என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Indian stock market"
- இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இதுவரை 500 பேர் உயிரிழந்துள்ளனர்
- இரு தரப்பிற்கும் பல உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன
கடந்த சனிக்கிழமை காலை, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசி, தரை வழியாகவும் மற்றும் நீர் வழியாகவும் பல வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தள்ளதாக கூறி இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது வரை இரு தரப்பிலும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த போரின் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் இன்று எதிரொலித்தது.
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் இந்தியாவின் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 500 புள்ளிகள் வரை சரிந்து 65,434 எனும் அளவை எட்டியது. பிறகு சற்று மேலெழுந்து 65,769 அளவை எட்டியுள்ளது.
தற்போது 65,576 எனும் அளவை தொட்ட நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது.
தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty) 142 புள்ளிகள் சரிந்து 19,510 எனும் அளவை எட்டியது. தற்போது 19,529 எனும் அளவை தொட்ட நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா மற்றும் கனடா உட்பட பல நாடுகள் இருந்து வருகின்ற நிலையில், ஈரான், கத்தார் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக 2020 மற்றும் 2021 வருடங்களில் சரிந்திருந்த உலக பொருளாதாரம் பிறகு மெல்ல மீண்டு எழ ஆரம்பித்த நிலையில் ரஷிய உக்ரைன் போரினால் மீண்டும் சற்று நலிவடைய ஆரம்பித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீன போரில் பல நாடுகளும் பங்கு பெற ஆரம்பித்தால் உலக பொருளாதாரம் மீண்டும் சரிவை நோக்கி செல்லும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- தேசிய விடுமுறை இல்லாத தினங்களை தவிர வாரம் 5 நாட்கள் பங்குச்சந்தை செயல்படும்
- நிஃப்டி வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது
இந்திய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதும் விற்பதும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் நடைபெறும்.
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தையின் இரண்டு குறியீட்டு எண்களில் ஒன்றான தேசிய பங்கு சந்தை குறியீட்டு நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த உயர்வு, நிஃப்டி வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.
விண்வெளியில் உலகயே திரும்பி பார்க்க வைத்த சாதனை, ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி, குறைந்து வரும் காய்கறிகளின் விலை, ஒரு வருடமாக அதிகரிக்காமல் இருக்கும் பெட்ரோல் விலை மற்றும் குறைய தொடங்கி இருக்கும் விலைவாசி ஆகிய காரணிகளால் இந்தியர்களின் "வாங்கும் சக்தி" உயரக்கூடும் என பெருமுதலீட்டாளர்கள் நம்புவதால் இந்த ஏற்றம் உண்டாகி இருப்பதாக பங்குச்சந்தை ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய தொழில்துறையிலும், இந்திய பங்குச்சந்தையிலும் முக்கிய நிலையில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஆகியவற்றை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனாலும் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என சில ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
காலை தொடக்க நிலையிலிருந்து சந்தை நிறைவடையும் நேரத்திற்குள் நிஃப்டி 188 புள்ளிகள் உயர்ந்து 20 ஆயிரத்தை தொட்டு 19,996 எனும் அளவில் முடிவடைந்தது.
#WATCH | Mumbai, Maharashtra | Celebrations at National Stock Exchange (NSE) as Nifty50 touches 20,000 mark for the first-time ever. pic.twitter.com/bWacsEQOEf
— ANI (@ANI) September 11, 2023
கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குச்சந்தை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
