என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆத்தூர் அருகே பயங்கரம்- வாலிபர் எரித்து கொலை
Byமாலை மலர்11 Aug 2018 2:19 PM GMT (Updated: 11 Aug 2018 2:19 PM GMT)
ஆத்தூர் அருகே 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூரில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் ஆத்தூர் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே ஆத்தூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் எரிக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு நிர்வான நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற தெரியவில்லை.
இதனால் அந்த பகுதியில் மாயமானவர்களின் பட்டியலை தயார் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரை எரித்து கொன்று உடலை அங்கு வீசி சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக எரித்து கொன்றனர்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X