search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poor people"

    • நலிவடைந்த மக்களுக்கு உடைகள் வழங்கப்படுவது வழக்கம்.
    • கிராமங்களில் வசிக்கும் 3700 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.

    இந்த ஆதீனத்தின் சார்பில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு ஆதீன கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த மக்களுக்கு உடைகள் வழங்கப்படுவது வழக்கம்.

    அவ்வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆதீனத்துக்கு உள்பட்ட திருவாவடுதுறை, திருவாலங்காடு, கரைகண்டம், துகிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் நலிவடைந்த 3700 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டது.

    இதனை, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கி தொடக்கி வைத்து அருளாசி கூறினார்.

    இதனை தொடர்ந்து ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட கட்டளை தம்பிரான்கள் கோயில் கண்காணிப்பாளர் சண்முகம், பொது மேலாளர் ராஜேந்திரன் மற்றும் ஆதீன நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    உடைகளை பெற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து சென்றனர்.

    • 2013 -ம் ஆண்டுக்கு முன்பு இருந்த விதிமுறைகள் படி நிபந்தனை இன்றி மின்இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
    • கவனக்குறைவாக பணி செய்யும் பொழுது ஏற்படும் மின் விபத்துகள் குறித்து காணொளி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் டவுன் கோடீஸ்வரன் நகரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் பாக்கியம், தென்காசி மாவட்ட தலைவர் அய்யனார், டவுன் கிளை சங்க தலைவர் ஜான் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன், கர்ணன், பொருளாளர்கள் தியாகராஜன், துணைத் தலைவர்கள் கண்ணன், வேலு, சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மீட்டர் கட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குதல், பழைய மின் இணைப்பின் பழுதடைந்த மீட்டரை மாற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு காலதாமதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் ஏழை- எளியவர்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க மறுக்கப்படுகிறது.

    எனவே 2013 -ம் ஆண்டுக்கு முன்பு இருந்த விதிமுறைகள் படி நிபந்தனை இன்றி மின்இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும். அரசின் மற்ற துறைகளை போல மின் உரிமம் வழங்கும் வாரியத்தில் ஆன்லைன் மூலம் மின் உரிமங்கள் புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை மண்டல மின் பாதுகாப்பு அதிகாரி, உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து , மின் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் புதிதாக வயரிங் செய்யும் போதும், பழைய வயரிங் மற்றும் மின் சாதனங்கள் மாற்றும் பொழுது பாதுகாப்புடன் பணி செய்வது பற்றியும், கவனக்குறைவாக பணி செய்யும் பொழுது ஏற்படும் மின் விபத்துகள் குறித்தும் காணொளி மூலம் விளக்கம் அளித்தார்கள்.

    மேலும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் பாதுகாப்பு சாதனம், அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்துவது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள் உதவி மின் பொறியாளர் பேட்டை பிரிவு சரவணன், பணியாளர்கள், மின் அமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    இதற்கான ஏற்பாடுகளை நெல்லை டவுன் கிளை சங்க தலைவர் ஜான்ராஜா, செயலாளர் செண்பகம், பொருளாளர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் ஜாகீர், மாவட்ட ஆலோசகர் முத்து மாரியப்பன், நிர்வாக குழு தலைவர் கணேசன் மற்றும் டவுன் கிளைச் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • குடிசை பகுதியில் உள்ள குடும்பங்களை கணக்கெடுத்து விவரங்கள் சேகரிப்பு.
    • வாழ தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்கள் கணக்கெடுப்பு.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளற்ற மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு தகுதியான குடும்பங்களின் விவரங்கள் சேகரிக்கப்ப டுகிறது.

    சமூக பொருளாதார கணக்கெடுப்பு, கலைஞா் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு போன்ற வற்றின் வழியே விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாது நிலைத்த தன்மையற்ற வீடு,வாழத் தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுப்பு செய்ய உள்ளது.

    அதன்படி திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி கருப்பூரில் வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையில் ஊராட்சி செயலர் முருகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் சிவகாம சுந்தரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் வகையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழகத்தில் முதல் மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.
    • அதன்படி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிப்பதக்கம்,பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    தஞ்சாவூர்:

    பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண் குழந்தைகள் நலனுக்காக தமிழக அரசு அமல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பொது மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் வகையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழகத்தில் முதல் மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல் இடத்தை கோவையும், 2-ம் இடத்தை தஞ்சாவூரும், 3-ம் இடத்தை கரூர் மாவட்டமும் பிடித்து சாதனை படைத்துள்ளன.

    இதற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.விழாவுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக பணியாற்றிய கோவை ,தஞ்சாவூர், கரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    அதன்படி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிப் பதக்கம் , பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    சாதனை படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை கடைக்கோடி வரை உள்ள மக்களுக்கு சென்று சேரும் வகையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் அரசின் திட்டங்கள் எளிதாக கிடைக்கின்றன என்று ஏழை மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, வீடு இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்ட நடவடிக்கை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு அரசின் நல திட்டங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செயல்படுத்தி வருகிறார். தற்போது பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பான பணிக்காக பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து மக்கள் கலெக்டராக விளங்கி வருகிறார். கலெக்டரின் நல்ல செயல்களால் தமிழக அளவில் தஞ்சாவூர் மாவட்டம் புகழ் பெற்று விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மேலும் மேலும் பெருமை சேர்த்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளார். #PiyushGoyal #congress #bjp

    கோவை:

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கோவையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்து உள்ளார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பியூஸ் கோயல் கூறியதாவது:-

    இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இந்த உதவிகளை காங்கிரஸ் பறித்து விட்டு ரூ.72 ஆயிரம் வழங்குமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். மக்கள் ஒருபோதும் மானியம் வழங்குவதை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்கப் பார்க்கிறது. இது இந்திய மக்களிடம் எடுபடாது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, ஆலோசனை கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசியதாவது:-

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் எந்த அளவுக்கான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். எளிமையான தலைவனால் தான் அனைத்து தரப்பு மக்களின் நிலைமையை உணர முடியும். பிரதமர் மோடி மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்ததால், தாய்மார்களின் கண்ணியத்தை காக்க கழிவறை கட்டும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் செயல்படுத்தினார். எல்லா வீடுகளுக்கும் மின்சாரம், ஆரோக்கியமான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பலன் அடைந்துள்ளனர். மத்திய அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுமானால் தமிழக வளர்ச்சி இரு மடங்காக உயரும் என்பதில் ஐயமில்லை.

    தீவிரவாதத்துக்கு எதிராக செயல்படக் கூடிய வலிமையான திறமையான தலைவர் தேவை. எதிரி நாட்டின் எல்லையை கடந்து தாக்கி பயங்கரவாதத்திற்கே பதிலடி கொடுத்த ஒப்பற்ற தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான். வேகமாக, வளமான, பொருளாதார வளம் பெற்ற நாடாக இந்த நாடு வளர்ந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பிரதமர் மோடியின் கரத்தை நாம் வலிமையாக்க வேண்டும்.

    அதற்கான மெகா கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளோம். 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவுவதோடு, நாம் நாற்பதும் நாமதே என வெற்றி வாகை சூட வேண்டும். இந்தியா சூப்பர் பவராக மாற மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PiyushGoyal #congress #bjp 

    ஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க தடை கோரிய வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ந்தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில், வறுமை கோட்டிற்குகீழ் உள்ள 60 லட்சம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் எனவும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

    மேலும் இந்த திட்டத்திற்காக ரூ.1,200 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த மாதம் 24-ந்தேதி (அதாவது நேற்று) தொடங்கும் இந்த திட்டம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    4 நாட்களில் உரிய பயனாளிகளைக் கண்டறிந்து இந்த திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரத்தை வழங்குவது என்பது சாத்தியமல்ல. மேலும் கஜா பாதிப்பு தமிழகம் முழுவதும் ஏற்படாத நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் கஜா புயல் பாதிப்பை காரணம் காட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த சூழ்நிலையில் வாக்காளர்களை கவரும் விதமாகவும், அவர்களின் கவனத்தை அ.தி.மு.க.வை நோக்கி திசை திருப்பும் விதமாகவும் இந்த அறிவிப்பு உள்ளது.

    நிதிநிலை அறிக்கையில், தமிழகம் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி கடனில் உள்ளது என்றும், இதற்கு ரூ.29 ஆயிரத்து 624 கோடி வட்டியாக செலுத்தப்பட்டு வருகிறது எனவும், அரசின் நிதிப்பற்றாகுறை ரூ.44 ஆயிரத்து 176 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் அறிவித்து வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பான கோர்ட்டு உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    எனவே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த சிறப்பு நிதி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. உண்மையான பயனாளிகளை கணக்கெடுப்பதில் சிக்கலும், முறைகேடுகளும் நடக்கும். எனவே கணக்கிடுவதில் உள்ள முரண்களைக் களைந்து தேர்தல் முடிந்த பின் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து சிறப்பு நிதியை வழங்க வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #MaduraiHC

    வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பின்பற்றாதவர்களிடம் இருந்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அபராதமாக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BankBalance #BanksMinimumBalance
    புதுடெல்லி:

    வங்கிகள் பொதுமக்களின் பணம் மற்றும் பொருட்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிலை மாறி, தற்போது அவை பொதுமக்களின் பணத்தை பல்வேறு சட்டரீதியான காரணம் கூறி பறித்து வருகிறது. மினிமம் பேலன்ஸ் பின்பற்றுவது, ஏ.டி.எம் பராமரிப்பு என கிடைக்கும் காரணங்களில் எல்லாம் பணம் எடுக்கப்படுகிறது.

    அதன்படி, தற்போது வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2017-18ம் ஆண்டில் சுமார் 4,989.55 கோடி ரூபாய் அபராதமாக பிடித்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் மிக அதிகமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2,433.87 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து இருக்கிறது. இதையடுத்து, தனியார் வங்கியான எச்.டி.எப்.சி ரூ.590.84 கோடியை அபராதமாக வசூலித்து உள்ளது.

    குறைந்தபட்ச இருப்புத் தொகையை பின்பற்ற முடியாதவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருக்கும் நிலையில், அபராதமாக பிடித்தம் செய்தது ஏழைகளின் அன்றாட சேமிப்பு பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், தொழிலதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் பல ஆயிரம் கோடி கடன் அளித்து, அதில் நஷ்டமடைந்து தற்போது அவற்றை ஈடு செய்ய ஏழைகளின் சேமிப்பில் வங்கிகள் கைவைத்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. #BankBalance #BanksMinimumBalance
    ×