குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி

குடிசை பகுதியில் உள்ள குடும்பங்களை கணக்கெடுத்து விவரங்கள் சேகரிப்பு.வாழ தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்கள் கணக்கெடுப்பு.
குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
Published on

நாகப்பட்டினம்:

தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளற்ற மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு தகுதியான குடும்பங்களின் விவரங்கள் சேகரிக்கப்ப டுகிறது.

சமூக பொருளாதார கணக்கெடுப்பு, கலைஞா் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு போன்ற வற்றின் வழியே விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாது நிலைத்த தன்மையற்ற வீடு,வாழத் தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுப்பு செய்ய உள்ளது.

அதன்படி திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி கருப்பூரில் வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையில் ஊராட்சி செயலர் முருகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் சிவகாம சுந்தரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com