search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "financial assistance"

    • ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்றவர் மாயம்.
    • சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்தார்.

    அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    குளச்சல் கிராமத்தை சேர்ந்த யாசர் அலி என்பவர் கொச்சி அருகே அரபிக் கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்ற யாசர் அலி கடலில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் "அ" கிராமம், காமராஜ் சாலையைச் சேர்ந்த முஹைதீன் யாசர் அலி (வயது 32) த/பெ.இப்ராஹீம் என்பவர் கடந்த 08.01.2024 அன்று கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி துறைமுக கடலோர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக் கடலில் 163 கி.மீ. வடமேற்கு திசையில் ஆழ்கடலில் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

    அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள திரு.முஹைதீன் யாசர் அலி அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மறைந்த சிறை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவியை மதுரை மத்திய சிறை காவலர்கள் வழங்கினர்.
    • மதுரை மத்திய சிறையில் நர்சரி கார்டன் புதுப்பிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி ஆய்வு செய்தார். இறுதி நாளான நேற்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற மதுரை மத்திய சிறையை சேர்ந்த உதவி சிறை அலுவலர் பாலமுரு கன், வெற்றிச்செல்வம் மற்றும் அண்ணா பதக்கம் பெற்ற முதல் தலைமை காவலர் சித்ராதேவி ஆகி யோருக்கு சிறைத்துறை தலைமை இயக்குநரின் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    திருச்சி மத்திய சிறையில் பணிபுரிந்து சமீபத்தில் மறைந்த சிறை காவலர் சம்பத் குடும்பத்தினருக்கு மதுரை சிறை காவலர்கள் சார்பாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் நிதி உதவியை டி.ஐ.ஜி. பழனி வழங்கினார்.

    மேலும் மதுரை மத்திய சிறையில் நர்சரி கார்டன் புதுப்பிக்கப்பட்டது. இதனை நடிகர் காளையன் திறந்து வைத்தார். இதில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பா ளர் பரசுராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விலங்குகள் நலனில் பாதுகாப்பு மற்றும் சேவை செய்யும் அக்கறை யுள்ள அமைப்புகள் கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்திட நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை அளிப்பதற்கு நிதி உதவி, தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திட கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி போன்ற பணிகளை மேற்கொள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் நிதி உதவி பெற்றிட https://cms.tn.gov.in/sites/default/files/announcement/ahf_TNAWB_041122.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.
    • சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கொரநாட்டுக் கருப்பூர் ஊராட்சி, கீழத் தெருவில் வசித்து வரும் கவிதா சேகர் மற்றும் ஞானமணி, அருள்தாஸ் ஆகியோரது குடிசை வீடுகள் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு, மிகவும் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும் அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்தார்.

    நிகழ்வில், கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, துணைத் தலைவர் சரவணன், மாவட்ட திமுக பிரதிநிதி உதயம் கோவிந்த், ஒன்றிய அவைத்தலைவர் அபிராமிசுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பாஸ்கர், உலகநாதன், கருணாகரன், பழனிசாமி, சுரேஷ், பாலையா, ரமேஷ் உள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் டீ கடைக்காரருக்கு நிதிஉதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
    • டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் டீக்கடை வைத்தி ருப்பவர் சிவலிங்கம். இவர் நேற்று வழக்கமாக கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவில் பெய்த கன மழை காரண மாக இவரது கடைக்கு அருகில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து டீக்கடையில் விழுந்தது.

    இதில் இந்த கடை முற்றி லும் சேதமடைந்தது. இது குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனுக்கு தெரிய வந்ததை அடுத்து பாதிக்க பட்ட சிவலிங்கத் திற்கு நிதிஉதவி வழங்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தலைமையில் கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடுத்த நிதியுதவியை வழங்கினர்.அருகில் பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.

    • நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
    • காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    முத்தூர்:

    காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தவர் பழனி. இவர் கடந்த 4-ந் தேதி இயற்கை எய்தினார். இவரது மனைவியும் காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நகராட்சி 11-வது வார்டு பொதுமக்களின் உதவியோடு ரூ.35 ஆயிரம் நிதி சேகரிக்கப்பட்டு அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகர்மன்ற உறுப்பினர் கே.டி.அருண்குமார் பங்கேற்று, பழனியின் குடும்பத்தினருக்கு மேற்கண்ட தொகையை வழங்கினார். மேலும் நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.

    • குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் போலீசார் ரூ.3.75 லட்சம் நிதி திரட்டினர்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, படிச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (வயது 45). இவா் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக வேலை பார்த்தார். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

    இந்த நிலையில் சதீஷ் கடந்த 13-ந்தேதி காலை சுள்ளியோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சேரம்பாடிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது லாரி மோதியதில் சதீஷ் உயிரிழந்தாா்.இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார், விபத்தில் இறந்த சதீஸ் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் ரூ.3.75 லட்சம் நிதியை திரட்டினர். தொடர்ந்து அந்த தொகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல் கூறினாா்.

    • ஜெனித், ஜோசுவா ஆகிய 2 சிறுவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்தனர்.
    • இதனையறிந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அவர்களது பள்ளி மேற்படிப்பிற்க்கான செலவை ஏற்று 8 வருடமாக கல்வி கட்டணத்தை தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தி வருகிறார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் தச்சன்விளை கிராமத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த பாட்டி பால்தங்கம் பராமரிப்பில் உள்ள ஜெனித், ஜோசுவா ஆகிய இரு சிறுவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்தனர். இதனையறிந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அவர்களது பள்ளி மேற்படிப்பிற்க்கான செல வை ஏற்று கடந்த 2014-முதல் 8 வருடமாக கல்வி கட்டணத்தை தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தி வருகிறார்.

    அதில் ஜெனித் பள்ளி படிப்பை முடித்து சென்னை-கிங்ஸ் என்ஜினீ யரிங் கல்லூரியில் இலவச மாக என்ஜினீயரிங் கல்வி பயின்று வருகிறார். இரண்டாவது பேரன் ஜோசுவா திசையன்விளை-லயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் மாணவன் ஜோசுவாவின் கல்வி கட்டணத்திற்க்காக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய கல்வி கட்டண வரைவோலையை தச்சன்விளையில் பாட்டி பால்தங்கம், மாணவன் ஜோசுவாவிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் சங்கர் வழங்கினார்.

    அப்போது சாத்தா ன்குளம் வட்டார காங்கி ரஸ் கமிட்டி தலை வர்கள் சக்திவேல் முருகன், பார்த்த சாரதி, முத்து வேல், பிரபு கிருபா கரன், தச்சன்விளை கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிவா, முதலூர் யோகபாண்டி, சாத்தான்குளம் நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சாலமோன்,முத்துராஜ், உதயமணி, மணிகண்டன், அழகேசன், மகாலிங்கம், சித்திரை பழம், ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். கல்வி உதவி தொகையை பெற்ற பாட்டிமற்றும் மாணவன் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கலெக்டர் வழங்கினார்
    • மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட் டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற் றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, கடன்உதவி, இலவச வீடுகள், குடிநீர் வசதி வேண்டி மனு கொடுத்தனர். மொத்தம் 283 மனுக்களை பொது மக்களி டம் இருந்து பெற்று, சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களி டம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து இருளர் இன மக்கள் 12 நபர்க ளுக்கு நலிந்தோர் நிதியுதவி, குடிசை வீடு மாற்று நிதியுதவி, சுய தொழில் நிதியுதவி, திரு நங்கை சுயதொழில் நிதியுதவி என ரூ.64 ஆயிரம் வழங்கி னார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவி யாளர் (நிலம்) கலைவாணி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ். மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் சரவணகு மார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இளங்கோவன் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார்.
    • இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்ப ருத்தி நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (51,) இவர் கடந்த மாதம் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் டிசை னிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி சவூதி அரேபியா நாட்டில் உயிரிழந்தார். பக்ரீத் பண்டிகை காரண மாக, சவூதி அரேபியாவில் அரசு விடுமுறை என்பதால் இளங்கோவன்ன் உடலை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் இருந்தது.

    இந்த நிலையில், இளங்கோவன் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு எடுத்து வரவேண்டும் என அவரது உறவினர்கள், சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தா னிடம் கோரிக்கை வைத்த னர். இந்த கோரிக்கையை ஏற்று இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. இதன் காரணமாக, இளங்கோவனின் உடல் விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்து, பின்னர், மங்கலம் பேட்டை யில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையி னர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், ராதாகிருஷ்ணன்எம்.எல்.ஏ. ஆகியோர் மங்கலம் பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர், இளங்கோ வனின் இறுதிச் சடங்கிற்காக அமைச்சர்கள் இருவரும் தனித்தனியாக நிதி உதவி வழங்கினர். அப்போது, விருத்தாசலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் உடனி ருந்தனர். நிதி உதவியை பெற்றுக் கொண்ட இளங்கோவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். உயிரிழந்த இளங்கோவ னுக்கு கவுரி என்கிற மனை வியும், காயத்ரி (வயது. 21) என்கிற மகளும், ஜீவன்ராஜ் (வயது.12) என்கிற மகனும் உள்ளனர்.

    • தெப்பகுளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது
    • அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது. தெப்பத் திருவிழாவின் போது திருக்கட்டளை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து மகன் சுந்தர் என்பவர் எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தார் இதனை தொடர்ந்து இறந்து போன சுந்தர் இல்லத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். மேலும் அரசின் மூலம் கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளை விரைந்து பெற்றுத்தர அவரது பெற்றோரிடம் உறுதியளித்தார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுக்காதவரையில் நிதி உதவி செய்ய வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கூறி உள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி, அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

    புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுக்காதவரையில் நிதி உதவி செய்ய வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கூறி உள்ளது. எரிபொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடம் ரூ.3,250 கோடி கடனை இலங்கை நாடி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கே பணம் இன்றி இலங்கை தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், ஆசியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் 27-வது சர்வதேச மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது. இதில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே காணொலிக்காட்சி வழியாக பேசியபோது கூறியதாவது:-

    இலங்கையின் முக்கிய வளர்ச்சி கூட்டாளிகளில் ஜப்பான் முக்கிய பங்காளி ஆகும். இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை களைகிற வகையில் தேவையான நிதி உதவியை ஜப்பான் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில் இலங்கையின் சுற்றுலா துறை முடங்கியது.

    கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் உள்நாட்டுக்கு பணம் அனுப்புவது குறைந்து விட்டது. வெளிநாட்டு கடன்கள் ஒருபுறம், பண வீக்கம் மறுபுறம் என்று இலங்கை நெருக்கடியில் இருக்கிறது. நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக உழைக்கிறோம். நாங்கள் சர்வதேச நண்பர்களிடம் அவசர உதவியை எதிர்பார்க்கிறோம். குறிப்பாக அத்தியாவசிய மருந்துகள், உணவு பொருட்கள், எரிபொருட்கள் தேவையை சந்திப்பதற்கு இந்த நிதி உதவி வேண்டும்.

    இலங்கைக்கு சர்வதேச நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். கடினமான இந்த தருணத்தில் நாட்டிற்கு ஆதரவை வழங்க வேண்டுகிறோம் என்று அவர் கூறினார்.
    ×