என் மலர்
நீங்கள் தேடியது "Fishermen Death"
- திருவிழாவில் மின் அலங்காரத்திற்கு ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கியது.
- அரசு சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 1- ம் தேதி, தேவாலய திருவிழாவில் மின் விளக்குகள் அலங்காரத்திற்கு பயன்படுத்திய ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விஜயன் வயது 52, ஜஷ்டஸ் வயது 33, சோபன் வயது 45, மைக்கேல் பின்டோ வயது 42 ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு மீனவரணி மாநில செயலாளர் ஏற்பாட்டில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
மீனவரணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மேயர் மகேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நிவாரண நிதியை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மீனவர் நல்வாரிய உறுப்பினர் ஜோஸ், கிழக்கு மாவட்ட மீனவரணி தலைவர் எஸ். கே. ஆன்டனிராஜ், மீனவரணி அமைப்பாளர் அனனியாஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
- அதிகாலை ஒரே படகில் நடுக்குப்பம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
- சிறிது நேரத்தில் பாஸ்கர், ராஜி ஆகியோரது உடல்கள் மெரினா கடற்கரை அருகே கரை ஒதுங்கியது.
ராயபுரம்:
சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் (வயது 61), ராஜி (35). மீனவர்கள். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை ஒரே படகில் நடுக்குப்பம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கிய படகு கடலில் கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் பாஸ்கர், ராஜி ஆகிய இருவரும் கடலில் மூழ்கினர். சிறிது நேரத்தில் பாஸ்கர், ராஜி ஆகியோரது உடல்கள் மெரினா கடற்கரை அருகே கரை ஒதுங்கியது. அவர்களது படகு மட்டும் விவேகானந்தர் இல்லம் அருகே கரை ஒதுங்கியது.
போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கடற்கரைகிராமமான காரங்காட்டைச் சேர்ந்தவர் ஐசக் நியூட்டன். இவரது மனைவி அந்தோணியம்மாள்.
இவர்களது மூத்த மகன் ரூசோ (22). பட்டதாரியான இவர் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சக்தி குலங்கரா கடல் பகுதியில் மீன் பிடிக்க விசைப் படகில் சென்றார். கடலில் ஏற்பட்ட சுழலில் சிக்கி மூச்சுத்திணறி பலியானார்.
இவரது உடல் பிரேத பரிசோதனைக்குப்பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான காரங்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
காசிமேடு, காசிபுரத்தை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 50). மீனவர். இன்று அதிகாலை அவர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பழைய மீன் ஏலம் விடும் பகுதிக்கு சென்றார்.
அப்போது அவர் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதில் கடலில் மூழ்கி குழந்தைராஜ் பலியானார். அவரது உடல் அதே பகுதியில் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. #Fishermendeath






