search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rituals"

    • உப்பை தரையில் சிந்தக்கூடாது.
    • பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

    பொதுவாகவே வீட்டில் நிம்மதி இல்லை என்றால் கோவிலுக்கு சென்று, கடவுளை வழிப்பட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி வருவது பலரது வழக்கம். ஒரு சில விஷயங்களை வீட்டில் நாம் கடைப்படித்து வந்தாலும் அமைதி, செல்வம் மற்றும் இன்பம் என அனைத்தும் நிறைந்திருக்கும். அவற்றை பற்றி சற்று தெளிவாக பார்க்கலாம்.

    * பணம் கொடுக்கல் வாங்கலை வீட்டின் வாசல் படியில் வைத்து செய்ய கூடாது.

    * செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமையில் செய்து நல்லது.

    * வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

    * வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

    * வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

    * எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

    * உப்பை தரையில் சிந்தக்கூடாது.

    * காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்க செய்வது நல்லது.

    * தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

    * வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்த்தால் செல்வம் பெருகும்.

    * விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். `அணைப்பது' என்று கூற கூடாது.

    * வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்க வேண்டும்.

    * அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.

    * பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

    * அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

    * இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

    • பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
    • ஐந்து வகை உணவுகள் வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.

    இதில் வேளாங்கண்ணி, திருப்பூண்டி பூவை தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.

    தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.

    மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.

    மேலும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.

    உறவுகளால் வீட்டில் வளைகாப்பு செய்திருந்தாலும் ஒரே இடத்தில் இப்படி எல்லோருக்கும் வளைகாப்பு செய்து, சீர்வரிசை வழங்கி, விழா எடுப்பது மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் பெத்த மகளை போல பாவித்து வளைகாப்பு செய்ததை எங்களால் மறக்க முடியாது என்றும் கர்ப்பிணி பெண்கள் உற்சாகம் பொங்க தெரிவித்தனர்.

    ×