என் மலர்
நீங்கள் தேடியது "International Monetary Fund"
- பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது.
- பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 8,500 கோடி) நிதியுதவி கிடைத்தது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) சமீபத்தில் சுமார் 800 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,800 கோடி) நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வாதத்தின்படி, பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆபத்தான முறையில் பலவீனமடைந்து வருகிறது.
பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வரி வருவாய் 2018 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டில் அது வெறும் 9.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதார பாதிப்பின் பிரதிபலிப்பாகும்.
இதுபோன்ற சூழ்நிலையில், சர்வதேச நிதியமைச்சகம் மற்றும் ADB போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பதிலாக இராணுவத் தேவைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு திருப்பிவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மாதம், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 8,500 கோடி) நிதியுதவி கிடைத்தது. அப்போதும் இந்தியாவும் தனது ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நிதியம் நடவடிக்கை.
- சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த ஒப்பந்தம் ஆறுதல்.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, மருந்து, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் நடத்திய போராட்டத்தில் அநநாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற நிலையில், அவரது தலைமையிலான அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை நாடியது.
இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்தது. அவர்களுக்கும், இலங்கை அரசு அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்புக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, முதல் கட்டமாக இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரணில் விக்கிரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை இலங்கை வரலாற்றில் முக்கியமான முன்னேற்றம் என்றும், புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் நாடு திவால் நிலையில் இருந்து விடுபடுவது முக்கியம் என குறிப்பிட்ட அவர், கடன்களை செலுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த உடன்படிக்கை சற்று ஆறுதல் அளிப்பதாக அவர் கூறினார்.
- இலங்கையை போல பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
- பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இன்று ஒப்புதல் அளித்தது.
வாஷிங்டன்:
இலங்கையை அடுத்து தற்போது பாகிஸ்தான் நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் அந்நாடு நிதியுதவி கோரியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இன்று ஆலோசனை நடத்தியது. பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் 7 மற்றும் 8வது தவணையாக பாகிஸ்தான் 1.1 பில்லியன் டாலர்களைப் பெற்றுக் கொள்ளும் என தெரிகிறது.

இதேபோல் சந்தை அபாயங்கள் அதிகரித்திருப்பதால் உலகளாவிய அளவில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாக குறையும் என்றும், வர்த்தக மோதல் காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சியும் குறையும் என்றும் ஐஎம்எப் கணித்துள்ளது. #InternationalMonetaryFund #IMF #IndiaGrowthRate






