search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burn"

    • பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.
    • திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்க ளும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.

    கடும் வெயிலின் காரணமாக இவை காய்ந்திருந்த நிலையில், திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட சின்னசோ ளிபாளையம் பகுதிக்கு விரைந்து வந்து, வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்ப டுத்தி, தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பிaனும் தோட்டத்தில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் எரிந்து நாசமாயின.

    • கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
    • இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா திடுமல் நகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 45 ). இவர் கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் . இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து விஸ்வநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கீற்றுக் கொட்டகையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கூரை வீடு முழுவதும் தீயினால் எரிந்து நாசமாயின .இந்நிலையில் கூரை வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், மின்விசிறி, டிவி, பிரிட்ஜ், பீரோ, உணவுப் பொருட்கள் ,துணிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின.

    • காரின் முன்பாகம் முழுவதுமாக எரிந்தது.
    • தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

     உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மனிகண்டன். இவரது மனைவிக்கு பிரசவசவலி ஏற்படவே உறவினரின் காரில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்.

    அரசு மருத்துவமனை வாயிலில் வரும்போது காரிலிருந்து லேசாக புகைவர அவசரமாக மனைவி கவிதா மற்றும் அவரது உறவினர்களுடன் இறங்கிய மணிகண்டன் அவர்களை உள்ளே செல்ல சொல்லிவிட்டு காரின் அருகே வருவதற்குள் காரில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதில் காரின் முன்பாகம் முழுவதுமாக எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

    • சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 90). இவர் மேல்மாடியில் வசித்து வருகிறார். கீழ் மாடியில் மகன் மாதேஷ் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பேரன் பாட்டிக்கு காபி கொடுப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.

    இது குறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

    இதனால் மன உடைந்த அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தது தெரியவந்ததுள்ளது.

    • திட்டக்குடியில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி குரங்கு அவதிப்பட்டு சுற்றி வருகிறது.
    • வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திட்டக்குடி பெரியார் நகர் பகுதியில் குரங்கு ஒன்று உடலில் தீ காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறது/ இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து உள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக அந்த குரங்கு தீக்காயங்கள் ஏற்பட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் அவதிப்பட்டு சுற்றி வருகிறது. இதனைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது எனவே வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கும்பகோணம் அருகே குடும்ப தகராறில் மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏராகரம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    குழந்தை இல்லாததால் இளையராஜா வேதனை அடைந்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவரை , பிரியா கண்டித்து பேசியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இளையராஜா, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென பிரியா உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ பிடித்ததால் அவர் அலறி கூச்சல் போட்டார்.

    அப்போது பிரியா, திடீரென கணவரை கட்டி பிடித்ததால் இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

    இதனால் உடல் கருகி கிடந்த கணவன்- மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆத்தூர் அருகே 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூரில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் ஆத்தூர் நகர போலீஸ்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே ஆத்தூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  உடலை மீட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் எரிக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு நிர்வான நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?  என்ற தெரியவில்லை.

    இதனால் அந்த பகுதியில் மாயமானவர்களின் பட்டியலை தயார் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும்  அவரை எரித்து கொன்று உடலை அங்கு வீசி சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக எரித்து கொன்றனர்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். 
    ஆம்பூரில் போலீசுக்கு தெரியாமல் மனைவியின் உடலை எரிக்க முயன்ற கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம். முடி திருத்தும் தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணகி (வயது 40). இவர்களுக்கு 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில், ஆண் வாரிசுக்காக 2-வது திருமணம் செய்ய பிரகாசம் முடிவு செய்தார். இதற்கு, மனைவி கண்ணகி எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு தூக்கில் தொங்கிய நிலையில் கண்ணகி மர்மமாக இறந்து கிடந்தார்.

    பிரகாசம் நேற்று காலை அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் மனைவி கண்ணகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

    இதையடுத்து, உறவினர்கள் கூடி உடலை எரிப்பதற்கான இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். உடலை பாடை கட்டி தூக்கி சென்றனர்.

    இதுப்பற்றி கண்ணகியின் அண்ணன், உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுசம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மனைவி உடலை ரகசியமாக எரிக்க முயன்றது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், 2-வது திருமண ஆசையில் கண்ணகி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொட்டியம் திருநாராயணபுரம் காவிரி கரையில் அடையாளம் தெரியாத ஆண் எரித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம்தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் காவிரியாற்று படுகைக்கு சென்ற சிலர் அப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக தொட்டியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பச்சைநிறபனியனும், வெள்ளை வேட்டியும்  பாதி எரிந்த நிலையில் கிடந்தார். கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரை யாரும் கடத்தி வந்து கொலை செய்து எரித்தார்களா? அல்லது வேறு எங்கும் கொலை செய்து இங்கு வந்து எரித்தார்களா? அல்லது மது போதை தகராறில் எரித்து கொல்லப்பட்டார? என பல கோணங்களில் தொட்டியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியிலிருந்து மோப்ப நாய் அர்ஜீன் வரவழைக்கப்பட்டது. அது சடலம் கிடந்த இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்று காட்டுப்புத்தூர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் முன்பு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இந்த சம்பவம் தொட்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார். #Iraq #PMHaiderAlAbadi #BallotBox, #Storagesite #Burn
    பாக்தாத்:

    ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேற்று திடீரென தீபிடித்து விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்ட சதி. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அரசு முடிவு செய்திருந்த நிலையில் தீ விபத்து நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #Iraq #PMHaiderAlAbadi #BallotBox, #Storagesite #Burn
    ×