search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "market capitalization"

    • இந்நிறுவனம் 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் முன்னணியில் உள்ளது
    • பாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் என ஐஎம்எஃப் மதிப்பிட்டுள்ளது

    1868ல், இந்தியாவில் ஜம்ஷேட்ஜி டாடா (Jamshedji N. Tata) என்பவர் தொடங்கிய நிறுவனம், டாடா குழுமம் (Tata Group).

    2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் டாடா குழுமத்திற்கு பல்வேறு துறைகளில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பல வர்த்தகங்கள் உள்ளன.

    சுதந்திர இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் உருவாகியிருந்தாலும், தங்களுக்கென ஒரு நற்பெயரையும் முன்னணி இடத்தையும் டாடா குழுமம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு, டாடா குழுமத்தின் பல நிறுவனங்கள், லாபகரமான வருவாயை ஈட்டின.

    தற்போது, டாடா குழுமம், சுமார் ரூ.31 லட்சம் கோடி ($365 பில்லியன்) சந்தை மூலதனத்தை வைத்துள்ளது.

    இது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (Gross Domestic Product) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) அளித்த மதிப்பீட்டின்படி பாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் எனும் அளவில் உள்ளது.


    மேலும் டாடா குழுமத்தின் ஒரு நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) எனும் முன்னணி மென்பொருள் நிறுவனம் மட்டுமே சந்தை மதிப்பில் ரூ.15 லட்சம் கோடி ($170 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பாதி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பங்கு சந்தையிலும், உலகளவிலும் டாடா குழுமத்திற்கு உள்ள வலுவான நிலையை இந்த ஒப்பீடு கோடிட்டு காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்படும் தொழிலாளர் நலன் மற்றும் பணியிட மகிழ்ச்சி குறித்த ஆய்வுகளில் டாடா குழும நிறுவனங்களின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றது.


    2017லிருந்து டாடா குழுமத்தின் தலைவர் (Chairman) பொறுப்பில் உள்ள என். சந்திரசேகரன் (60), தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் நாமக்கல் மாவட்ட மோகனூர் தாலுகா அரசு பள்ளியில் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • 66 வயதான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்
    • 2024ல் இருந்து பங்கின் மதிப்பு சந்தையில் 14 சதவீதம் அதிகரித்தது

    இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries).

    இந்தியாவின் முன்னணி கோடீசுவரரும் மறைந்த பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானியின் மூத்த மகனுமான, 66 வயதான முகேஷ் அம்பானியை தலைவராகவும் செயல் இயக்குனராகவும் கொண்டு இயங்கி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எரிசக்தி, இயற்கை எரிவாயு, சில்லறை வணிகம், தகவல் தொடர்பு, ஊடகம், ஆடை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால் பதித்து பெரும் வருவாய் ஈட்டி வருகிறது.

    இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களில் சந்தை மூலதனத்தில் பெரும் நிதியை ரிலையன்ஸ் நிறுவனம் ஈட்டி வருகிறது.

    இந்நிலையில், இன்றைய பங்கு வர்த்தகத்தில், காலை 11.28 மணியளவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள், பங்கு ஒன்றிற்கு ரூ.2947.95 எனும் மதிப்பில் வர்த்தகமானது.

    இதை தொடர்ந்து இந்திய பங்கு சந்தை வரலாற்றில் சந்தை மூலதனத்தில் (market capitalization) ரூ.20 லட்சம் கோடி ஈட்டியுள்ள முதல் நிறுவனம் எனும் பெருமையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் பெற்றது.

    இதனால், ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பங்கு சந்தை வர்த்தகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    இவ்வருட தொடக்கத்தில் இருந்தே ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு 14 சதவீதம் அதிகரித்தது.

    மிக துல்லியமாகவும், அதிக துணிச்சலுடனும் ரிலையன்ஸ் பல்வேறு மாறுபட்ட துறைகளில் ஈடுபட்டு, வெற்றிகரமாக நிர்வகித்து வருவாய் ஈட்டுவதால், சந்தை ஏற்ற இறக்கங்களை கடந்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தொடர்ந்து மக்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

    இதன் காரணமாக இந்நிறுவனம், ரூ.20 லட்சம் கோடி மூலதனத்தை ஈட்ட முடிந்தது.

    • சந்தையில் முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்தது
    • 5 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் தருவதில் முன்னிலை வகித்தன

    கடந்த 2023ல் இந்திய பங்கு சந்தை சுமார் 20 சதவீதம் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தந்தது.

    சந்தை மூலதன மதிப்பின்படி அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளின் பங்கு சந்தைக்கு அடுத்த இடத்தில் இந்தியா உருவெடுத்தது.

    மியூச்சுவல் ஃபண்டுகளின் பெருக்கம், அயல்நாட்டு முதலீடு அதிகரிப்பு, பொருளாதார நிலையில் வளர்ச்சி, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

    சந்தை முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடி எனும் அளவில் அதிகரித்தது.

    2023ல் சென்செக்ஸ் குறியீட்டில் 5 பங்குகள் மிக அதிக லாபம் ஈட்டி தந்தன.

    பெருமளவு உயர்வை கண்ட பங்குகள்:

    1. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) - 102 சதவீதம்

    2. என்டிபிசி லிமிடெட் (NTPC) - 96 சதவீதம்

    3. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) - 69 சதவீதம்

    4. பவர் க்ரிட் கார்ப்பரேஷன் (Power Grid) - 55 சதவீதம்

    5. அல்ட்ரா டெக் சிமென்ட் (Ultra Tech Cement) - 51 சதவீதம்

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    ×