search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan's GDP"

    • இந்நிறுவனம் 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் முன்னணியில் உள்ளது
    • பாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் என ஐஎம்எஃப் மதிப்பிட்டுள்ளது

    1868ல், இந்தியாவில் ஜம்ஷேட்ஜி டாடா (Jamshedji N. Tata) என்பவர் தொடங்கிய நிறுவனம், டாடா குழுமம் (Tata Group).

    2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் டாடா குழுமத்திற்கு பல்வேறு துறைகளில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பல வர்த்தகங்கள் உள்ளன.

    சுதந்திர இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் உருவாகியிருந்தாலும், தங்களுக்கென ஒரு நற்பெயரையும் முன்னணி இடத்தையும் டாடா குழுமம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு, டாடா குழுமத்தின் பல நிறுவனங்கள், லாபகரமான வருவாயை ஈட்டின.

    தற்போது, டாடா குழுமம், சுமார் ரூ.31 லட்சம் கோடி ($365 பில்லியன்) சந்தை மூலதனத்தை வைத்துள்ளது.

    இது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (Gross Domestic Product) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) அளித்த மதிப்பீட்டின்படி பாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் எனும் அளவில் உள்ளது.


    மேலும் டாடா குழுமத்தின் ஒரு நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) எனும் முன்னணி மென்பொருள் நிறுவனம் மட்டுமே சந்தை மதிப்பில் ரூ.15 லட்சம் கோடி ($170 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பாதி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பங்கு சந்தையிலும், உலகளவிலும் டாடா குழுமத்திற்கு உள்ள வலுவான நிலையை இந்த ஒப்பீடு கோடிட்டு காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்படும் தொழிலாளர் நலன் மற்றும் பணியிட மகிழ்ச்சி குறித்த ஆய்வுகளில் டாடா குழும நிறுவனங்களின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றது.


    2017லிருந்து டாடா குழுமத்தின் தலைவர் (Chairman) பொறுப்பில் உள்ள என். சந்திரசேகரன் (60), தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் நாமக்கல் மாவட்ட மோகனூர் தாலுகா அரசு பள்ளியில் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • 2024ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.5 சதவீதம் குறைய உள்ளதாக எச்சரித்தது ஐஎம்எஃப்
    • அத்தியாவசிய பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

    கடந்த ஜூலை மாதம், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, வாஷிங்டனை மையமாக கொண்ட ஐஎம்எஃப் (IMF) எனும் சர்வதேச நிதி நாணயம், $1.2 பில்லியன் வழங்கியிருந்தது.

    பாகிஸ்தானின் பொருளாதார நிலையை ஆய்வு செய்த ஐஎம்எஃப், தற்போது $700 மில்லியன் நிதியுதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த டிசம்பர் மாதம், இது குறித்து முடிவெடுக்கவிருந்த அதன் செயற்குழு சந்திப்பு, தள்ளி போடப்பட்டது. தொடர்ந்து, வரும் ஜனவரி 11 அன்று இது குறித்து ஆலோசிக்க உள்ளது.

    பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இவ்வருடம் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஆணையம், அதிகரிக்கும் விலைவாசியினால் பொருளாதாரம் நிலையற்றதன்மையை அடைந்திருப்பதாக எச்சரித்துள்ளது.

    கடந்த 2023 டிசம்பர் 22 காலகட்டத்தில், அந்நாட்டின் மத்திய வங்கியில் டாலர் கையிருப்பு $853 மில்லியன் அளவிற்கு உயர்ந்தது. இது ஐஎம்எஃப் விதித்திருந்த இலக்கை விட பாகிஸ்தான் கரன்சியில் ரூ.43 பில்லியன் அதிகம்.

    கடந்த நவம்பர் மாதம், அந்நாட்டு நிதியமைச்சர், "மிக விரைவாக நிதியுதவி தேவைப்படுகிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டே நிதியுதவி வழங்கினாலும், அதற்கு ஈடாக பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இவற்றை கடைபிடித்தாக வேண்டிய கட்டாயத்தால் பாகிஸ்தான் பல இலவசங்களையும், மானியங்களையும் நிறுத்தியுள்ளது.

    இதன் விளைவாக பால், உணவு, பெட்ரோல், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வரலாறு காணாத உயர்வு அங்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அங்கு சில வாரங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இவையனைத்தும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×