என் மலர்

    நீங்கள் தேடியது "War"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..
    • ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழப் போரில் சிங்கள அரசாங்கம், ராணுவத்தால் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 1.5 லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டனர்.

    போரில் படுகொலை செய்ய ப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் எதிரில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசாங்கம், ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    ஈழப் போரின் போது காணாமல் போன சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் உள்ளிட்ட பல்லாயி ரக்கணக்கா னோரின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஈழத் தமிழர்கள் உரிமைகளை பெற்றிட துணை நிற்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் தலைமை வகித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாநகரத் துணைச் செயலாளர் முத்துக்குமரன், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற தலைவர் போராசிரியர் பாரி, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டத் தலைவர் சேவியர், ஆதித்தமிழர் இளைஞர் பேரவை பொறுப்பாளர்கள் பிரேம்குமார் நிவாஸ், சிவா மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கணபதி, சத்யா, வெண்ணிலா , கண்ணன், தங்கராசு, ரெஜினால்டு ரவீந்திரன், செல்வம், மனோகர், தாமரைச்செ ல்வன், கஸ்தூரி, கோதண்ட பாணி, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூரில் தி.மு.க.- பா.ஜ.க. போஸ்டர் யுத்தம் நடக்கிறது
    • கிழித்தெறிந்து விட்டார்கள்.

    கரூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் மோதல்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வார பத்திரிகையின் அட்டையில் அண்ணாமலையை விமர்சித்து கட்டுரை வந்தது. இதனைப் பார்த்து உற்சாகமடைந்த உடன்பிறப்புகள் அந்த பத்திரிகையின் பெயருடன் கட்டுரை சம்பந்தப்பட்ட போஸ்டர்களை கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டி அண்ணாமலை மீதான கோபத்தை தணித்து கொண்டனர்.

    இது தி.மு.க.வினரின்

    கைங்கரியம் என்பதை அறிந்து பா.ஜ.க.வினர் அந்த போஸ்டர்களை கிழித்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக வி. செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கித் தர பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கினை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.

    இதுவே பதிலடி கொடுக்கத்தக்க தருணம் என கருதிய பா.ஜ.க.வினர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை முதல்வர் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என நள்ளிரவு மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி வெறுப்பேற்றினர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உ.பி.க்கள் அதையும் கிழித்தெறிந்து விட்டார்கள்.

    இது குறித்து பா.ஜ.க. தரப்பில் கூறும் போது,

    நாங்கள் கரூர் மாவட்ட பா.ஜ.க.என முகவரியுடன் போஸ்டர் ஓட்டுகிறோம். ஆனால் அவர்கள் மறைமுகமாக போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். எங்களது போஸ்டர்களை போலீசாரே கிழித்து விடுகிறார்கள் என தெரிவித்தனர்.

    தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும் போது,அமைச்சரை கேலி கிண்டல் செய்யும் வகையில் போஸ்டர் ஓட்டுவதை கரூர் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் கிழிக்காவிட்டாலும் உணர்ச்சிவசப்பட்டு பொதுமக்களே கிழித்து விடுகிறார்கள் என கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

    தென் கிழக்கு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் தைவான் தனி நாடாக இயங்குவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவானுக்கு வேறு நாட்டு தலைவர்கள் செல்ல கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும். இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்தது. தைவான் மீது பொருளாதார தடையையும் சீனா விதித்தது.

    தைவானை கப்பல்கள், விமானங்கள், ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட முப்படையினர் 6 முனைகளில் சுற்றி வளைத்து உள்ளனர். அவர்கள் போர் பயிற்சியை மேற்கொண்டனர்.

    கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சீனா சோதனை நடத்தியதாக தைவான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் குண்டுகளை வீசியும் , பீரங்கி தாக்குதல் நடத்தியும் சோதனையை மேற்கொண்டது. வருகிற 7-ந்தேதி வரை இந்த போர் பயிற்சி நடைபெறும் என சீனா தெரிவித்து உள்ளது.

    இதனால் எந்த நேரமும் தைவான் மீது சீனா போர் தொடுக்கலாம் என்ற பீதி உருவாகி உள்ளது. பொது மக்களும் என்ன நடக்கப் போகிறதோ தெரிய வில்லையே என்ற அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    ரஷியா-உக்ரைன் போரை தொடர்ந்து சீனா-தைவான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதால் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல் தொடர்பு ஒருங் கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:-

    ஒரே இரவில் தைவான் நீர்ச்சந்தி பகுதியில் சீனா 11 பாலிஸ்டிக் ஏவுகணை ஏவி உள்ளது. இது தீவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நான்சி பெலோசியின் வருகையை சாக்கு போக்காக சொல்லி சீனா ஆத்திரமூட்டும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

    இதை அமெரிக்கா ஏற்கனவே எதிர்பார்த்தது தான். சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்காவும் தயாராக உள்ளது. நெருக்கடியை நாங்கள் தேட மாட்டோம், விரும்பவும் மாட்டோம். தைவானின் நலன் மற்றும் பிராந்தியத்தின் நலன் மட்டுமே எங்களது குறிக்கோள்.

    மேலும், பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது.
    • தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது.

    தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

    இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

    இந்தநிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது.

    மேலும், தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தீவிரமாக நடத்தியது. சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது. இதனால் தென்சீன கடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றதால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடியை நிச்சயம் கொடுப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது. இதற்கிடையே தைவானின் கின்மென் தீவுகளில் சீன டிரோன்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தைவான் ராணுவத்தின் கின்மென் பாதுகாப்பு கமாண்டர் சாங் சுங் கூறும்போது, 'சீன டிரோன்கள் (ஆளில்லா விமானம்) நேற்று இரவு கின்மென் பகுதிக்குள் பறந்தன.

    அவைகளை விரட்ட உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தோம். நெருப்புகளை வீசி எச்சரிக்கை விடுத்தோம். இதையடுத்து டிரோன்கள் திரும்பி சென்றன. தைவானின் வெளியுறவுத் தீவுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறித்த உளவுத் தகவல்களை சேகரிக்க டிரோன்கள் பயன்படுத்தப் படுகின்றன' என்றார்.

    இந்தநிலையில் இன்று தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது. அங்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்பு இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது.

    இன்றுமுதல் வருகிற 7-ந்தேதி வரை சீன ராணுவத்தின் முக்கியமான ராணுவ பயிற்சி நடைபெறும் என்று தைவானின் வரை படத்தில் போர் பயிற்சி நடைபெறும் இடங்களை சுட்டிக்காட்டி அப்புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தைவான் ராணுவம் தரப்பில் கூறும்போது, 'தைவானை சுற்றியுள்ள நீரில் முன்னோடியில்லாத வகையில் நடைபெறும் சீனாவின் பயிற்சிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மோதலுக்கு தயாராக இருந்தாலும் அதை நாங்கள் விரும்பவில்லை என்றது.

    தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, 'போரை எதிர்நோக்காமல் இருக்கும்போது மோதலுக்கு தயாராகும் கொள்கையை எடுக்க சீனா நிலைநிறுத்த முயற்சிக்கிறது. மோதலை அதிகரிக்காமல், சச்சரவுகளை ஏற்படுத்தாத மனப்பான்மையுடன் இருக்கிறோம் என்றது.

    சீனா தனது ராணுவத்தின் போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதால் தைவான் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் தென்சீன கடல் பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.

    போர் பயிற்சி நடக்கும் பகுதிகளில் கப்பல்கள், விமானங்கள் குறிப்பிட்ட கடல்பகுதிகள், வான் வெளிக்குள் நுழையக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தைவான் விமானங்கள் செல்லும் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

    இந்தநிலையில் தைவானை சுற்றி போர் பயிற்சி நடத்துவதற்கு சீனாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறும்போது, 'சீனா செய்வது (போர் பயிற்சி) பொறுப்பற்றது என்று நாங்கள் நம்பு கிறோம்.

    ஏவுகணை சோதனை, துப்பாக்கி சூடு பயிற்சி, போர் விமானங்கள் பறந்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடக்கும்போது சில வகை யான சம்பவங்கள் (தாக்கு தல்) நிகழும் சாத்தியம் உள்ளது' என்றார்.

    இதேபோல் சீனாவுக்கு ஜி-7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை உயர் பிரதிநிதி ஜோசப் பொமுரல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் போரின் மூலம் கிளர்ச்சியாளர்கள் உட்பட இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    வாஷிங்டன்:

    2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக செயல்பட்டது.

    இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்திய அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மக்கள் நல நிறுவனமான வாட்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்பு போர் நடவடிக்கை மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் முதல் 5 லட்சத்து 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.



    கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படையினர், ராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆய்வில் அடங்குவர் என்றும், மிக துல்லியமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது எனவும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 272 முதல் 2 லட்சத்து 04 ஆயிரத்து 575 பொதுமக்கள் இந்த போர் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அதேபோல், 38 ஆயிரத்து 480 பொதுமக்கள் ஆப்கானிஸ்தானிலும், 23 ஆயிரத்து 372 மக்கள் பாகிஸ்தானிலும் கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவுடனான எந்த பிரச்சனையையும் போரினால் தீர்த்துவிட முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி குறிப்பிட்டுள்ளார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi
    நியூயார்க்:

    நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி  அமெரிக்கா சென்றுள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.

    இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக இந்த பேட்டியின்போது கருத்து தெரிவித்த ஷா மெஹ்மூத் குரேஷி , அமைதிக்கான வழியில் இந்தியா ஓரடி முன்னெடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டினார்.

    நாங்கள் அமைதிக்கான முதலடியை எடுத்து வைத்தோம். இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இருநாடுகளுமே அணு ஆயுத வலிமைமிக்க நாடுகளாக இருக்கும் நிலையில் பிரச்சனைகளை போரினால் சரிசெய்ய முடியாது.

    போர்முறை என்பது இதில் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டும்தான் ஒரே தீர்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிரியாவில் புரட்சி படையினரிடம் உள்ள இத்லிப் நகரை கைப்பற்றுவதற்காக அந்நாட்டு ராணுவ படைகள் பீரங்கி வாகனங்களுடன் தாக்குதல் நடத்த தயாராகி இருப்பதால் நகரில் உள்ள 7 லட்சம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். #Syria
    டமாஸ்கஸ்:

    அரபு நாடான சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் ப‌ஷர் அல் ஆசாத்தை தூக்கி எறிய அமெரிக்க ஆதரவு புரட்சி படைகள் ஒரு பக்கம் போரிட்டு வருகின்றன. இவை தவிர குர்திஸ் படைகள், துருக்கி ஆதரவு புரட்சி படை ஆகியவையும் போரிடுகின்றன.

    நாட்டின் பல பகுதிகள் புரட்சி படைகளின் கைவசம் உள்ளது. குறுகிய இடங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளிட்ட அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    புரட்சி படை மற்றும் தீவிரவாதிகளிடம் இருக்கும் இடங்களை மீட்பதற்கு சிரிய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. அவர்களுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் உதவி வருகின்றன. ரஷியா நேரடியாகவே வான் தாக்குதலை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே புரட்சி படையினரிடம் இருந்த கிழக்கு அலப்போ, கிழக்கு கூடா, தாரா ஆகிய பகுதிகளை ரஷிய படைகள் உதவியுடன் சிரியா மீட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சண்டைக்கு இடையே குண்டுவீச்சில் சிக்கி பலியானார்கள்.

    சிரியாவில் இத்லிப் என்ற பெரிய நகரம் உள்ளது. இதுவும் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. துருக்கியின் எல்லையில் உள்ள இந்த நகரை மீட்பதற்காக சிரியா படைகள் நகரை முற்றுகையிட்டுள்ளன.

    ஏராளமான கவச வாகனங்களும், பீரங்கி வாகனங்களும் தொடர்ந்து நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று ஆங்காங்கே விமானம் மூலமும், பீரங்கி மூலமும் குண்டு வீசப்பட்டது. ரஷிய விமானங்களும் தாக்குதல் நடத்தின. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் என்பது தெரிய வந்தது. 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.



    இந்த நகரில் தற்போது 7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 2½ லட்சம் பேர் அந்த நகரை சொந்த ஊராக கொண்டவர்கள். மற்றவர்கள் வேறு இடங்களில் போருக்கு பயந்து தப்பி வந்தவர்கள். இங்கும் இப்போது சண்டை தொடங்கி இருப்பதால் 7 லட்சம் மக்களும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தாக்குதல் தீவிரமானால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாக கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, 7 லட்சம் பேரையும் பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்று ஐ.நா. சபை சிரியா அரசை கேட்டு கொண்டுள்ளது.

    ஏற்கனவே புரட்சி படைகளிடம் இருந்த நகரங்களை மீட்ட போது, சிரியாவும், ரஷியாவும் கண்மூடித்தனமாக விமான தாக்குதல் நடத்தின. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    அதேபோன்ற நிலை இந்த நகரிலும் நடைபெறலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்லிப் நகரில் தாக்குதலை நடத்தக்கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அங்கு தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய மனித படுகொலையாக அமையும். அதை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்து இருக்கிறது. #Syria
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது அனைத்து போர்களுக்கும் தாய்ப்போராக இருக்கும் என ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி எச்சரித்துள்ளார். #RouhaniwarnsTrump #dontplaywiththelionstail
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி, ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்யாவிட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய கிழக்காசிய துணைகண்டத்தில் உள்ள இதர 15 நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை ஈரான் தடுத்து நிறுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.


    இந்நிலையில், உலக நாடுகளில் உள்ள ஈரான் நாட்டு தூதர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அதிபர் ஹஸன் ரவுகானி, ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது அனைத்து போர்களுக்கும் தாய்ப்போராக (மிக பிரமாண்டமானதாக) இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

    சிங்கத்தின் வாலை பிடித்து விளையாடாதீர்கள், மிஸ்டர் டிரம்ப். இதன் விளைவு வருத்தத்தில்தான் போய் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #RouhaniwarnsTrump #dontplaywiththelionstail 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிரியாவின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் அதிபர் ஆசாத்தின் வெளிநாட்டு ஆதரவு படை வீரர்கள் 52 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Syria
    பெய்ரூட் :

    சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிரியா-ஈராக் எல்லை அருகே நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிரியா நாட்டினர் அல்லாத சிரியா அரசின் ஆதரவு பெற்ற வெளிநாட்டு படை வீரர்கள் 52 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ரமி அப்தேல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    சிரியா - ஈராக் எல்லை அருகே உள்ள அல்-ஹரி எனும் இடத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்க கூட்டுப்படைகள் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிரியாவை சேர்ந்த ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது. 

    30 ஈராக்கிய ராணுவ வீரர்கள், 16 சிரிய வீரர்கள் மற்றும் இரத வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய மாகாணமான டேய்ர் எஸ்ஸோர் பகுதி ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அமெரிக்க கூட்டுப்படைகளும் சிரியாவிற்கு ஆதரவாக சண்டையிடும் ரஷிய படைகளும் ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து தனித்தனியே சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #Syria
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவுடன் போர் நடைபெறுவதற்கு இடமில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அதேசமயம், அமைதியை விரும்பும் பாகிஸ்தானை பலவீனமாக நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. #PakistanArmy
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரம்ஜான் நோன்பை முன்னிட்டு எல்லையில் தாக்குதலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், பாகிஸ்தான் ராணுவம் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

    இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தலைமை இயக்குனர் ஆசிப் கபூர் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய ராணுவம் 2018-ம் ஆண்டில் 1077 முறை எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. எங்களுடைய விருப்பம் எல்லாம் அமைதிதான் என்பதற்காக பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம். இந்திய ராணுவம் கடந்த வாரம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை மீறிய போதும் நாங்கள் பதிலடி கொடுக்கவில்லை. இந்திய ராணுவம் பொதுமக்கள் குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய போதுதான் நாங்கள் தாக்குதலை நடத்தினோம். 

    போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் மதிப்பளிக்க விரும்புகிறது. எதிர்காலத்தில் என்ன வேண்டும் என்பதை இந்தியர்கள் உணரவேண்டும், புரிந்துக்கொள்ள வேண்டும். அணு ஆயுத சக்திகளாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் இடையே ஒருபோதும் போருக்கு இடமில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எல்லையில் இந்திய ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் சிறுமியும், மூதாட்டியும் உயிரிழந்திருப்பதாகவும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanArmy
    ×