானமாக இருக்கிறது.

    அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அனுப்பிய சரக்கு கிடங்குகளில் இருந்து எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.அந்நாட்டு மக்கள் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சிக்கன நடவடிக்கையில் இருந்து வருகின்றனர். அதாவது ஆடம்பர செலவுகளை குறைத்து எரிபொருள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு மட்டும் செலவிடுகின்றனர்.

    நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) தோல் பொருட்கள் ஏற்றுமதியும் 2,680 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 2022 ஏப்ரல் 8,831 கோடி ரூபாயாக இருந்த பருத்தி நூல், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள் ஏற்றுமதி நடப்பு ஆண்டில் 7,282 கோடிக்கு மட்டுமே நடந்துள்ளது.

    இதேபோல் செயற்கை நூலிழை, பேப்ரிக் மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதம், 3,477 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டில் 3,223 கோடிக்கு மட்டும் ஏற்றுமதி நடந்துள்ளது.இதேபோல் சணல் பொருட்கள் ஏற்றுமதி 348 கோடியாக இருந்தது 274 கோடியாக குறைந்துள்ளது.

    கார்பெட் ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதம் 952 கோடி ரூபாயாக இருந்தது 862 கோடியாக குறைந்துள்ளது. கைத்தறி ஜவுளி மற்றும் கைத்தறிகளில் உற்பத்தியாகும் கார்பெட் ஏற்றுமதி 1,182 கோடியாக இருந்தது 989 கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு அனைத்து வகை கட்டமைப்புகளுடன் சீரான பஞ்சு - நூல் விலையுடன் தயார்நிலையில் இருந்தும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒருவித சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நூற்பாலைகளும் உற்பத்தி யை குறைத்துள்ளன.

    ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் இறக்குமதி நாடுகளில் இயல்புநிலை திரும்பாது. அதன்பின்னரே ஏற்றுமதி வர்த்தகம் சீராக வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும்.இதேபோல் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இருவேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பல்வேறு நாடுகளை பாதிக்கிறது.எனவே அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுமதி தொழில்துறை யினரின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்தநிலையில் நெதர்லாந்தை சேர்ந்த லாடல் பவுண்டேஷன் என்ற அமைப்பு குட் பேஷன் நிதி என்ற கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பம் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளை தயாரிக்கும் முயற்சிக்கு இவ்வமைப்பு உதவுகிறது.இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு சுலபத் தவணை முறையில் அமெரிக்க டாலரில் இந்த அமைப்பு கடனுதவி தருகிறது. மறுசுழற்சி, மின்சாரம் பயன்பாட்டை குறைக்கும் எந்திரங்கள், தண்ணீர் பயன்பாட்டை குறைக்க உதவும் தொழில் நுட்பங்கள், கழிவைக் குறைக்கும் தொழில்நுட்பங்களுக்கு, தரத்தை பொறுத்து, எவ்விதமான பிணையுமின்றி கடன் வழங்குவதே இவ்வமைப்பின் சிறப்பு.திட்டத்தைப் பொறுத்து ஒரு ஜவுளி உற்பத்தி நிறுவனம் ரூ.8 கோடி முதல் ரூ.15 கோடி வரையிலான நிதியை பெறலாம்.

    இந்த அமைப்பை சேர்ந்த இத்திட்டத்தின் இயக்குனர் பாப் மற்றும் அவரது குழுவினர் சமீபத்தில் கோவைக்கு வந்திருந்தனர்.இவர்களுடனான கலந்துரையாடலுக்கு இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு அமைப்புகளின் நிர்வாகிகள் பாப் மற்றும் ஜெயந்த் ஆகியோர் இத்திட்டத்தைப் பற்றி விளக்கினர்.ஒரு நிறுவனத்தின் பிராண்ட்டை பிரபலப்படுத்துவது, மார்க்கெட்டிங்கை மேம்படுத்துவதற்கும் லாடல் பவுண்டேஷன் உதவுகிறது.

    சுற்றுச்சூழல் சார்ந்த ஆடை தயாரிப்பின் முக்கியத்துவத்தையும் உலகளாவிய அளவில் அதற்கு இருக்கின்ற வரவேற்பு பற்றியும் தனியார் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரி பாலகிருஷ்ணன் விளக்கினார்.

    எத்தகைய முயற்சிகளால் சுற்றுச்சூழல் சார்ந்த ஆடைகள் தயாரிப்பில் வளர்ச்சியை எட்ட முடியும் என்பது பற்றி ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் விளக்கினார்.நிகழ்ச்சியில், குட் பேஷன் நிதி அமைப்பு மற்றும் ஐ.டி.எப்., அமைப்புகளுக்கு இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் 50 ஜவுளித் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    • கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
    • உறவினர், நண்பர்கள் சிலர் குடும்பத்தினருடன் ரெயில் நிலையம் வந்திறங்குவதை காண முடிகிறது.

    திருப்பூர் :

    கடந்த மார்ச் 8-ந் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. திருப்பூரில் பணியாற்றி வந்த வடமாநிலத்தினர் பலர் பண்டிகை கொண் டாட்டங்களுக்கு சொந்த மாநிலம் பயணித்தனர். கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.பண்டிகை முடிந்து 2வாரங்கள் கடந்துள்ள நிலையில், மீண்டும் திருப்பூருக்கு பலரும் வர தொடங்கியுள்ளனர். சென்றவர்கள் மட்டுமின்றி திருப்பூருக்கு பலரை புதிதாக அழைத்தும் வருகின்றனர். உறவினர், நண்பர்கள் சிலர் குடும்பத்தினருடன் ரெயில் நிலையம் வந்திறங்குவதை காண முடிகிறது.

    வாரநாட்களை விட வார இறுதி விடுமுறை நாட்களில் திருப்பூரை கடந்து செல்லும் ரப்திசாகர், அரோனி, ஹிம்சாகர், ஸ்வர்ண ஜெயந்தி, எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட், பிலாஸ்பூர், பரூனி, கோர்பா சூப்பர்பாஸ்ட் உள்ளிட்ட ரெயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    திருப்பூரில் அதிகமாக பீகார் மாநிலத்தவர் பணிபுரிகின்றனர்.அம்மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ெரயிலில் பொது பெட்டிகள் நிரம்பி வழியும் அளவு வடமாநிலத்தினர் வந்திறங்குகின்றனர்.இதனால் கடந்த இரு தினங்களாக திருப்பூர் ரெயில் நிலைய பிளாட்பார்ம் வடமாநிலத்தினரால் நிரம்பி வழிகிறது.திருப்பூருக்கு வேலைவாய்ப்பு தேடி வடமாநிலத்தினர் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால் தொழில்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவுக்கு வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும்.
    • நிட் காம்பாக்டிங் உரிமையாளர்கள் சங்கத்தின் 24வது மகாசபை கூட்டம் திருப்பூர் காந்திநகர் அரிமாசங்கத்தில் நடைபெற்றது.

    திருப்பூர்:

    'பைப்லைன் கேஸ்' திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தி திருப்பூர் தொழில் துறையினருக்கு மானிய விலையில் எரிவாயு வழங்க மத்திய,மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று காம்பாக்டிங் சங்க மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    நிட் காம்பாக்டிங் உரிமையாளர்கள் சங்கத்தின் 24வது மகாசபை கூட்டம் திருப்பூர் காந்திநகர் அரிமாசங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தலைவர் சார்ஜா துரைசாமி தலைமை வகித்தார். பொருளாளர் முத்துசாமி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். செயலாளர் ஈஸ்வர மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். 

     கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:- 

    யூகவணிகர்கள் சூதாட்ட முறையில் பஞ்சுவிலையை முறைகேடாக கையாள்வதை தடுக்க, மத்திய அரசு, பருத்தி ஆலோசனைக்குழு மற்றும் மத்திய பருத்திக்கழகங்கள் மூலம் கண்காணித்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும். இதனால் நூல் விலையை சீராக வைத்திருக்க முடியும். 

    பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு பதிலாக ஆடையாக தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது, வேலைவாய்ப்பு, மதிப்பு கூட்டு, பொருளாதார ஏற்றம், அந்நிய செலாவணி என பலவகையிலும் பல்வேறு நன்மைகளும், வளர்ச்சியும் ஏற்படும் என்பதை மத்திய அரசு உணர்ந்து, அதற்கேற்றவகையில் தொழில் துறையினருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 

    மெட்ரோ ரயில் மூலம் அருகில் உள்ள நகரப்பகுதிகளை இணைத்தல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல அடுக்கு மேம்பாலங்களை உருவாக்குதல், அடுக்கு மாடி குடியிருப்புகள் மூலம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருதல் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    பிற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு அதிக வருமானம் ஈட்டித்தருகின்ற திருப்பூர் போன்ற தொழில் நகரத்திற்கு போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததை மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கவனித்து, திருப்பூரின் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறோம்.  

    தொழிலாளர்களின் அடிப்படைத்தேவையை கருத்தில் கொண்டு பாரதப்பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள 'இ.எஸ்.ஐ.,' மருத்துவமனை வசதியை துரிதமாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும். திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவுக்கு வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும். 

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 'பைப்லைன்'எரிவாயு திட்டத்தை நடைமுறைப்படுத்தி மானிய விலையில் எரிவாயு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    இதைத்தொடர்ந்து, தற்போதுள்ள தொழில் நிலையை கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் பழைய நிலையை நீடித்து உதவ மாநில அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும், புதிய கட்டணங்களை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்வது என்றும், 

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில் சிக்கல்களை கருத்தில் கொண்டு, வங்கிக்கடன் தள்ளுபடி சலுகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி உதவிட வேண்டும் என்றும், 

     ஜி.எஸ்.டி.,வரிவிதிப்பில் பெரிய நிறுவனங்களுக்கும், சிறு, குறு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதால் தனி மனித வருமானம் உயர்வதில் சிக்கல் ஏற்படுவதை மத்திய அரசு உணர்ந்து, தொழில் நிறுவனங்களின் பொருளாதார தன்மையை உணர்ந்து போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட ஜுபிடர் குணசேகரன் நன்றி கூறினார்.

    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து 33 சதவீத பங்களிப்பு நிதியாகவும் செயல்படுத்தப்பட உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம் மற்றும் தன்னார்வலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ தீர்வு காண அதிநவீன திட்டத்தை தமிழ்நாடு அரசுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அறிதலுக்கும், சிகிச்சைக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.60 கோடியாகும். நமக்கு நாமே திட்டம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து 33 சதவீத பங்களிப்பு நிதியாகவும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி, 38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், 1 லினியர் ஆக்ஸிலரேட்டர் என ரூ.60 கோடியில் அமைய உள்ளது. பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் ரூ.5 லட்சம், பொதுச்செயலாளர் திருக்குமரன் ரூ.5 லட்சம், துணை தலைவர் இளங்கோவன் ரூ.5 லட்சம், பையிங் ஏஜெண்ட் ரூ.5 லட்சம், சாய ஆலை சங்க தலைவர் காந்திராஜன் ரூ.50 லட்சம், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் நாகேஷ் ரூ.25 லட்சம், சுலோச்சனா ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் ரூ.25 லட்சம், ரோட்டரி சங்கத்தின் சார்பாக ரூ.5 கோடி, கைலாஷ் மார்பிள்ஸ் சார்பாக ரூ.25 லட்சம், ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி ரூ.5 லட்சம் வழங்குவதற்கு ஒப்புதல் மற்றும் காசோலைகளை வழங்கினார்கள்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    • திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டிங் அசோசியேஷன் சங்கத்தின் 18ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • வாரா கடன் பற்றிய விழிப்புணர்வை வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் வழங்கினர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டிங் அசோசியேஷன் சங்கத்தின் 18-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருப்பூர் இடுவம்பாளையம் டெக்பா கலையரங்கத்தில் நடந்தது.

    இதில் புதிய மிஷின்கள் வாங்க அரசு மானியம் பெறுவது குறித்த விளக்க உரையை (எப்.சி.ஏ) (எல்.எல்.பி.) அரசப்பன், மற்றும் வாரா கடன் பற்றிய விழிப்புணர்வை வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். தீர்மானத்தில், பிரின்டிங் தொழில் என்பது மதிப்பு கூட்டில் சிறு தொழில் நிறுவனங்கள் ஆகும். ஆகவே தமிழக அரசு தாங்கள் ஏற்றிருக்கும் மின் கட்டண உயர்வை விலக்கிக்கொள்ள வேண்டும். அனைத்து பிரிண்டிங் நிறுவனங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு அவர்களின் வழிகாட்டுதலின்படியே செயல்பட வேண்டும். திருப்பூரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு பிரிண்டிங் சேவை செய்திட வேண்டும். திருப்பூர் நகரின் வளர்ச்சிக்காக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் டெக்பா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் 2022-ம் ஆண்டுக்கான மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.  கூட்டத்தில் தமிழ்நாடு அளவிலான டைஸ் மற்றும் கெமிக்கல் வியாபாரிகளின் மாநாட்டை திருப்பூரில் நடத்துவது, டைஸ் மற்றும் கெமிக்கல்ஸ் திருப்பூரின் வெளியே குடோன் அமைப்பது. நீண்ட நாள் நிலுவை தொகையை விரைவில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் அதிக நாள் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல பொதுக்குழுக்கூட்டம் திருப்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வால், கூடுதலாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் உயரும். ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்வு போன்றவையால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மின்கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். வியாபாரிகள் 1 வாரம் முதல் அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் பொருட்களை வாங்கி ரொக்கப்பரிவர்த்தனை செய்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×