என் மலர்
நீங்கள் தேடியது "Economy"
- உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
இந்திய பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று மத்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், "தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த நிதியாண்டில் (2025-26) நம் நாட்டின் பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.357 லட்சம் கோடி) கடக்கும்" என்று தெரிவித்தார்.
- சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
- செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி தனது இல்லத்தில் இன்று மாலை பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில், இந்தியாவின் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அனைத்து துறைகளிலும் விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரததிற்காக வழிவகை, வாழ்க்கை முறை வணிகம், தொழில் செய்வதை எளிமைப்படுத்துவதற்கும் செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்களுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
- இது 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 37 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
- வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் நாணயத்தின் மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free trade அக்ரீமெண்ட்)நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா அதன் ஏழு வர்த்தக கூட்டாளர்களில் ஐந்து பேருடன் வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இது 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 37 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
2025 நிதியாண்டில் ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 45.2 பில்லியன் டாலர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.
2021 முதல், இந்தியா, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது.
இருப்பினும், 2022 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
10 நாடுகளைக் கொண்ட ASEAN கூட்டமைப்புடனான பற்றாக்குறை 2019 நிதியாண்டில் 21.8 பில்லியன் டாலர்களில் இருந்து 2025 நிதியாண்டில் 45.2 பில்லியன் டாலராக உயர்ந்தது.
வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டின் இறக்குமதிகள், ஏற்றுமதிகளை விட அதிகமாக இருக்கும்போது ஏற்படும் நிலை. ஒரு நாடு வாங்கும் பொருட்களின் மதிப்பு, அது விற்கும் பொருட்களின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்போது வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் நாணயத்தின் மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் முக்கிய காரணி ஆகும்.
- உலக நாடுகளின் கடன் திறனை 'AAA'-ல் இருந்து C வரை மூடிஸ் நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.
- இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் ரேட்டிங் குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்கை 'AAA'-வில் இருந்து 'Aa1' ஆக மூடிஸ் நிறுவனம் குறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் கடன் திறனை 'AAA'-ல் இருந்து C வரை மூடிஸ் நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.
இந்நிறுவனம் அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'AAA' (outlook)-ல் இருந்து 'Aa1' (Stable) ஆக குறைத்தது அந்நாட்டில் பேசுபொருளாகியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'Aa1' ஆக மூடிஸ் நிறுவனம் குறைத்ததால் அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
- தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்.
- பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் (Women IPS) தமிழ்நாடு முதலிடம்.
பொருளாதார வளர்ச்சியில் 9.69% உயர்ந்து இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
* பொருளாதார வளர்ச்சியில் 9.69%. இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.
*ஏற்றுமதி தயார் நிலையில் தமிழ்நாடு முதலிடம்.
*தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்.
*புத்தாக்கத் தொழில்கள் தரவரிசைப் பட்டியலில் 2018-ல் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 2022 திராவிட மாடல் ஆட்சியில் முதலிடம்.
*பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் (Women IPS) தமிழ்நாடு முதலிடம்.
*இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாடு 38 சதவிகிதம் - முதலிடம்.
*அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்.
*அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் (RAMSAR Sites) கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.
*வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்.
*இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாடு முதலிடம்.
*இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்.
*தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்.
*அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்
- பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்திய வான்வெளி பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் வினியோகத்தை மத்திய அரசு அடியோடு நிறுத்தி வைத்தது. 1960-ம் ஆண்டில் சிந்துநதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் 65 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானில் பொருளாதாரத்தை மொத்தமாக முடக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்புக்குழு இயங்கி வருகிறது.
இந்த குழு தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பது மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் நடக்கிறது என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். இந்த உத்தரவை நிறைவேற்றும் வரை சம்பந்தப்பட்ட நாடு 'கிரே' பட்டியலில் வைக்கப்படும்.
கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் 'கிரே' பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தீவிரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் உறுதி அளித்ததை தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபரில் 'கிரே' பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானை மீண்டும் 'கிரே' பட்டியலில் கொண்டு செல்ல முயற்சி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் மீண்டும் 'கிரே' பட்டியலில் இணைந்தால் அது அந்த நாட்டுக்கு மிகப்பெரிய நிதி சிக்கலை ஏற்படுத்தும்.
இதனால் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதன வரவுகள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் பாகிஸ்தான் பொருளாதாரம் மேலும் ஆட்டம் காணும். எனவே அடுத்த மாதம் கூடும் எப்.ஏ.டி.எப். கூட்டத்தொடருக்கு முன்பு முக்கிய உறுப்பு நாடுகளுடன் பேசி பாகிஸ்தானை 'கிரே' பட்டியலில் இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், பொருளாதார ரீதியாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டாலர் தொகுப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச அமைப்புகளின் நிதியை பாகிஸ்தான் நாடு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தவறாக பயன்படுத்துவதாக சொல்லி அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுவும் பாகிஸ்தானுக்கு பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
மேற்கண்ட 2 சர்வதேச அமைப்புகளும் பாகிஸ்தானுக்கான நிதியை தடை செய்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தான் மீது நேரடி போராக அல்லாமல், அந்த நாட்டிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் புது வகையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக அமையும் என கூறப்படுகிறது.
- இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
- கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக அதிகமாகும்.
2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வருகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும்.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 2017 - 18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.59% ஆக இருந்தது.
கொரோனா நோய்த்தொற்றால் 2020 - 21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 0.07% என்ற மிக குறைவான அளவில் இருந்தது.
2024 இல் மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி 5.15,71,368 கோடி. 2025 இல் மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி 5.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது.
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சி இனியும் தொடருமேயானால், 2032 இல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கை தமிழ்நாடு எட்டும்
உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா 8.21%, ராஜஸ்தான் 7.82%, அரியானா 7.55% ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- நன்னிலம் பகுதியில் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.
- விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தை குறித்து பட்டய கல்வி பயில வேண்டும்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரம், விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட பகுதியாகும்.
நன்னிலம் பகுதியில், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள பகுதியாகும்.
இங்கு விவசாயத்தை பின்னணியாக கொண்ட பொருளாதாரம் தான் உள்ளது. சிறு தொழில் கூடங்களும் கிடையாது.
இந்நிலையில், விவசாயிகளின் பிள்ளைகள், தங்கள் குடும்பங்கள் மேற்கொண்டு வரும் விவசாயப் பணியினை, தாங்கள் தொடரும் நிலையில், அது குறித்த கல்விகளை கற்பதற்கு, நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும், கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கடினமாக உள்ளது.
விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தைக் குறித்து பட்டய கல்வி பயில்வதற்கு, வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில், விரிவாக்க கல்வி மையம் நன்னிலம் பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை, விவசாய பெருமக்களிடம் இருந்து வருகிறது.
எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், விவசாய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள், விவசாயக் கல்வியை கற்கும் வகையிலும், நன்னிலம் வட்டாரத்தில், வேளாண் கல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.
- மாதம் ரூ 20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரையை சேர்ந்தவர் சரவணன். அவரது மனைவி நாகலெட்சுமி (வயது 38). இவர்களுக்கு தீபஸ்ரீ என்ற மகள், சந்தோஷ் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்து ஒன்றில் சரவணன் இறந்து விட்டார். குடும்பத்திற்கான வாழ்வாதாரமாக இருந்த கணவர் சரவணன் இறந்தது நாகலெட்சுமியை நிலை குலைய செய்தது.
எதிர்காலம் என்னவாகும் என்ற துயரத்தில் தவித்தவரை கரை சேர்த்திருக்கிறது தஞ்சாவூர் ஓவியம். முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் செய்வதற்கு கற்றுக் கொண்டவருக்கு அதுவே வாழ்வாதாரமாகவும் மாறியது.
தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான, அழியும் நிலையில் இருக்க கூடிய பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியம் செய்வதை தன்னை போல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு முறையாக பயிற்சி தந்து கற்றுக் கொடுத்து வருகிறார். வருமானத்திற்கு வழியின்றி தவித்து நின்ற பல பெண்கள் இதன் மூலம் பலனடைந்து வருகின்றனர்.
இது குறித்து நாகலெட்சுமி கூறியதாவது :-
பத்து வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். அவர் இருந்த வரை வீட்டு வாசலை கூட நான் தாண்டியதில்லை. திடீரென ஒரு நாள் எங்களை தவிக்க வைத்து மறைந்து விட்டார். ஆதரவாக இருக்க எந்த உறவும் முன்வரவில்லை. அனைத்தையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளுக்காக வாழத் தொடங்கினேன். அப்போது தான் கும்பகோணத்தில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வரும் சக்கரபாணி ஆர்ட்ஸ் உரிமையாளரான பன்னீர்செல்வம் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தருகிறார். அவர் கம்பெனியில் என்னை போல் கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்தார்.
என் நிலையை அறிந்து கலை உலகிற்குள் அழைத்து சென்றார். எனக்கு முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தந்தார். சில ஆண்டுகள் அங்கு வேலை செய்து வந்த நான் பின்னர் வீட்டிலேயே தனியாக தஞ்சாவூர் ஓவியம் தயாரிக்க தொடங்கினேன். மாதம் ரூ 20,000 வரை வருமானம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது மகள் 10-ம் வகுப்பும், மகன் 8-வதும் படிக்கின்றனர்.
என்னைப் போல் கணவரை இழந்த, சரியான வாய்ப்பு கிடைக்காமல் வறுமையுடன் போராடி கொண்டிருப்ப வர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் பயிற்சி கொடுக்க தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அவர்கள் பலரும் இன்றைக்கு கை நிறைய சம்பாதிக்கின்றனர். சொந்தக்காலில் நிற்க நினைக்கும் பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் சிறந்த முறையில் கை கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடியின் கடும் உழைப்பால் பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் நோக்கி செல்கிறது என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
- பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.
மதுரை
மதுரை கே.கே.நகரில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. வடக்கு தொகுதி அணி பிரிவு நிர்வாகிகள் மாநாடு நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜ்குமார், இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வசித்தனர்.
மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் நலத்திட்டங்களை வீடு, வீடாக கொண்டு சேர்க்கிற பணியில் இந்தியா முழுவதும் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியின் கடும் உழைப் பால் பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக தலைவர்கள் பலருடன் பிரதமர் மோடி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு இளைஞர்கள் ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் தொடங்கு கின்ற வேளையில் பா.ஜ.க.வின் பலம் மேலும் அதிகரிக்கும். பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர்கள் ஜெயவேல், ஜோதிமாணிக் கம், பொதுச் செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், மகளிரணி தலைவி ஜீவா நகர் மீனா, இளைஞர் அணி நிர்வாகிகள் அருண்பாண்டி யன், முகேஷ்குமார், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாகிஸ்தானியர்கள் அடிப்படையில் பெருமை, வைராக்கியம் மற்றும் திறமை கொண்டவர்கள்
- உலகின் எந்த சக்தியாலும் நம் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. உணவு, மின்சாரம் மற்றும் எரிசக்தி உட்பட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அங்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது.
நிலைமையை சரி செய்யும் முயற்சியில் அந்நாடு பல உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது.
சமீபத்தில் உலக நாணய நிதியம் (IMF) விதித்திருக்கும் நிபந்தனைகள் அனைத்திற்கும் சம்மதித்து பல ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறது. தனது நட்பு நாடான சீனாவிடமிருந்து கூடுதலாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ($600 மில்லியன்) கடனையும் பாகிஸ்தான் பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தலைவர் சையத் அசிம் முனிர், சுயசார்புடைய நாடாக பாகிஸ்தான் மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கானேவால் மாதிரி விவசாயப் பண்ணை (Khanewal Model Agriculture Farm) திறப்பு விழாவில் பேசிய சையது கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானியர்கள் அடிப்படையில் பெருமை, வைராக்கியம் மற்றும் திறமை கொண்டவர்கள். தற்போது உள்ள பிச்சை எடுக்கும் எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். அல்லா, அனைத்து ஆசீர்வாதங்களையும் பாகிஸ்தானுக்கு அளித்துள்ளார். உலகின் எந்த சக்தியாலும் நம் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது.
ஒரு மாநிலம் ஒரு தாயைப் போன்றது. மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு, அன்பும் மரியாதையும் கொண்டது. பாதுகாப்பும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் இன்றியமையாதவை. பாகிஸ்தான் ராணுவம் தனது நாட்டிற்கு சேவை செய்வதில் பெருமிதம் கொள்கிறது.
ராணுவம் தனது பலத்தை மக்களிடமிருந்து பெறுவதுபோல் மக்களும் ராணுவத்தால் பலம் பெறுகின்றனர். தற்போது நிலவும் நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீளும் வரை ராணுவம் ஓயப்போவதில்லை. நாடு விவசாய புரட்சியை சந்திக்கும். சிறு விவசாயிகள் பயன்பெறவும், பசுமை முயற்சிகளின் நோக்கத்தை பரப்பவும் நவீன தரத்திற்கு ஏற்ற மாதிரி பண்ணைகள் நாடு முழுவதும் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை நிலவரப்படி, அந்நாடு சீனாவிற்கு திருப்பி தர வேண்டிய கடன் உட்பட, மொத்த கடன் ரூ.20 ஆயிரம் கோடி ($2.44 பில்லியன்) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பணவீக்கத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை
- 5.25 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமாக அதிகரிப்பு
அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு காலாண்டும் அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும். அமெரிக்காவின் பணவீக்கம் 3 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது. இதனை 2 சதவிகிதத்திற்கும் கீழே கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கி பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியின் அடிப்படை வட்டி புள்ளிகளை 0.25% புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2001-ம் ஆண்டிற்கு பிறகு, 22 வருடங்களாக எப்போதும் இல்லாத வகையில் இந்த வட்டி விகிதம் அமைந்திருக்கிறது.
கால் சதவிகித உயர்வு என்பது வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை 5.25%லிருந்து 5.5% வரை கொண்டு செல்லும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் (Jerome Powell) கூறியிருப்பதாவது:-
வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் மத்திய ஓபன் மார்கெட் கமிட்டி (Federal Open Market Committee) வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொருளாதார நிலைமையையும், விலைவாசியின் ஏற்ற இறக்கங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
பொருளாதார வளர்ச்சியின் வேகம் சற்று குறைந்திருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள அடிப்படை வலிமை காரணமாக, பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறு பவல் கூறியிருக்கிறார்.
வரும் செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது.
வட்டி விகித உயர்வின் விளைவாக வங்கி துறை பல பொருளாதார அழுத்தங்களை தாங்க வேண்டியுள்ளது. அவை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் வட்டி விகிதத்தை ஏற்றினால் பணப்புழக்கம் குறையலாம். அது வேலைவாய்ப்பின்மை உட்பட பல சிக்கலகளை உருவாக்கும்.
அதன் விளைவாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற பொருட்கள் விற்காமல், தேக்க நிலை உருவாகலாம்.
வட்டி விகிதங்கள் உயர்வதால் ஏற்படும் இதுபோன்ற தாக்கங்கள் பெரிய அளவில் இல்லாத வகையில் மிதமான விளைவுகளோடு அடுத்த நிலைக்கு பொருளாதாரத்தை கொண்டு செல்வதை சாஃப்ட் லேண்டிங் என்று கூறுவார்கள். இந்த வழிமுறையைத்தான் அமெரிக்க ரிசர்வ் வங்கி கையாள முயல்கிறது.
வரப்போகும் நாட்களில் இந்த வட்டி விகித உயர்வின் தாக்கம் அமெரிக்க பங்கு சந்தையிலும், தொடர்ச்சியாக இந்திய பங்கு சந்தையிலும் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை பொருளாதார நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.






