என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு.. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விட மோடி ஆட்சியில் படு மோசம் - காங்கிரஸ்
    X

    இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு.. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விட மோடி ஆட்சியில் படு மோசம் - காங்கிரஸ்

    • இந்தியாவின் 1% செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வம் குவிந்துள்ளது
    • ஒரு குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.

    இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விட மோசமான நிலையை எட்டியுள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் 1% செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வம் குவிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    1922 முதல் 2023 வரையிலான இந்தியாவின் வருமானம் மற்றும் செல்வச் செழிப்பு குறித்த ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், "மோடியின் பில்லியனர் ராஜ் ஆட்சி, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை விட அதிக ஏற்றத்தாழ்வு கொண்டதாக உள்ளது.

    கடந்த பத்தாண்டுகளில் சாதாரண குடிமக்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் தேக்கமடைந்துள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.

    அரசு தனக்குச் சாதகமற்ற பொருளாதாரத் தரவுகளை மறைக்கிறது. 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாதது மற்றும் நுகர்வோர் செலவின ஆய்வுகளை வெளியிடாதது போன்றவை மிகப்பெரிய கொள்கை தோல்வி" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×