என் மலர்
நீங்கள் தேடியது "World Health Organization"
- நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை ராணுவ படையினர் கொடுரமாகக் கொன்றனர்
- கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 20 வரை எல்-ஃபாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டனர்.
சூடானில் மகப்பேறு மருத்துவமனையில் 460 பேரை அந்நாட்டு துணை ராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேறு மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை ராணுவ படையினர் கொடுரமாகக் கொன்றனர் என்று உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.
நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுமார் 35,000 பேர் எல்-ஃபாஷர் நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 20 வரை எல்-பாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியிருந்த நிலையில் தற்போதைய படுகொலைகள் நடந்துள்ளன.
- WHO பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிக சர்க்கரை இருந்தது.
- இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் மறைந்துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை பானங்களை, ORS எனப்படும் oral rehydration solutions என்று ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் விற்று வந்தன.
இந்த பிரச்சனை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த 8 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார்.
இவரது தொடர் முயற்சிகளின் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஓஆர்எஸும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதைப் பூர்த்தி செய்யாதவை 'ORS' என்று விளம்பரப்படுத்தி விற்கப்படக்கூடாது என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது.
இதை வரவேற்று நாம் ஜெயித்துவிட்டோம் என சிவரஞ்சனி நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ORS என்று சந்தைப்படுத்தப்பட்ட பல பானங்களில் WHO பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிக சர்க்கரை இருந்தது. இந்த அதிகப்படியான சர்க்கரை, குறிப்பாகக் குழந்தைகளிடையே, வயிற்றுப்போக்கு மற்றும் அதன் சிக்கல்களை மோசமாக்கக்கூடும்.
இதனால் ORS என்று தவறாகக் கூறி விற்கப்பட்ட பாணங்களால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில் தற்போது FSSAI உத்தரவு இதை தடுத்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், பெற்றோரோ அல்லது நோயாளியோ 'ORS' என்று லேபிளிடப்பட்ட ஒரு பொருளை வாங்கும்போது, உலகளாவிய சுகாதாரத் தரங்களால் வரையறுக்கப்பட்ட சரியான, உயிர் காக்கும் ஃபார்முலாவை பெறுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
- பல ஆப்பிரிக்க நாடுகளுக்கான மருந்துகளில் 90% இந்தியாவிலிருந்து செல்கின்றன.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே இரசாயனம் ரெஸ்பிஃப்ரெஷ் மற்றும் ரீலைஃப் சிரப்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருந்தை அடர்த்தியானதாக மாற்றவும் இனிப்புச் சுவைக்காகவும் பயன்படுத்தக் கூடியதாகும்.
தற்போது கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மத்திய பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருந்து உற்பத்தியில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்து வருகிறது.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பொதுவான மருந்துகளில் 40% இந்தியாவிலிருந்து செல்கிறது. மேலும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கான மருந்துகளில் 90% இந்தியாவிலிருந்து செல்கின்றன.
இதனிடையே, இந்தியாவில் இருந்து நச்சுத்தன்மையுள்ள இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கோல்ட்ரிஃப் மருந்து வெளிநாடுகளுக்கு எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டு உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்தியாவில் இவ்வகை மருந்துகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை ஒருங்குமுறைபடுத்துவதில் மிகுந்த இடைவெளி நீடிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது.
- பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும்.
- மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம்.
பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும். மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக கவன சிதறல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டை உலக சுகாதார மையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள விளக்க அறிக்கயைில் "அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை" எனத் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பான சில மருந்துகளில் பாராசிட்டமால் முக்கியமானது. காய்ச்சல் மற்றும் வலி குறைக்க இது அவசியம். உலகளவில் கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 50% பேர் பாராசிட்டமால் பயன்படுத்துவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பல நாடுகளில் இது பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். அதனால், டாக்டர்கள் பாராசிட்டமாலை பாதுகாப்பான தேர்வாகக் கருதுகின்றனர்.
- இந்த மையத்தை அமைப்பதில் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது.
- இந்த மையத்தை அமைக்க இந்தியா சுமார் ரூ.2,000 கோடி நிதி வழங்குகிறது.
பாலி :
இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதனோம், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகநாத் ஆகியோர் கூட்டாக அடிக்கல் நாட்டினர்.
இந்த மையத்தை அமைக்க இந்தியா 250 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,000 கோடி) நிதி வழங்குகிறது.
இந்த மையத்தை அமைப்பதில் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது. இதற்காக 'ஜி-20' உச்சி மாநாட்டில் பங்கேற்க பாலி வந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையொட்டி டுவிட்டரில் அவர் ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பிரதமர் மோடி அவர்களே, உலக பாரம்பரிய மருத்துவ மையத்தை கட்டியெழுப்புவதில் உலக சுகாதார நிறுவனத்துடனான உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. நாம் ஒன்றுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
'ஜி-20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
- கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 நாள் போதும்.
ஜெனீவா :
உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு ஆன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது.
- 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.
- மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
ஜெனீவா :
குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது.
இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.
அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இந்த மருந்து குடித்து உஸ்பெகிஸ்தானில் 8 குழந்தைகள் இறந்துள்ளன.
இந்த நிலையில் தரம் குறைந்த இருமல் மருந்துகளை தயாரித்து அளித்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.
- உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகள் பலரும் (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள்.
புதுடெல்லி :
நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் (ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு) பிரான்செஸ்கோ பிரான்கா கூறியதாவது:-
சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு இல்லாத பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துவது, நீண்ட காலத்துக்கு உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவாது. மாற்று பொருளாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் இன்றியமையாத உணவுப்பொருட்கள் ஆகிவிடாது. அவற்றில் ஊட்டச்சத்தும் இல்லை. மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும். எனவே பழங்கள், இனிப்பு இல்லாத உணவுகள், பானங்கள் போன்ற இயற்கையாக சர்க்கரையுடன் கூடிய உணவை சாப்பிடுவது உள்ளிட்ட பிற வழிகளை பயன்படுத்தி சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சர்வதேச நீரிழிவு நோய் தடுப்பு கழகம் நடத்திய ஆய்வின் மூலம் 533 மில்லியன் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
- சர்க்கரை வியாதியின் அடுத்த கட்டம் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கும்.
சென்னை:
சர்க்கரை வியாதி என்பது உலகம் முழுக்க பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை பொறுத்தவரை சர்க்கரை நோய் வியாதி டைப்-1, டைப்-2 என்று இரண்டு வகை உள்ளன.
சர்க்கரை நோய் வருவதற்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டாலும் முக்கியமான காரணம் புகைப்பிடிப்பது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் உடலின் வழக்கமான செயல்பாட்டை புகைப்பிடிப்பது மாற்றி அமைத்துவிடும். அதாவது இன்சுலின் சுரப்பதை கட்டுப்படுத்தும்.
இதனால் டைப்-2 சர்க்கரை வியாதி உடலில் ஏற்கனவே இருந்தால் அது அதிகரிக்கும். இல்லை என்றால் வருவதற்கு ஆயத்தமாகும். சர்க்கரை வியாதி டைப்-2 என்பது பரவலாக இருப்பது தான். இது நாள்பட்ட வியாதி ஆகும். இதை உரிய மருந்துகள் மூலம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது.
ஏனெனில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். அதேபோல் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டாலும் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு எப்படி அது ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகுமோ அதேபோல் புகைப்பிடிப்பவர்களுக்கும் காயம் ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகும்.
சர்வதேச நீரிழிவு நோய் தடுப்பு கழகம் நடத்திய ஆய்வின் மூலம் 533 மில்லியன் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சர்க்கரை வியாதியால் உயிரிழப்புகளும் நேரிடுகிறது. காரணம் சர்க்கரை வியாதியின் அடுத்த கட்டம் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கும். உயிரிழப்புகளுக்கு சர்க்கரை வியாதியும் ஒரு காரணமாகி உள்ளது.
புகை பிடிப்பதை கைவிட்டால் 40 சதவீதம் பேர் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். எனவே புகைப்பிடிப்பதை தவிர்க்கும் படி மக்களிடம் விழிப்புணர்வை அதிக அளவு ஏற்படுத்தி வருகிறார்கள்.
புகைப்பிடிப்பதை குறைப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. புகைப்பிடிப்பதை குறைப்பதன் மூலம் இதய நோய், சிறுநீரக செயலிழப்பு மட்டுமின்றி சர்க்கரை வியாதி வருவதையும் தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 13 கோடி பேர் சர்க்கரை நோய் வரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களாகவும் கண்டறியப்பட்டு உள்ளார்கள். கேரளா, புதுவை, பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவு இருக்கிறது. பொதுவாகவே இந்தியாவில் தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் அதிலும் நகர வாழ்க்கை அதிகமாக இருக்கும் இடங்களில் சர்க்கரை வியாதி அதிக அளவில் காணப்படுகிறது.
- காசாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
- இரு தரப்பினரும் போரை கைவிட வேண்டும் என்றார் டெட்ரோஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் வசம் வந்து விட்டது. பாலஸ்தீன பொதுமக்களுக்கு மருந்து, உணவு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
இந்நிலையில், காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஒன்றை உறுதியாக கூற விரும்புகிறேன். ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் 1200 பேர் இறந்ததையும், 200 பேருக்கு மேற்பட்டவர்களை பணய கைதிகளாக கொண்டு சென்றதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
ஆனால், இஸ்ரேலின் பதில் தாக்குதலினால் பல லட்சம் பொதுமக்கள் காசாவில் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்து விட்டன. சுத்தமான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு கீழேயே புதைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்த செயலையும் நியாயப்படுத்த முடியாது.
இனி வெறும் பேச்சு வார்த்தைகளோ, தீர்மானங்கள் போடுவதோ போதாது. காசா மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இரு தரப்புமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.
ஐ.நா. அமைப்பு உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
- மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ஜெனிவா:
மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறியதாவது:-
ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக உள்ளது. வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள்தொகைக்கு வழிவகுக்கும். மதுபானங்கள் மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும். மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
80 லட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர். மதுபானங்கள், சர்க்கரை-இனிப்பு பானங்கள் மீதான வரியை அமல்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும். இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும். ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது. மதுபான விஷயத்தில், வன்முறை மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்கவும் வரி உதவுகிறது. மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
- அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது.
- உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது.
உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தொடர் காய்ச்சல். ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதனையடுத்து, மக்களை காக்க பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது. இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது.






