search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
    X

    தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

    • இன்று காலை சுமார் 70 வயது மதிக்கப்பட்ட பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அதில் அவர் தூத்துக்குடி அண்ணா நகர் மேற்கு, மகிழ்ச்சி புரத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி சாமியம்மாள் என்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி - மீளவிட்டான் ரெயில் நிலையங்கள் இடையே தனியார் பள்ளிக்கு பின்புறம் அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 70 வயது மதிக்கப்பட்ட பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது,

    இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் தூத்துக்குடி அண்ணா நகர் மேற்கு, மகிழ்ச்சி புரத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி சாமியம்மாள்(வயது 70) என்பது தெரியவந்தது. அவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் தனது வீட்டில் இருந்து தண்டவாளத்தை கடந்து சின்னகண்ணுபுரத்தில் அமைந்துள்ள டீக்கடைக்கு செல்ல தண்டவாளத்தினை கவனக்குறைவாக கடக்க முயற்சித்த போது தூத்துக்குடி நோக்கி வந்த ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×