search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நன்னிலம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்
    X

    நன்னிலம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்

    • நன்னிலம் பகுதியில் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.
    • விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தை குறித்து பட்டய கல்வி பயில வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரம், விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட பகுதியாகும்.

    நன்னிலம் பகுதியில், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள பகுதியாகும்.

    இங்கு விவசாயத்தை பின்னணியாக கொண்ட பொருளாதாரம் தான் உள்ளது. சிறு தொழில் கூடங்களும் கிடையாது.

    இந்நிலையில், விவசாயிகளின் பிள்ளைகள், தங்கள் குடும்பங்கள் மேற்கொண்டு வரும் விவசாயப் பணியினை, தாங்கள் தொடரும் நிலையில், அது குறித்த கல்விகளை கற்பதற்கு, நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும், கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கடினமாக உள்ளது.

    விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தைக் குறித்து பட்டய கல்வி பயில்வதற்கு, வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில், விரிவாக்க கல்வி மையம் நன்னிலம் பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை, விவசாய பெருமக்களிடம் இருந்து வருகிறது.

    எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், விவசாய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள், விவசாயக் கல்வியை கற்கும் வகையிலும், நன்னிலம் வட்டாரத்தில், வேளாண் கல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×