search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் ேமாதி தொழிலாளி சாவு
    X

    ரெயில் ேமாதி தொழிலாளி சாவு

    • மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
    • தகவல் அறிந்தத ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அருகே வடகார வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40).

    கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலைக்குச் சென்றபோது மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவ்வழியாக வந்த ரெயில் எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷ்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடிஅரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×