search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iraq"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'உம்ரா விசா' பெற்று உள்ளே நுழைந்து பிச்சையெடுப்பதில் ஈடுபடுகின்றனர்
    • பாகிஸ்தானிலிருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்கள் நிரம்பி வழிகின்றனர்

    பல வருடங்களாக இந்தியாவிற்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான், தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றால் அங்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது.

    சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாததால் பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் கும்பல் கும்பலாக ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் சட்டவிரோதமாகவும் சட்டரீதியாகவும் உள்ளே நுழைந்து அங்கேயும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுகின்றனர்.

    அரபு நாடுகள் பலவற்றில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது அங்கு வழக்கம். அவ்வாறு சிறையிலடைக்கபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து அந்நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்களே அதிகம் பயணம் செய்கின்றனர்.

    இவர்கள் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்துள்ளன. புத்திசாலித்தனமான வழிமுறையை அவர்கள் கையாண்டு உள்ளே வருவதால் தடுப்பதற்கு அந்த நாடுகள் திணறுகின்றன. சட்ட ரீதியாக அங்கு நுழைய முயல்பவர்கள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'உம்ரா விசா' எனும் அனுமதியை பெற்று அங்கு நுழைகிறார்கள். வந்தவுடன் சாலைகளில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

    இது தவிர இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சாலைகளில் பிக்பாக்கெட் குற்றத்தில் ஈடுபடும் பெரும்பகுதியினரும் பாகிஸ்தானியர்களே எனவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

    உலக அரங்கில் பாகிஸ்தானை இது தலைகுனிய செய்திருக்கிறது.

    ஒரு காலத்தில் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்வதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீ விபத்து வேகமாக பரவி வெளிப்பட்ட புகையால் மூச்சு திணறலில் பலர் உயிரிழந்தனர்
    • நினெவே மற்றும் குர்திஸ்தான் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும் பெரிய திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முன்னிரவு சுமார் 10:45 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் விருந்தில் கலந்து கொள்ள வந்த பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினர். தீ விபத்தினால் ஏற்பட்ட புகையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

    மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் நினெவே மற்றும் குர்திஸ்தான் பகுதி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நினெவே பிராந்திய கவர்னர் நஜிம் அல்-ஜுபோரி தெரிவித்துள்ளார்.

    முதற்கட்ட விசாரணையில் விருந்து நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிலர் பட்டாசுகளை கொளுத்தியதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இருந்தாலும், இது தற்போது வரை உறுதிபடுத்தபடவில்லை. தீயணைப்புக்கான உபகரணங்கள் அந்த அரங்கில் முறையானபடி இல்லாததால், தீ பரவுதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிகிறது.

    இதையடுத்து, அந்த திருமண அரங்கத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மகிழ்ச்சியான திருமண கொண்டாட்டம் விபத்தில் முடிந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் வீச்சு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாக்தாத்:

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ஒரு ராக்கெட் வந்து விழுந்தது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் அது விழுந்தது.

    இந்த ராக்கெட் வீச்சில் யாரும் பாதிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும், கிழக்கு பாக்தாத்தில் இருந்து ராக்கெட் வீசப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. அந்த பகுதியில், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. வளைகுடா பகுதியில், போர்க்கப்பல்களையும், விமானங்களையும் அமெரிக்கா குவித்துள்ள நிலையில், இந்த ராக்கெட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈராக்கில் ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்படவில்லை. அவர்கள் ஆங்காங்கே பதுங்கி இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கவும் ஒரு இடம், முகாமாக செயல்பட்டு வந்தது ராணுவத்துக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது. இதை ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிரியாவில் வெடித்த உள்நாட்டு போரால் நிறுத்தி வைக்கப்பட்ட விமானப் போக்குவரத்தை 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை தொடங்க ஈராக் அரசு தீர்மானித்துள்ளது.
    பாக்தாத்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலமையிலான ஆட்சிக்கு எதிராக அங்குள்ள போராளி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் சிரியாவுக்கு செல்லும் விமானங்களை ஈராக் அரசு நிறுத்தி விட்டது.

    இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஈராக் தலைநகர் பாக்தாத் இடையிலான வான்வழி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) முதல் பாக்தாத்தில் இருந்து டமாஸ்கஸ் நகருக்கு விமானங்களை இயக்க ஈராக் அரசு தீர்மானித்துள்ளது. 

    இதுதொடர்பாக ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் லயாத் அல்-ருபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்கட்டமாக வாரமொரு விமானம் இயக்கப்படும். படிப்படியாக விமானச்சேவைகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து ராணுவம் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இன்னும் அவர்கள் அங்கு பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்து கொண்டு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், அங்கு கிர்குக் மாகாணத்தில் வாடி அல்ஷாய் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்த நாட்டு ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் அங்கு ராணுவம் அதிரடியாக சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் தொடுத்தது. இந்த அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காத ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர்.

    இதன் முடிவில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். 21 மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் 7 பேர் பலியானார்கள். #ISleaderskilledinIraq
    பாக்தாத்:

    ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
     
    இந்நிலையில், ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு மறைந்திருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த சிலரை சரமாரியாக சுட்டனர்.

    இந்த தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 7 தலைவர்கள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். #ISleaderskilledinIraq
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈராக்கில் ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றனர். #Iraq
    பாக்தாத்:

    சிரியாவை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் அண்டை நாடான ஈராக்கிலும் காலூன்றி, அந்நாட்டின் பல்வேறு நகரங்களை தங்கள் வசமாக்கினர். இதையடுத்து, அமெரிக்க கூட்டுப்படைகளின் உதவியோடு ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்தது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பெரும் பின்னடைவை சந்தித்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக ஈராக் அரசு அறிவித்தது. எனினும் குறுகிய காலத்திலேயே ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு மீண்டும் காலூன்ற தொடங்கிவிட்டனர். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பாலைவன பகுதியான அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது.

    இந்த நிலையில், அன்பர் மாகாணத்தின் தலைநகர் ரமாடியில் உள்ள அல்-ரசாசா என்ற இடத்தில் ராணுவவீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

    இந்த தகவலை உறுதிப்படுத்திய ஈராக் ராணுவம், சுலைமான் அகமது முகைதின் கடந்த காலங்களில் அன்பர் மாகாணத்தில் எண்ணற்ற உயிர்களை பலிகொண்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என தெரிவித்தது. எனினும் இந்த சம்பவம் குறித்து ஐ.எஸ். பயங்கர வாத இயக்கம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈராக்கில் குர்தீஸ் புத்தாண்டு விழாவுக்காக சென்றவர்களின் சொகுசு படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. #BoatAccident
    மொசூல்:

    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த மொசூல் பகுதி ராணுவத்தால் மீட்கப்பட்டது. அங்கு குர்தீஸ் இன மக்களின் ‘நவ்ரஸ்’ என்ற புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    எனவே அப்பகுதி மக்கள் விடுமுறையை பொழுதுபோக்கு பகுதிகளுக்கு சென்று கழித்து வருகின்றனர். நேற்று டைகிரிஸ் நதிக்கரையில் உள்ள சுற்றுலா தலத்துக்கு ஏராளமான மக்கள் படகுகளில் சென்றனர்.

    அதில் ஒரு சொகுசு சுற்றுலா படகு நடுவழியில் சென்றபோது தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் படகு முழுவதும் ஆற்றில் முழ்கியது.

    இச்சம்பவத்தில் படகில் பயணம் செய்த 100 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் 61 பேர் பெண்கள். 19 பேர் குழந்தைகள் ஆவர்.

    இவர்கள் தவிர 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என ஈராக் பிரதமர் அதெல் அப்தெல் மாக்டி தெரிவித்துள்ளார்.

    படகு விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த படகு விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

    அதிக ஆட்களை படகில் ஏற்றியதும், ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததும் விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே படகு கம்பெனியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இக்கம்பெனியின் படகு போக்குவரத்துக்கு தடை விதித்தும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சில ஆண்டுகளாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி தவித்த மொசூல் மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக குர்தீஸ் இன மக்கள் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் இத்தகைய விபத்து நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  #BoatAccident

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்கள் புத்தாண்டை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றனர்.

    அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin