என் மலர்
நீங்கள் தேடியது "die"
- ரத்த காயங்களுடன் கிடந்த பெண் இறந்தார்.
- இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இன்று காலை இவர் வீட்டில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த சரஸ்வதியை யாராவது தாக்கி கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பிளஸ்-2 மாணவன் பலியானார்.
- இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் ஹரி பாஸ்கர் (வயது 18). பிளஸ் 2 முடித்துள்ளார். நேற்று இரவு ஹரி பாஸ்கர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோடீஸ்வரன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பட்டணம் வழியாக ராசிபரத்துக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ஹரிபாஸ்கர் ஓட்டிச் சென்றார்.
அவருக்கு பின்னால் கோடீஸ்வரன் உட்கார்ந்து சென்றார். பட்டணம் சக்தி நகர் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து பட்டணத்தை நோக்கிச் சென்ற செல்வராஜ் (65) என்பவரது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கோடீஸ்வரனும், செல்வராஜும் காயமடைந்தனர். இருவரும் ராசிபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்த செல்வராஜ் பட்டணம் பள்ளிக்கூடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்லமுடியாததால் விரக்தியில் மது குடித்த வாலிபர் குட்டையில் தவறி விழுந்து பலியானார்.
- வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் ரவுண்டானா அருகில் குட்டையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர் கொங்கணாபுரம் அருகிலுள்ள அத்தியப்பனுர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் வெங்கடேஷ் (வயது36) லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. வெங்கடேஷின் தந்தை முத்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார் . அந்த வேளையில் வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
பின்னர் தனது வீட்டிற்கு செல்லும் போது பவளத்தானுர் ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார் .மதுபோதை அதிகமாக மயங்கி குட்டையில் விழுந்தவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது .
இதுபற்றி வெங்கடேஷின் தாயார் பாவாய் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நேற்று வீட்டில் இருந்த சரவணகுமார் திடீரென மயங்கி விழுந்தார்.
- மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் சரவணகுமார் (வயது39). கட்டிட தொழிலாளி. இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து உள்ளது.
நேற்று வீட்டில் இருந்த சரவணகுமார் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தில் தர்பங்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது பிரசவத்துக்கான அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஆரோக்கிய பற்றாக்குறை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கம்போல், காலை எழுந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக சென்ற தாய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிறந்து 8 நாட்களே ஆன அவரது ஆண் குழந்தை சிறு சிறு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. குழந்தையின் கால்களிலும், உடலின் சில பகுதிகளிலும் எலி கடித்ததற்கான வடுக்களும், உறைந்த இரத்தமும் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு இதய குறைபாடு இருந்ததினால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து இருந்ததாகவும், அதனாலேயே குழந்தை இறந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், மருத்துவமனையில், எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், அம்மாவட்ட மாஜிஸ்திரேட் இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். #Bihar

இந்த காதல் தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இடுப்புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, தனது 44-வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
இவர், உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு வன்முறைகள் நடைபெறுகின்றன. பசுக்களை இறைச்சிக்காக கடத்துவதாக கூறி, பலர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலவும் இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. ஆங்காங்கே இருக்கும் பசுக்களை மீட்டு, மாவட்ட நிர்வாகம் நடத்தி வரும் கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமே பசுக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பசுபாதுகாவலர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ரோஹாசி எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கோசாலையில் 18 பசுமாடுகள் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் ஜானக் பிரசாத் பதக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோசாலையில் இருந்து இறந்த பசுக்களின் உடல்களை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அங்கு பசுக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், அவற்றுக்கு தேவையான உணவை கிராம மக்களும், கோசாலை நிர்வாகிகளும் வழங்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மிகச்சிறிய அறையில் வைத்து பூட்டப்பட்ட அதிகப்படியான பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கலெக்டர் ஜானக் பிரசாத் தெரிவித்துள்ளார். #CowSafty
அமெரிக்காவின் மிசவ்ரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் பிரான்சன். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் குடும்பத்துடன் செல்லும் அழகிய இடங்களில் இதுவும் ஒன்று.
இங்குள்ள ஏரியில் டக் படகு எனப்படும் தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய படகு மூலம் சவாரி செய்வது பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்நிலையில், டக் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு ஏரியில் மூழ்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 4 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14 பேர் விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு சவாரியின் போது திடீரென அதிகப்படியான காற்று வீசியதால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும், மீட்கப்பட்டவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த டக் படகு சவாரியில் இதற்கு முன்னதாக 2 முறை விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #US #BoatAccident