search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IMF"

    • பாகிஸ்தானுக்கு அதிகப்படியான கொள்கை பரிந்துரைகள் தேவையில்லை.
    • தற்போது தெரிவித்துள்ள கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.

    பாகிஸ்தான் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. தற்போது அமைந்துள்ள புதிய அரசு பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகளை நாடி வருகிறது.

    பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

    சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த 2 முதல் மூன்று வருடங்கள் ஆகும் என பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.

    தற்போது அமெரிக்கா சென்றுள்ள முகமது அவுரங்கசீப் உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் புதிய கடன் பெறுவது தொடர்பான ஆலோசனை பங்கேற்க உள்ளார்.

    இந்த நிலையில்தான் ஐ.எம்.எஃப். ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து முகமது அவுரங்கசீப் கூறியதாவது:-

    பாக்கிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒரு பெரிய மற்றும் நீண்ட திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஏனெனில் எங்களுக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தேவை.

    ஐ.எம்.எஃப். உடன் 24 திட்டங்களில் பாகிஸ்தான் நுழைந்துள்ளது. கட்டமைப்பு சீரமைப்பு நோக்கி செல்லாவிட்டால் நாடு மற்றொரு திட்டத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும்.

    இந்த அம்சங்களின் செயல்பாட்டினை நாம் உண்மையில் நகர்த்தத் தொடங்குவதற்கான நேரம் இது. ஒரு பெரிய மற்றும் நீட்டிக்கப்பட்ட திட்டத்தைத் தேடுகிறோம். எனவே நாங்கள் செயல்படுத்தியவுடன், கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு இரண்டு முதல் மூன்று வருட கால அவகாசம் தேவைப்படும்.

    பாகிஸ்தானுக்கு அதிகப்படியான கொள்கை பரிந்துரைகள் தேவையில்லை. தற்போது தெரிவித்துள்ள கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் நகரத் தொடங்க வேண்டிய நேரம் இது.

    நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சரியான முடிவுகள், சரியான நேரத்தில் செயல்படுத்துதல் தேவை, ஏனெனில் செயல்படுத்தாமல் எந்த மூலோபாயமும் செயல்படாது.

    இவ்வாறு அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் கிட்டத்தட்ட அனைத்து பெரிய பொருளாதார இலக்குகளையும் இழக்கும் அபாயத்தை உலக வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரித்தனர்.

    • 2024ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.5 சதவீதம் குறைய உள்ளதாக எச்சரித்தது ஐஎம்எஃப்
    • அத்தியாவசிய பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

    கடந்த ஜூலை மாதம், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, வாஷிங்டனை மையமாக கொண்ட ஐஎம்எஃப் (IMF) எனும் சர்வதேச நிதி நாணயம், $1.2 பில்லியன் வழங்கியிருந்தது.

    பாகிஸ்தானின் பொருளாதார நிலையை ஆய்வு செய்த ஐஎம்எஃப், தற்போது $700 மில்லியன் நிதியுதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த டிசம்பர் மாதம், இது குறித்து முடிவெடுக்கவிருந்த அதன் செயற்குழு சந்திப்பு, தள்ளி போடப்பட்டது. தொடர்ந்து, வரும் ஜனவரி 11 அன்று இது குறித்து ஆலோசிக்க உள்ளது.

    பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இவ்வருடம் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஆணையம், அதிகரிக்கும் விலைவாசியினால் பொருளாதாரம் நிலையற்றதன்மையை அடைந்திருப்பதாக எச்சரித்துள்ளது.

    கடந்த 2023 டிசம்பர் 22 காலகட்டத்தில், அந்நாட்டின் மத்திய வங்கியில் டாலர் கையிருப்பு $853 மில்லியன் அளவிற்கு உயர்ந்தது. இது ஐஎம்எஃப் விதித்திருந்த இலக்கை விட பாகிஸ்தான் கரன்சியில் ரூ.43 பில்லியன் அதிகம்.

    கடந்த நவம்பர் மாதம், அந்நாட்டு நிதியமைச்சர், "மிக விரைவாக நிதியுதவி தேவைப்படுகிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டே நிதியுதவி வழங்கினாலும், அதற்கு ஈடாக பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இவற்றை கடைபிடித்தாக வேண்டிய கட்டாயத்தால் பாகிஸ்தான் பல இலவசங்களையும், மானியங்களையும் நிறுத்தியுள்ளது.

    இதன் விளைவாக பால், உணவு, பெட்ரோல், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வரலாறு காணாத உயர்வு அங்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அங்கு சில வாரங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இவையனைத்தும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க சர்வதேச நிதியத்தின் தலைவர் டெல்லி வந்தார்.
    • ஒடிசா கிராமிய கலைஞர்களின் நடனத்தை ரசித்த அவர் தானும் நடனமாடி மகிழ்ந்தார்.

    புதுடெல்லி:

    ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    ஜி20 மாநாடு தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்குகிறது. நேற்று முதல் ஜி20 உறுப்புநாடுகளின் தலைவர்கள் டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்.

    இந்நிலையில், ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜிவாவும் டெல்லி பாலம் விமான நிலையம் வந்திறங்கினார்.

    தலைவர்களை வரவேற்பதற்காக விமான நிலைய அரங்கில் ஒடிசா கிராமிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து ரசித்த கிறிஸ்டினா ஜியார்ஜிவா, தன்னை மறந்து அவர்களைப் போல் நடனமாடி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    • உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது.
    • உலக பொருளாதாரத்தில் ஐ.எம்.எப். இந்தியாவை வெளிச்சமான இடத்தில் வைத்துள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்களின் 7-வது மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    இந்தியா 2014 முதல் சீர்திருத்தம், வெளிப்பாடு சிறப்பான செயல்பாட்டின் பாதையில் உள்ளது. இதன் விளைவாக இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறியுள்ளது.

    உலக பொருளாதாரத்தில் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவை வெளிச்சமான இடத்தில் வைத்துள்ளது. உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் வலிமையான மேக்ரோ பொருளாதார அடிப்படைகளே இதற்கு காரணம். கடந்த 8 ஆண்டுகளில் முதலீட்டிற்கான வழிமுறைகளை துரிதப்படுத்தி, பல்வேறு தடைகளை இந்த அரசு நீக்கியுள்ளது. மிகவும் முக்கியமான பாதுகாப்பு, சுரங்கம், விண்வெளி துறைகளில் தனியாருக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

    பருவநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலர்களை காலநிலை நிதியாக வழங்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்றார்.
    வாஷிங்டன்:

    ஸ்காட்லாந்தின் துறைமுக நகரான கிளாஸ்கோவில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு சமீபத்தில் தொடங்கியது.

    கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் நேரில் பங்கேற்றார்.

    மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை இந்தியா அடையும். வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலர்களை சீக்கிரம் காலநிலை நிதியாக வழங்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

    இந்நிலையில், கிளாஸ்கோ மாநாட்டில் இந்தியா வெளியிட்ட உறுதிமொழியை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது. 

    இதுதொடர்பாக ஐ.எம்.எப். தகவல் தொடர்பு துறை இயக்குனர் ஜெர்ரி ரைஸ் கூறியதாவது:

    2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை அடையும் என இந்தியா அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

    இந்தியா மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும் நம்பியுள்ளது. எனவே அதன் நடவடிக்கைகள் மற்ற வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் நடவடிக்கையை ஊக்குவிக்க உதவும்.

    நடப்பு பத்தாண்டுகளில் முன்னேற்றத்தை அடைவதில் இந்தியா கவனம் செலுத்துவதால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மற்ற நாடுகளைப் போலவே தற்போதைய தசாப்தத்தில் வாயு மாசுவைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றுவது முக்கியம் என கூறினார்.

    இதையும் படியுங்கள்...உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.93 கோடியைக் கடந்தது
    பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை கையாளுவது பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

    எனவே நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு, சர்வதேச நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், சர்வதேச நிதியத்துக்கும் இடையே பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில், வெளிநாட்டு கடன் சுமைகளை குறைப்பதற்காக பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி) வழங்க சர்வதேச நிதியம் முன்வந்துள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் சர்வதேச நிதியத்தின் இயக்குநர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை பிரதமர் இம்ரான்கானின் நிதி ஆலோசகரான அப்துல் ஹபிஸ் ஷேக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன்கள் 90 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. ஏற்றுமதியின் அளவு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து சுருங்கி வருகிறது.

    ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 20 பில்லியன் டாலர்களை எட்டியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் அன்னிய செலாவணி கையிருப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.

    எனவே, வெளிநாட்டு கடன் பொறுப்பு தொடர்பாக ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய தொகையின் அளவில் 12 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

    இந்த சூழலை சமாளிக்க அடுத்த 3 ஆண்டுகளில் சர்வதேச நிதியத்திடம் இருந்து 6 பில்லியன் டாலர்களை பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதற்கு சர்வதேச நிதியத்தின் தலைமைக்குழு ஒப்புதல் அளிக்கும் என நம்பிக்கை உள்ளது.

    அத்துடன் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தும் 2 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை நிதியுதவியாக பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. #IMF #Pakistan #ChristineLagarde
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்நாடு உள்ளது.

    அந்நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு வெறும் 8.12 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57 ஆயிரத்து 650 கோடி) மட்டுமே உள்ளது.

    இது ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும்.

    அது மட்டுமின்றி இந்த தொகை, 7 வார கால இறக்குமதிக்குத்தான் பாகிஸ்தானுக்கு போதுமானதாக உள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் மறுத்து விட்டன.

    இந்த நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு சீனா 2.5 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.17ஆயிரத்து 750 கோடி) சவுதி அரேபியா 6 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.42 ஆயிரத்து 600 கோடி) நிதி உதவியாக வழங்க முன்வந்தன. எனினும் பாகிஸ்தான் பொருளாதர நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சூழல் இன்னமும் வரவில்லை.

    இந்த நிலையில், துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றுள்ளார். அவர் இந்த மாநாட்டுக்கு மத்தியில் ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டேவை சந்தித்து பேசினார். இது குறித்து இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களை மோற்கொள்வதில் இருவருக்கும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது” என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், “இந்த சீர்திருத்தங்கள் நாட்டை நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். பாதிப்படைந்துள்ள துறைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்” என்றார்.

    அதே போல் இந்த சந்திப்பு தொடர்பாக ஐ.எம்.எப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானை பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்க அந்நாட்டிற்கு உதவ ஐ.எம்.எப். தயாராக உள்ளது. இதற்காக தீர்க்கமான மற்றும் வலுவான கொள்கைகளை வகுத்து கூடுதல் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #IMF #Pakistan #ChristineLagarde
    நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. #InternationalMonetaryFund #IMF #IndiaGrowthRate
    வாஷிங்டன்:

    ஐஎம்எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் நடப்பு ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவீதமாகவும் அடுத்த ஆண்டு 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது.


    பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல் போன்ற திட்டங்களால் முதலீடு அதிகரிப்பு, தனியார் நுகர்வு ஆகியவை வலுப்பட்டதன் காரணமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்துள்ளதாக ஐ.எம்.எப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் சந்தை அபாயங்கள் அதிகரித்திருப்பதால் உலகளாவிய அளவில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாக குறையும் என்றும், வர்த்தக மோதல் காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சியும் குறையும் என்றும் ஐஎம்எப் கணித்துள்ளது. #InternationalMonetaryFund #IMF #IndiaGrowthRate
    ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் எனும் இந்தியரை நியமித்து அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #IMF #GitaGopinath
    புதுடெல்லி :

    பன்னாட்டு நிதியம் என அழைக்கப்படும் ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இத்தகவலை ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்துள்ளார்.

    தற்போது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக கீதா கோபிநாத் பணியாற்றி வருகிறார்.

    முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார். பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன், பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் உள்ளிட்ட வங்கிகளின் பொருளாதார ஆலோசனை குழுவிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

    மேலும், பொருளாதார பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியராகவும் உள்ள இவர், 40-க்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

    கீதா கோபிநாத் கடந்த 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றார். தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் கீதா முடித்தார்.

    அதன்பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகச் சேர்ந்த கீதா கோபிநாத், 2005-ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கு மாறினார். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பிறகு ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது. #IMF #GitaGopinath
    ×