search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீற்றுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்து நாசம்
    X

    கீற்றுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்து நாசம்

    • கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
    • இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா திடுமல் நகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 45 ). இவர் கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் . இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து விஸ்வநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கீற்றுக் கொட்டகையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கூரை வீடு முழுவதும் தீயினால் எரிந்து நாசமாயின .இந்நிலையில் கூரை வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், மின்விசிறி, டிவி, பிரிட்ஜ், பீரோ, உணவுப் பொருட்கள் ,துணிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின.

    Next Story
    ×